Flash News

Friends Tamil Chat

Search This Blog

Thursday 27 February 2014

சுட்டிகளும் சுட்டி டிவியும்

குழந்தைகள் கார்ட்டூன் பார்ப்பது சரியா?

"உனக்கு ஏன் கார்ட்டூன் பிடிக்கும்?"
இந்தக் கட்டுரையை எழுதும் முன் என் மகளிடமும் அவளது தோழிகளிடமும் நான் கேட்ட கேள்வி இது.
பெரும்பாலான குழந்தைகள் பட்டியலிட்டவை... கார்ட்டூன் காமெடியாக இருக்கும், விதவிதமான கேரக்டர்கள் வரும், எப்போதும் நிறைய ஃபிரெண்ட்ஸ் இருப்பாங்க, கார்ட்டூன் முடிவில் நீதி (Moral) சொல்வாங்க...
இவற்றை சொல்லும்போதே குழந்தைகளிடம் அவ்வளவு பரவசம். அந்தப் பட்டாம்பூச்சித்தனம் அவர்களுக்கே உரித்த அடையாளம் - ரசனை.
பிறந்த 6 மாதத்தில், ஒரு குழந்தை கண் முன் நிழலாடும் கார்ட்டூன் அதே குழந்தை மூன்று வயதை எட்டும்போது அதை முழுவதும் ஆக்கிரமித்து விடுகிறது என்கிறது ஆய்வுக் குறிப்பு ஒன்று.
குழந்தைகள் எப்போதும் திறந்த மனதுடன் இருப்பார்கள். இது உளவியல் உண்மை. அதனாலேயே குழந்தைப் பருவம் ஒரு மனிதனை ஆக்குவதில் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது.
இங்கே நிற்காதே, இதை செய்யாதே, அங்கே விளையாடதே, இப்படித்தான் இருக்க வேண்டும்... இத்தகைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து கொண்டே இருக்க குழந்தைகள் விரும்பவதில்லை. மாறாக, அவர்கள் தாங்கள் பார்ப்பதை பிரதிபலிக்க விரும்புகிறார்கள், பிடித்ததை செய்து பார்க்க தயாராக இருக்கிறார்கள். அவர்களுக்கு கற்றல் அவ்வளவு ருசிகரமானது.
எனவே, கார்ட்டூன் படங்களில் பார்ப்பவற்றை நடைமுறைக்கு புறம்பானது என உணராமல் அவற்றை செய்து பார்க்க முயல்கின்றனர். பல நேரங்களில் அது விஷப் பரீட்சையாக முடிகிறது.
இருக்கட்டும். கற்றலில் கார்ட்டூனின் பங்கு என்ன என கேட்கிறீர்களா? நகர வாழ்க்கை பரபரப்பில் நமக்கு சற்று ஓய்வு தேவைப்படும் போது நாம் உடனே குழந்தைகளிடம் சொல்வது, 'தொந்தரவு செய்யாமல் கொஞ்ச நேரம் கார்ட்டூன் பாரு' என்பது தான்.
குழந்தைகள் தனியாக, சுதந்ததிரமாக தெருவில் விளையாட பாதுகாப்பான சூழல் இல்லை என்ற மற்றொரு சமூக அவலத்தின் அடையாளம் அது. அதை பற்றி இங்கு பேச வேண்டாம்.
அப்படி குழந்தைகளை கார்ட்டூன் பார்க்கச் சொல்லும் நாம் அவர்கள் எந்த மாதிரியான கார்ட்டூனை பார்க்கிறார்கள் என கவனிப்பதில்லை.
ஒரு பூனை, எலியை அடித்து துவம்சம் செய்வது, பதிலுக்கு எலி திட்டம் தீட்டி பூனை தலை வீங்கும் அளவுக்கு அடிப்பதும், பின்னணி இசையுடன் பரபரப்பாக, கலகலப்பாக, கலர்ஃபுல்லாக இருக்கலாம் அதை பார்க்கும் குழந்தைக்கு, ஆனால் அதில் ஒரு 'ஏ' சர்ட்டிபிகேட் படத்தைவிட அதிக அளவில் வன்முறை இருப்பதை நாம் உணர்ந்திருக்கோமா?

சூழ்ச்சி செய்து, தனது வேலைகளை மற்றவரை வைத்து முடித்துக்கொண்டு ஹீரோயிஸம் செய்யும் ஒரு குட்டிப் பையன், அதை பார்க்கும் குழந்தைக்கு பொய் சொல்லுதல், வேலையை தள்ளிப்போடுதல் ஆகியவற்றை கற்றுத் தருகிறான் என்பதை தெரிந்து கொண்டிருக்கிறோமா?
ஒரு ஒல்லி பிச்சான் பெண்ணுக்காக இரண்டு பேர் போட்டி போட்டு, சாகசங்கள் செய்வதும். அவர்களில் யார் அதிகம் சாகசம் செய்கிறார்களோ, அவர்களோடு அந்தப் பெண் டூயட் பாடுவதும், எந்த மாதிரியான கருத்தை குழந்தைகள் மனதில் விதைக்கும் என ஊகிக்க முயற்சி செய்திருக்கோமா?
இன்னும் பல ஹீரோயிஸம்களும், தாதாயிஸம்களும் சினிமாவுக்கு நிகராக கார்ட்டூன் ரூபத்தில் குழந்தைகள் மனதில் பதிகின்றன. பஞ்ச் டயலாக்குகளும், சில நேரங்களில் கெட்ட வார்த்தைகளும் கூட கார்ட்டூன் பொம்மை பேசுவதால் குழந்தைக்கு அது தனக்கான வார்த்தை என்று அர்த்தப்படுகிறது.

ஒரு நிமிடம்... உடனே, கார்ட்டூன் பார்ப்பது தவறு, குற்றம் என உங்கள் குழந்தைக்கு கட்டுப்பாடு விதிக்காதீர்கள். குழந்தைகள் கார்ட்டூன் பார்ப்பதில் தவறில்லை. அது அவர்களது பக்கவாட்டுச் சிந்தனைகளை தூண்டும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஆனால் என்ன மாதிரியான கார்ட்டூன் அவை என்பது தான் முக்கியம். குழந்தைகள் பார்க்க வேண்டிய கார்ட்டூன் இவை தான் என்பதை பெற்றோர்கள் தணிக்கை செய்வது நலம். பாப்புலர் கார்ட்டூனை விட இது ஏன் சிறந்தது என்பதை அவர்களிடம் பேசி புரிய வைக்கலாம். சிறிது காலம் அவர்களுக்கு அது பழக்கப்படும் வரை அவர்களுடன் நாமும் ஒன்றாக அமர்ந்து அந்த கார்ட்டூனை பார்க்கலாம். அவற்றில் வரும் கதாபாத்திரங்கள் குறித்து ஆலோசிக்கலாம்.
கார்ட்டூன் பார்த்து உலக கலாசாரத்திற்கு ஒரு சிறு அறிமுகமும் குழந்தை பெறலாம், டப்பிங் கார்ட்டூன்களில் மொழிபெயர்ப்பு தரமாக செய்யப்படும் பட்சத்தில் தமிழ் மொழியும் கற்றுக் கொள்ளலாம்.
இந்த இரண்டுக்குமே ஒரு சிறு உதாரணத்தை பகிர்ந்து கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். ஒரு தொலைக்காட்சி சேனலில் வெளிநாட்டு இனிப்பு வகையை ஒருவர் செய்து கொண்டிருந்தார். எதேச்சையாக அதை ஏரிட்டுப் பார்த்த குழந்தை அம்மா இது 'ரைஸ் கேக்', (Japanese Snack) ஜேப்பனீஸ் ஸ்நாக் என்றது. அது உண்மைதான். உணவின் பெயர் கீழே ஸ்க்ரால் ஆகிக் கொண்டிருந்தது. எப்படித் தெரியும் என கேட்க, இதை நான் கார்ட்டூனில் பார்த்திருக்கிறேன் என்று குழந்தை சொன்னது.

இப்போது தான் பள்ளிக்கூடத்தை எட்டிப் பார்க்கத் துவங்கியுள்ள நண்பரின் குழந்தை ஒன்று, தந்தை ஏதோ சொல்ல... அப்பா நான் அமைதியாகத் தானே இருக்கிறேன் என தெளிவாக கேட்டுள்ளது. பொதுவாக நம்மூர் சிறு குழந்தைகள் சும்மா தான் இருக்கேன் என்று வழக்கு தமிழில் தான் சொல்வார்கள். ஆனால், ஒரு கார்ட்டூனில் இருந்தே அந்தக் குழந்தையும் அப்படி தெளிவாக தமிழ் பேச கற்றுக் கொண்டிருப்பதை குழந்தை பார்க்கும் கார்ட்டூனை கவனித்த தந்தை உணர்ந்துள்ளார்.
இவை அவ்வளவு பெரிய விஷயமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் வன்முறையை கற்றுக் கொள்வதை விட சின்னச் சின்ன நல்ல விஷயங்களை கற்பது நன்றல்லவா?
இப்படி பெற்றோர் உதவியுடன் அர்த்தமுள்ள கார்ட்டூன்களை பார்த்த ஒரு குழந்தை அந்த கார்ட்டூனில் சொல்லப்படும் நீதி தனக்கு ஈசாப் கதைகளை நினைவூட்டுவதாக தெரிவித்தது.
இது கற்றலினால் விளைந்த பயனன்றோ!
ஒரு வாசகத்தை விட, ஒரு காட்சி குழந்தையின் மனதில் ஏற்படுத்தும் தாக்கம் சக்தி வாய்ந்தது. பள்ளிக்கூடம் செல்லும் முன்னரே கார்ட்டூன் பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள் குழந்தைகள். நாளடைவில் அது அவர்களது நடவடிக்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தச் செய்யும் என்பது உறுதிப்படுத்தப்பட்ட உண்மை. இது குழந்தைகள் ஏறிச் செல்லும் படிக்கட்டின் முதல் படி. எனவே தெரிந்தெடுத்த கார்ட்டூனை குறிப்பிட்ட நேரம் குழந்தைகள் பார்ப்பது நலமே என நம்புகிறேன்.
மேலும் படிக்க http://facebook.com/FriendsTamilNanban
Thanks
For more health tips    : http://NanbanTamil.blogspot.com

குழந்தைகளைப் பேச வைக்கும் சில சிறப்பான வழிகள் - Best Ways To Get Your Child To Talk

குழந்தைகளைப் பேச வைக்கும் சில சிறப்பான வழிகள் - Best Ways To Get Your Child To Talk

'குழல் இனிது யாழ் இனிது என்பார் மக்கள் தம் மழலைச் சொல் கேளா தவர்' என்றார் வள்ளுவர். வள்ளுவனின் வார்த்தைகளுக்கேற்ப, உங்கள் குழந்தைகள் மழழை பேச்சில் மயங்கி இருக்கும் நீங்கள் அவர்கள் எப்போது பேசுவார்கள் என்று நிச்சயம் காத்துக் கொண்டு தான் இருப்பீர்கள். அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தையின் வளரும் பருவத்திற்கு ஏற்ப வளர்ச்சிகளை அவர்கள் பெறுகின்றனரா என்று கவனித்துக் கொண்டு தான் இருப்பார்கள்.

சில குழந்தைகள் விரைவாக பேசி விடுவார்கள். அவர்களுக்கு தங்கள் குழந்தை, மழழை மொழியில் அழகாக பேசுவதை கேட்கும் போது அவர்களுக்கு கிடைக்கும் ஆனந்தத்திற்கு அளவு கிடையாது. ஆனால் சிலர் அந்த குறிப்பிட்ட காலத்தில் பேசுவதில்லை. இவர்கள் மற்ற குழந்தைகளை காட்டிலும் சிறிது நாட்கள் கழித்து தான் பேசுவார்கள்.

இந்த சமயத்தில் தான் நமது குழந்தையை எப்படியாவது பேச வைக்க வேண்டும் என்று எண்ணுவீர்கள். அதுமட்டுமல்லாமல் அதற்கான முயற்சிகளையும் எடுத்துக் கொண்டு வருவீர்கள். குழந்தைகள் பேசுவது அவர்கள் வளரும் மற்றும் வெளிப்படுத்தப்படும் வெவ்வேறு சூழல்களுக்கேற்ப மாறுபாடுகின்றது.

குழந்தைகளைப் பேச வைக்கும் சில சிறப்பான வழிகள்!!!

குறித்த காலத்தில் பேசாத குழந்தைகளை நாம் உடனடியாக ஒரு நல்ல மருத்துவரிடம் அல்லது பேச்சு சிகிச்சை தருபவரிடம் கூட்டிச் சென்று அதன் காரணங்களை கண்டறிய வேண்டியுள்ளது. மருத்துவ ரீதியான காரணங்களை தவிர்த்து வேறு எந்த வித காரணமாக இருந்தாலும் நம்மால் கட்டாயம் குழந்தைகளை பேச வைக்க முடியும்.

உங்கள் குழந்தைக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கி சிறிது முயற்சி செய்தால் போதும் அவர்களை பேச வைத்திட முடியும். இதற்கு பல வழிகள் உள்ளன. அதற்கு செய்ய வேண்டிய முயற்சிகளை பற்றி இங்கு குறிப்பிட்டுள்ளோம்.

அனைவருடனும் பழக விடுங்கள்: உங்கள் குழந்தையை அனைவருடனும் பழக விட வேண்டும். இதுவே நீங்கள் பெருமளவில் முயற்சி செய்யாமல் அவர்களை பேச வைத்திட சிறந்த வழியாகும். மற்ற குழந்தைகளுடனும் விளையாட விடும் போது பேச்சு தானாக நிச்சயம் வரும். இவ்வாறு செய்வதால் உங்கள் குழந்தை மற்றவர்களிடம் பேசுவதன் அவசியத்தை ஏற்படுத்த முடியும் மற்றும் உங்களுடைய முயற்சிகள் இல்லாமலேயே அவர்கள் பேசத் தொடங்குவார்கள்.

அவர்களுடன் பேசுங்கள்: எப்போதும் வேலை வேலை என்று இருந்தால் குழந்தைகளை பேச வைக்க வெகு நாட்களாகி விடும். குழந்தைகளுடன் பேசும் போது தான் அவர்களும் பேச கற்றுக் கொள்கின்றனர். அவர்களுக்கு என்ன புரியப் போகின்றது என்று தவறாக எண்ணி விடாதீர்கள். நீங்கள் சும்மாவாவது அவர்களிடம் பேசும் போது, அவர்கள் அதற்கு பதில் அளிக்கத் தொடங்குவார்கள்.

அனைத்து பெயர்களையும் சொல்லித் தருதல்: உங்கள் வீட்டிலுள்ள ஒவ்வொரு பொருளின் பெயரையும் குறிப்பிட்டு பேசுவது நல்ல யோசனையாகும். அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா போன்ற அழைக்கும் சொற்களையும் எப்போதும் கூறி கொண்டு அவர்களையும் சொல்ல வையுங்கள். நீங்கள் கேட்பது அவர்களுக்கு விரைவாக புரிந்து விடும். இதுவே உங்கள் குழந்தையை பேச வைக்க சிறந்த வழியாகும்.

இரவு நேரக் கதைகள்: ஒருவேளை உங்கள் குழந்தை இன்னும் பேசாமல் இருந்தால் இரவு நேரத்தில் படுக்கைக்கு செல்லும் போது கதைகளை படித்து காட்டுங்கள். இதுவும் உங்கள் குழந்தையின் பேச்சுத்திறனை வெளிப்படுத்தும் சிறந்த முயற்சியாக அமைகின்றது. இதை செய்தால் உடனடியாக வித்தியாசம் காண முடியாது ஆனால் உங்களுக்கு நல்ல ஒரு பதில் கிடைக்கும் வரை முயற்சி செய்வதை விட்டு விடாதீர்கள்.

சத்தத்தை திரும்பச் சொல்வது: ஆடு, மாடு, நாய் மற்றும் பறவைகள் ஆகியவற்றின் சத்தத்தை அவர்களுக்கு சொல்லிக் காட்டுங்கள். நல்ல சங்கீதம் மற்றும் குழந்தைகளுக்கான பாடல்களை கேட்க விடுங்கள். இதை அவர்கள் கேட்டு திரும்பச் சொல்லும் வரை பொறுமையுடன் காத்திருங்கள். அவர்கள் கேட்டதை ஒரு நாள் நிச்சயம் சொல்லுவார்கள்.

குழந்தைப் பாடல்கள்: இந்த பாடல்களை குழந்தைகளுக்கு போட்டு காண்பிக்கலாம் மற்றும் பாடியும் காட்டலாம். அவர்கள் சாப்பிடும் போதும் மற்றும் குளிக்கும் போது இதை செய்யலாம். இதை திரும்பத் திரும்ப கேட்கும் போது அவர்களும் ஒரு நாள் அதை பாடுவார்கள். குழந்தைகளை பேச வைக்க இதுவும் ஒரு வழியாகும்.

திருப்பி சொல்லச் சொல்லுங்கள்: வெறும் பேச்சு மட்டும் போதாது. அவர்களையும் திருப்பிச் சொல்ல சொல்லுங்கள். சிறிய வார்த்தைகளை சொல்லிக் கொண்டே இருங்கள். அது குழந்தையின் பெயராகவும் கூட இருக்கலாம், அந்த பெயரை கொண்டு இரவு நேர கதைகளில் ஏதேனும் ஒரு கதையை சொல்லலாம். இது அவர்களுக்கு நிச்சயம் புரியும். இதை எல்லாம் கேட்கும் குழந்தைகள் வெகு சீக்கிரம் பேசி விடுவார்கள்.

====================================

Best Ways To Get Your Child To Start Talking

If listening to the giggles of your baby makes you excited, then probably you will be waiting to see how you feel when they start talking. All parents are concerned about the stages of growth of their children. Nothing will be more exciting than listening to the cute talks of your child. But parents must remember that each child has a different rate of development, and so some kids begin talking early while others take a little longer with their first words.

This is the time when you will start searching for the best ways to get your child to talk. The age when children start to talk depends on various conditions.

If you feel that your baby is not talking even after the milestone time, it is recommended to consult a doctor or a speech therapist to rule out the reason. Unless your child does not have any medical problems that may affect talking, there are easy ways to make your child talk. If you are ready to spend some time and effort, selecting the best ways to get your child to talk may help. Here are some of the best ways to get your child to talk.

குழந்தைகளைப் பேச வைக்கும் சில சிறப்பான வழிகள்!!!

Allow them to get social: Allow your child to mingle with others. This is one of the best ways to get your child to talk. Let them mingle with other children. This will make communication more important and your child will start talking without much effort from your side.

Talk to them: The busy life of parents is the main reason why children take time to start talking. Talking to your child is one of the best ways to get your child to talk. Do not think whether they will understand what you are talking. Just talk to them and they will start responding.

Name all and everything: It is a good idea to name each and every object in your home. Repeat the names of your relatives as well. Use these names frequently when you talk to your child and ask them to repeat it. This is one of the best ways to get your child to talk.

Bedtime stories: If your child has not started talking yet, read some bedtime stories for them before they sleep. This can do wonders in developing your child's communication skills. If they are not responding in the beginning, keep on doing the process unless you get a positive response.

Sound imitation: Try to imitate the sounds of animals, instruments or even the music of your child's toys. Your child may easily repeat them back to you. This will help you to a great extend to make them repeat the most frequently used words as well.

Rhymes: You can try singing some rhymes to your child. You can do this daily while you feed or bathe your child, or even while putting him to sleep. Hearing these rhymes daily will make him repeat it. This is one of the best ways to get your child to talk.

Ask them to repeat: Instead of merely talking to your child, ask him to repeat simple words. It is better to focus more on words that are used more frequently. Repeat these words purposely. Including these words in his bedtime story is one of the smartest ways to make your child talk.

Thanks
For more health tips    : http://NanbanTamil.blogspot.com


Wednesday 26 February 2014

சிரிப்பு யோகாவின் மூலம் கிடைக்கும் பலன்கள் - Benefits of Laughter Therapy

சிரிப்பு யோகாவின் மூலம் கிடைக்கும் பலன்கள் - Benefits of Laughter Therapy

'சிரித்து வாழ வேண்டும்... பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே' என்பது ஒரு பழைய திரைப்படப் பாடல் என்றாலும், அது மிகவும் அர்த்தம் உள்ளதாகும். சிரிக்கும் போது கிடைக்கும் நல்ல பலன்களை சிரிப்பு யோகா மூலம் எளிதில் பெற முடியும். அது பற்றி இந்த கட்டுரையில் காண்போம். 

மிகுந்த மன அழுத்தத்துடன் கவலையான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றீர்களா? உங்கள் வாழ்வில் மிகுந்த மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் எதிர்பார்க்கின்றீர்களா? கவலை வேண்டாம். சிரிப்பு யோகாவை பயிற்சி செய்து அதன் நன்மைகளை அனுபவியுங்கள். இதனால் மன ஆரோக்கியமும், உடல் ஆரோக்கியமும் நிறைவாக கிடைக்கும்.

நல்ல மன நிலை 
தனிப்பட்ட வாழ்வாக இருந்தாலும், வேலையாக இருந்தாலும் அல்லது மற்ற பொது வாழ்வாக இருந்தாலும், அவையெல்லாம் உங்கள் மன நிலையை பொறுத்து தான் அமைகின்றன. அந்த வகையில் சிரிப்பு யோகா உங்கள் மன நிலையை ஒருசில நிமிடத்தில் மாற்ற வல்லது. சிரிக்கும் போது மூளையில் உள்ள திசுக்கள் என்டோர்பீன் என்ற சுரப்பியை வெளியிடுகின்றன. இது உங்கள் மனநிலையை மகிழ்சியாக மாற்றும் அதுமட்டுமில்லாமல் நாள் முழுதும் வழக்கமாக சிரிப்பதை விட அதிகமாக சிரிக்கவும் செய்வீர்கள்.


மன அழுத்தத்தை நீக்கும் சிறந்த உடற்பயிற்சி 
ஏரோபிக்ஸ் போல் தான் சிரிப்பு யோகவும். சிரிப்பு யோகா இதயத்திற்கு பயிற்சி அளித்து அதிக அளவு ஆக்சிஜனை உடலுக்கும் மூளைக்கும் கொண்டு செல்ல உதவுகிறது. இதனால் ஒருவர் மிகுந்த உற்சாகத்துடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க முடியும். சிரிப்பு யோகா என்ற ஒரு பயிற்சி மூலம் உடல், மனம் மற்றும் உணர்ச்சி தொடர்பான அனைத்து மன அழுத்தங்களையும் மாற்றி அமைக்க முடியும்.

ஆரோக்கிய பலன்கள் 
நாம் நோயுற்றால் வாழ்வில் உள்ள நல்ல காரியங்களை மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியாது. சிரிப்பு யோகா மூலம் நமது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது. அதுமட்டுமல்லாமல் சர்க்கரை நோய், மூட்டு வலி, இதய நோய், முதுகு வலி, அழுத்தம், கவலை, ஆஸ்துமா, தலைவலி, மாதவிடாய் கோளாறுகள், புற்றுநோய் ஆகிய பற்பல நோய்களை குணமாக்கவும் முன்னேற்றத்தை தரவும் முடிகின்றது.

வாழ்வாதாரம் 
சிரிப்பு என்பது இயற்கையாக ஒரு மனிதனுக்கு சக்தி தரும் செயலாகும். இதனை நாம் நல்ல நண்பர்கள் மூலமும் மற்றும் நம் மேல் அக்கறையும் அன்பும் கொண்டவர்களிடமும் மட்டுமே நாம் பெற முடியும். ஆகையால் இத்தகைய மக்களுடன் இருப்பது நல்லது. அதுமட்டுமல்லாமல் நாம் சிரித்துப் பழகும் போது நமக்கு நல்ல நண்பர்களும் புதிய உறவுகளும் கிடைக்கின்றனர்.

கடினமான காலத்தில் சாதிக்கும் மனப்பக்குவம் 
'துன்பம் வரும் போது சிரி' என்று சில பேர் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். நல்ல சமயங்களில் யாராயினும் சிரித்து மகிழலாம். ஆனால் மிகுந்த கடினமாக காலங்களில் ஒருவர்; எப்படி சிரிப்பது? ஆனால் அதையும் நாம் மீறி சிரிக்கும் போது நமக்கு அந்த காரியங்களிடமிருந்து மீண்டு வரவும், அத்தகைய கடினமான காரியங்களை செய்யும் துணிவும் கிடைக்கும்.

==========

Five Benefits of Laughter Theraphy

Are you stressed, sad and depressed? Do you want to bring more laughter and joy to your life? Here are five benefits that Laughter Yoga offers for your health and wellness:

1. Good Mood and More Laughter:Whether it is your personal life, business life or social life everything you do depends upon your mood state. If your mood is good, you can do things much better. Laughter Yoga helps to change the mood within minutes by releasing certain chemicals from your brain cells called endorphins. You will remain cheerful and in a good mood throughout the day and will laugh more than you normally do.

2. Healthy Exercise to Beat Stress: Laughter Yoga is like an aerobic exercise (cardio workout) which brings more oxygen to the body and brain which makes one feel more healthy and energetic. Laughter Yoga is a single exercise routine which reduces physical, mental and emotional stress simultaneously.

3. Health Benefits: You can't enjoy life if you are sick. Laughter Yoga strengthens the immune system which not only prevents you from falling sick, but also helps to heal a variety of illnesses like hypertension, heart disease, diabetes, depression, arthritis, allergies, asthma, bronchitis, backache, fibromyalgia, migraine headaches, menstrual disorders, cancer and many others.

4. Quality of Life: Quality of life depends upon quality of good friends we have with whom we have a caring and sharing relationship. Laughter is a positive energy which helps to connect with people quickly and improves relationships. If you laugh more, you will attract many friends.

5. Positive Attitude in Challenging Times : Everyone can laugh when the time is good, but how does one laugh when faced with challenges? Laughter helps to create a positive mental state to deal with negative situations and negative people. It gives hope and optimism to cope with difficult times.

Thanks
For more health tips    : http://NanbanTamil.blogspot.com