Flash News

Friends Tamil Chat

Search This Blog

Showing posts with label தோட்டம். Show all posts
Showing posts with label தோட்டம். Show all posts

Monday, 27 January 2014

அழகிய பூக்களை பாதுகாப்பது எப்படி? - How To Protect Delicate Flowers?


அழகிய பூக்களை பாதுகாப்பது எப்படி? - How To Protect Delicate Flowers?


தோட்டம் அமைப்பது என்பது வீட்டிற்கு மேலும் அழகூட்டும் விஷயமாகும். ஆனால் இந்த அழகூட்டும் காரியங்களை செய்ய நிறைய பொறுமையும், மன உறுதியும் தேவைப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் குளிர் காலத்தில் இவைகளை மிகவும் கவனமாக பாதுகாக்க வேண்டும். பனி பெய்தால் போதும் உங்கள் தோட்டத்தில் உள்ள சிறிய செடிகள் எல்லாம் குளிரில் கருகி விடும். இந்த காலத்தில் பூத்துக் குலுங்கும் அழகிய பூக்கள் பெரும் சேதத்தை சந்திக்கின்றன. ஆனால் நாம் சிறிது நேரம் செலவு செய்தால் இத்தகைய சேதங்களை தவிர்க்க முடியும்.


குளிர்காலத்தில் தோட்டத்தை பராமரிப்பது எப்படி என்று பல குறிப்புகள் உள்ளன. குளிர்காலத்தின் கடுங்குளிர் தன்மையை எண்ணி நாம் இந்த அழகிய பூக்களை பாதுகாக்கும் வழிமுறைகளை செய்ய வேண்டியுள்ளது. குளிர் கால பனி மற்றும் குளிர்ந்த காற்று ஆகியவை செடிகளையும் அதன் பூக்களையும் பாழ்படுத்துகின்றன. மேலும், இந்த பருவ காலத்தில் பராமரிப்பிற்காக சற்றே அதிகமான நேரமும் மற்றும் போதிய அளவு அக்கறையையும் கொடுக்கும் போது நமது தோட்டம் ஒரு சிறந்த வண்ணமயமான தோட்டமான ஒளிரும் என்பது திண்ணம்!

குளிர்காலத்தில் அழகிய பூக்களை பாதுகாப்பது எப்படி?

சரியான அளவு வெப்பநிலையை பராமரிப்பது மற்றும் பனியிலிருந்து பாதுகாப்பு அளிப்பது ஆகியவை பூக்களை பாதூகப்பதில் மிகவும் அவசியமான விஷயமாக உள்ளன. பூக்களுக்கு தேவையான அளவு இதமான உணர்வை கொடுக்கும் வழிகளை கண்டறிந்து அவற்றை செயல்படுத்துவது நல்லது. பனியிலிருந்து தப்புவிக்க கொஞ்சம் ஒதுக்குப்புறமாக ஒரு நிழல் குடை அமைத்துக்கொடுத்தால் மிகுந்த பயனாக இருக்கும். இந்த தருணங்களை உங்கள் செடிகளுடன் செலவிட்டு மிகுந்த மகிழ்ச்சியும் மன திருப்தியும் அடையுங்கள்.

பூக்களை கடுமையான குளிர் காலத்திலிருந்து பாதுகாக்க வேண்டியது மிக முக்கிமானதாகும். பூக்களை மெல்லிய மடிப்புகளால் மூடிவைக்க வேண்டும். இவை பூக்களை பெரும் குளிரிலிருந்தும் வறண்ட காற்றிலிருந்தும் காக்கின்றது. இதை செய்யும் போது நாம் பூவின் இதழ்கள் கிழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.

தொட்டியில் நட்டு வையுங்கள்: செடிகளை தொட்டியில் நட்டு வைப்பதன் மூலம் நமது தேவைக்கேற்ப அதை நாம் இடமாற்றிக் கொள்ள முடியும். பூக்கள் பூக்கும் செடிகளை குளிர்காலத்தில் பாதுகாத்துக் கொள்ளவும் முடியும். வெயில் வரும் காலத்திலும் நாம் அதற்கேற்ற வகையில் எளிதில் இடமாற்றிக் கொள்ள முடியும்.

உள்ளே வைத்தல்: பூக்கள் பூக்கும் செடிகளை குளிரிலிருந்து பாதுகாக்க நமது வீட்டிற்குள் அவற்றை வைத்து பாதுகாக்கலாம். இவை வீட்டிற்கு மேலும் அழகூட்டி அலங்கார பொருளாக அமைந்து குளிர்காலத்தில் வீட்டை சிறப்பாக வைத்திருக்க உதவுகின்றன.

சரியான நேரத்தில் செய்வது: மெல்லிய பூக்களை பாதுகாக்க நாம் எடுக்கும் முயற்சிகளை குளிர்காலம் வரும் முன்பே செய்யத் தொடங்க வேண்டும். குளிர் காலம் தோன்றிய பின் நாம் முயற்சிகள் மேற்கொண்டால் அவை வீணே!

தற்காலிக கிரீன் ஹவுஸ்: தற்காலிக கிரீன் ஹவுஸ் ஒன்றை அமைத்து பூ பூக்கும் செடிகளை அதில் வைத்து பாதுகாக்க வேண்டும். அதிக அளவு பணம் செலவு செய்ய விரும்பாவிட்டால் எளிய முறையில் பிபீசி பைப்புகள் (PBC) மற்றும் விஸ்குயின் (Visqueen) ஆகியவைகளால் செய்த வீடு போன்ற அமைப்பில் செடிகளை வைத்து பாதுகாக்கலாம்.

மூடி வையுங்கள்: கடுமையாக குளிரிலிருந்து செடிகளை பாதுகாக்க நமது வீட்டிலிருக்கும் பழைய போர்வை அல்லது துணி ஆகியவற்றை கொண்டு செடிகளை மூடி வைக்கலாம். இதை இரவு நேரத்தில் மட்டும் செய்தால் நல்லது. வெயிலில் திறந்து வைக்க மறந்து விட வேண்டாம்.

குளிர்காலத்திற்கு முன் உரமிடுங்கள்: குளிர்காலம் வருவதற்கு இரண்டு மாதங்கள் முன்னரே உரமிடுவது சிறந்ததாகும். அதிக அளவு வெட்டி விடுவவது மற்றும் இதர வேலைகளை குளிர்காலத்தில் தவிர்ப்பது நல்லது. இவை புதிய பூக்கள் உருவாக விடாமல் தடுக்கும். குளிரிலிருந்தும் பாதுகாக்கும்.

கோணியை பயன்படுத்துங்கள்: பூ பூக்கும் செடிகளை குளிரிலிருந்தும் மற்றும் உறைய வைக்கும் பனியிலிருந்தும் காத்துக் கொள்ள கோணி உதவும். செடிகளை இதை வைத்து மூடி பின்னர் அதன் நடுவே உள்ள பகுதியில் உதிர்ந்த இலைகளை போட்டு மூடுவது செடிகளை உறைய விடாமல் காத்துக்கொள்ளும்.

அட்டை வைத்து மூடுங்கள்: பூ பூக்கும் செடிகளை ஒரு அட்டை வைத்து மூடி வைத்தால் குளிர்கால வறண்ட காற்றிலிருந்து செடிகளை பாதுகாக்க முடியும். செடிக்கும் அட்டைக்கும் நடுவே உதிர்ந்த இலைகளையும் பழைய காகிதங்களையும் போட்டு வைத்தால் செடிகளுக்கு உரமாகவும் இதமூட்டுபவையாகவும் அமையும்.


============

How To Protect Delicate Flowers ?

Gardening needs a lot of patience and persistence. Apart from this, your garden needs an extra attention and care during the winter season. Tender plants can be destroyed even in a single frost. 


Protecting delicate flowers in winter is a difficult task. But, if you are ready to spend some time in your garden, you can make the task of protecting delicate flowers during winter easier. 

There are many winter gardening tips that can assist you in protecting delicate flowers during this winter. The methods which you use for protecting your delicate flowers during this winter should depend on the severity of the winter in your place. It is not only the cold that affects your flowers, but also the winter wind.

குளிர்காலத்தில் அழகிய பூக்களை பாதுகாப்பது எப்படி?

Tender flowers will be affected by the winter climate. Giving some extra care will help keep your garden colourful throughout the winter. 

Right temperature and protection from frost is very important for flowers. Select ideas that will give enough insulation for your delicate flowers during the winter. 

Giving a simple shelter may provide enough protection to your plant. Here are some easy tips that you can try. Enjoy this winter in your garden, without much worries about your delicate beautiful flowers.

Wrapping: It is important to protect your plant from the harsh effects of winter. Wrapping will help keep your flowers safe from the direct attack of cold and drying wind. Take care to wrap it gently without harming the petals.

Plant in pot: Planting in pots will help you move the flowering plants to a safe place where it will not be affected by the cold weather. Winter garden tips give importance to this because it will allow you to keep the plant in sunlight as well.

Keep it indoor: One of the most creative winter gardening tips for protecting delicate flowers in winter is to keep the plant indoors. This will add some extra grace to your room, making it more beautiful this winter.

Do it at the right time: If you want to protect the delicate flowers during winter, you have to execute the plan even before the arrival of the season. If you are trying to protect the plant after winter is on your doorstep, it may be too late that your flowers will be destroyed.

Temporary greenhouse: Making a temporary greenhouse is an excellent idea for protecting delicate flowers during winter season. If you don't want to spend much on a greenhouse, opt for simple hoop-style greenhouse that can be built using PBC pipe and visqueen.

Cover it up: If you are expecting a harsh winter, the best way for protecting delicate flowers during this winter is to cover it up. You can use an old blanket, drop cloth, or tarp to cover the plants. Remember to remove the covering in between for getting sunlight.

Use fertilizer before winter: It is important to stop fertilizing your flowering plants at least two months before the winter. Do not do major pruning and blossom cutting. These winter gardening tips will help you to avoid the production of new flowers.

Use mulch: Mulch can be used to protect your flowering plants, if you are expecting freezing temperatures during this winter. Cover your plants with protective burlap. Then, fill in the middle part with a layer of shredded dry leaves or paper.

Use cardboard: You can cover your flowering plant with a cardboard to give enough protection from the winter wind. Add some leaves or papers in the middle part. This is one of the important winter gardening tips for protecting delicate flowers during winter.


Thanks
For more health tips    : http://NanbanTamil.blogspot.com

Sunday, 4 August 2013

செடிகளின் வளர்ச்சியை அதிகரிக்கும் மிகவும் சிறந்த இயற்கை உரங்கள் - Best homemade fertilizers

செடிகளின் வளர்ச்சியை அதிகரிக்கும் மிகவும் சிறந்த இயற்கை உரங்கள்  - Best homemade fertilizers

வீட்டில் தோட்டம் வைப்பது வீட்டிற்கு அழகை கொடுப்பது மட்டுமின்றி, அதைப் பார்க்கும் போது மனமும் நன்கு அமைதி பெறும். அதனால் பலர் வீட்டில் உள்ள தோட்டத்திற்கு பலவகையான பராமரிப்புக்களை மேற்கொள்ள அதிகம் செலவு செய்வார்கள். அதிலும் உரங்கள் வாங்குவதற்கு தான் அதிகம் செலவழிப்பார்கள். ஆனால் அவ்வாறு கஷ்டப்பட்டு தோட்டத்தைப் பராமரிப்பதற்கு பதிலாக, மிகவும் சிறந்த மற்றும் இயற்கையில் கிடைக்கும் உரங்கள் என்னவென்று தெரிந்து கொண்டு, அதனைப் பயன்படுத்தினால், செடிகள் நன்கு செழிப்போடு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் வளரும்.

Vīṭṭil tōṭṭam vaippatu vīṭṭiṟku aḻakai koṭuppatu maṭṭumiṉṟi, ataip pārkkum pōtu maṉamum naṉku amaiti peṟum. Ataṉāl palar vīṭṭil uḷḷa tōṭṭattiṟku palavakaiyāṉa parāmarippukkaḷai mēṟkoḷḷa atikam celavu ceyvārkaḷ. Atilum uraṅkaḷ vāṅkuvataṟku tāṉ atikam celavaḻippārkaḷ. Āṉāl avvāṟu kaṣṭappaṭṭu tōṭṭattaip parāmarippataṟku patilāka, mikavum ciṟanta maṟṟum iyaṟkaiyil kiṭaikkum uraṅkaḷ eṉṉaveṉṟu terintu koṇṭu, ataṉaip payaṉpaṭuttiṉāl, ceṭikaḷ naṉku ceḻippōṭu enta oru pātippum illāmal vaḷarum.


ஏனெனில் இயற்கை உரங்களில் நிறைய சத்துக்கள் நிறைந்திருப்பதோடு, அந்த உரத்தினால் எந்த ஒரு ஆபத்தும் நிச்சயம் செடிகளுக்கு ஏற்படாது என்பதாலேயே தான். அதிலும் சரியான அளவில், சரியான நேரத்தில் உரங்களை பயன்படுத்தினால், செடிகள் ஆரோக்கியமாக இருப்பது உறுதி.

Ēṉeṉil iyaṟkai uraṅkaḷil niṟaiya cattukkaḷ niṟaintiruppatōṭu, anta urattiṉāl enta oru āpattum niccayam ceṭikaḷukku ēṟpaṭātu eṉpatālēyē tāṉ. Atilum cariyāṉa aḷavil, cariyāṉa nērattil uraṅkaḷai payaṉpaṭuttiṉāl, ceṭikaḷ ārōkkiyamāka iruppatu uṟuti.


இங்கு ஒருசில இயற்கை உரங்களைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, அவற்றை தோட்டத்தில் பயன்படுத்தி அழகான தோட்டத்தை அமைத்துக் கொள்ளுங்கள்.
Iṅku orucila iyaṟkai uraṅkaḷaik koṭuttuḷḷōm. Ataip paṭittu terintu koṇṭu, avaṟṟai tōṭṭattil payaṉpaṭutti aḻakāṉa tōṭṭattai amaittuk koḷḷuṅkaḷ.


எப்சம் உப்பு
எப்சம் உப்பை நீரில் கரைத்து, தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு ஊற்றினால், எப்சம் உப்பில் உள்ள மக்னீசியம் மற்றும் சல்பேட் சத்துக்கள் செடிகளுக்கு கிடைத்து, செடிகள் நன்கு ஆரோக்கியமாக வளரும்.

Epcam uppu Epcam uppai nīril karaittu, tōṭṭattil uḷḷa ceṭikaḷukku ūṟṟiṉāl, epcam uppil uḷḷa makṉīciyam maṟṟum calpēṭ cattukkaḷ ceṭikaḷukku kiṭaittu, ceṭikaḷ naṉku ārōkkiyamāka vaḷarum.


காபி பொடி
காடி பொடியும் ஒரு சிறந்த உரம் தான். அதிலும் இந்த காபி பொடியை ரோஜா செடிகளுக்கு தூவினால், காபி பொடியில் உள்ள நைட்ரஜன், மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் செடிகளுக்கு கிடைத்து, செடிகளும் நன்கு வளரும்.

Kāpi poṭi Kāṭi poṭiyum oru ciṟanta uram tāṉ. Atilum inta kāpi poṭiyai rōjā ceṭikaḷukku tūviṉāl, kāpi poṭiyil uḷḷa naiṭrajaṉ, makṉīciyam maṟṟum poṭṭāciyam cattukkaḷ ceṭikaḷukku kiṭaittu, ceṭikaḷum naṉku vaḷarum.



முட்டை ஓடு
முட்டை ஓடும் ஒரு சூப்பரான இயற்கை உரமாகும். எனவே முட்டையின் ஓட்டை பொடி செய்து தூவினால், முட்டையில் உள்ள கால்சியம் கார்போனேட் செடிகளுக்கு கிடைக்கும்.

Muṭṭai ōṭu Muṭṭai ōṭum oru cūpparāṉa iyaṟkai uramākum. Eṉavē muṭṭaiyiṉ ōṭṭai poṭi ceytu tūviṉāl, muṭṭaiyil uḷḷa kālciyam kārpōṉēṭ ceṭikaḷukku kiṭaikkum.



வினிகர்
4 டீஸ்பூன் வினிகரை தண்ணீரில் கலந்து, மூன்று மாதத்திற்கு ஒரு முறை தவறாமல் ஊற்றி வந்தால், செடிகள் நன்கு வளரும்.

Viṉikar 4 Ṭīspūṉ viṉikarai taṇṇīril kalantu, mūṉṟu mātattiṟku oru muṟai tavaṟāmal ūṟṟi vantāl, ceṭikaḷ naṉku vaḷarum.



மீன் தொட்டி நீர்
மீன் தொட்டியில் உள்ள தண்ணீரில் நைட்ரஜன் மற்றும் செடிகளுக்கு தேவையான இதர சத்துக்கள் அதிகம் உள்ளன. ஆகவே இந்த நீரை செடிகளுக்கு ஊற்றினால், செடிகள் நன்கு உறுதியுடன் வளரும்.

Mīṉ toṭṭi nīr Mīṉ toṭṭiyil uḷḷa taṇṇīril naiṭrajaṉ maṟṟum ceṭikaḷukku tēvaiyāṉa itara cattukkaḷ atikam uḷḷaṉa. Ākavē inta nīrai ceṭikaḷukku ūṟṟiṉāl, ceṭikaḷ naṉku uṟutiyuṭaṉ vaḷarum.



சாம்பல்
கட்டைகளை எரித்த சாம்பலும் மிகச்சிறந்த உரமாகும். ஏனெனில் சாம்பலில் பொட்டாசியம் மற்றும் கால்சியம் கார்போனேட் அதிக அளவில் உள்ளது.

Cāmpal Kaṭṭaikaḷai eritta cāmpalum mikacciṟanta uramākum. Ēṉeṉil cāmpalil poṭṭāciyam maṟṟum kālciyam kārpōṉēṭ atika aḷavil uḷḷatu.



காய்கறி குப்பைகள்
காய்கறிகளின் தோல்களை, செடிகளைச் சுற்றி போட்டால் செடிகள் நன்கு வளரும்.

Kāykaṟi kuppaikaḷ Kāykaṟikaḷiṉ tōlkaḷai, ceṭikaḷaic cuṟṟi pōṭṭāl ceṭikaḷ naṉku vaḷarum.



ஓக் மர இலைகள்
ஓக் மர இலைகளை ஒரு வாளி தண்ணீரில் போட்டு, சூரிய வெப்பத்தில் தண்ணீர் நிறம் மாறும் வரை வைத்து, பின் அதனை செடிகளுக்கு ஊற்றினால், செடிகள் வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் வளரும்.

Ōk mara ilaikaḷ Ōk mara ilaikaḷai oru vāḷi taṇṇīril pōṭṭu, cūriya veppattil taṇṇīr niṟam māṟum varai vaittu, piṉ ataṉai ceṭikaḷukku ūṟṟiṉāl, ceṭikaḷ valimaiyākavum, ārōkkiyamākavum vaḷarum.



களைகள்
தோட்டத்தில் செடிகளைச் சுற்றி வளரும் களைச் செடிகளை வேரோடு பிடுங்கி, அதனை உரங்களாக பயன்படுத்தலாம். இதனால் களைச்செடிகள் மங்கி, செடிகளின் வளர்ச்சிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கும்.

Kaḷaikaḷ Tōṭṭattil ceṭikaḷaic cuṟṟi vaḷarum kaḷaic ceṭikaḷai vērōṭu piṭuṅki, ataṉai uraṅkaḷāka payaṉpaṭuttalām. Itaṉāl kaḷaicceṭikaḷ maṅki, ceṭikaḷiṉ vaḷarccikku vēṇṭiya cattukkaḷ kiṭaikkum.



சாணம்
சாணத்தை விட சிறந்த உரம் எதுவும் இருக்க முடியாது. அதிலும் மாடு, கோழி அல்லது ஆடு போன்றவற்றின் சாணங்கள் செடியின் வளர்ச்சியை அதிகரிப்பதோடு, வலிமையோடு வளரச் செய்யும். குறிப்பாக இதனை விதைகளை விதைப்பதற்கு முன்பாகவும் பயன்படுத்தலாம். இதனால் மண்ணின் தன்மையானது தரமிக்கதாக இருக்கும்.
Cāṇam Cāṇattai viṭa ciṟanta uram etuvum irukka muṭiyātu. Atilum māṭu, kōḻi allatu āṭu pōṉṟavaṟṟiṉ cāṇaṅkaḷ ceṭiyiṉ vaḷarcciyai atikarippatōṭu, valimaiyōṭu vaḷarac ceyyum. Kuṟippāka itaṉai vitaikaḷai vitaippataṟku muṉpākavum payaṉpaṭuttalām. Itaṉāl maṇṇiṉ taṉmaiyāṉatu taramikkatāka irukkum.
Share your comments in friends chat FriendsTamil.cbox.ws

Thanks


Thursday, 27 June 2013

மழைநீரைப் செடிகளுக்கு பயன்படுத்த - ways to use rainwater garden plants

மழைநீரைப் செடிகளுக்கு பயன்படுத்துவதற்கான சில வழிகள்

மழைக் காலமானது ஆரம்பித்துவிட்டது. அனைவரும் பொழியும் மழையில் நனைந்து ஒரே சந்தோஷத்துடன் இருப்போம். அந்த சந்தோஷத்தில் வீட்டில் வளர்க்கும் செடிகளை கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டாம். ஏனெனில் எப்படி நமக்கு மழை வந்தால் சந்தோஷமோ, அதேப் போல் செடிகளும் குதூகலத்துடன் இருக்கும். பொதுவாகவே செடிகள் நன்கு செழிப்புடன் வளர்வதற்கு நீரானது மிகவும் இன்றியமையாதது. அதிலும் மழைநீர் மிகவும் சிறந்தது. ஏனெனில் மழை நீர் மிகவும் சுத்தமான நீர்.


எனவே மழைநீரை செடிகளுக்கு ஊற்றி, செடிகள் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். அதே சமயம் மழைநீராலும் செடிகளுக்கு அழிவு நேரிடக்கூடும். எனவே இப்போது மழைநீரை செடிகளுக்கு எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்று சில டிப்ஸ்களை கொடுத்துள்ளோம். அதைப் படித்து பின்பற்றுங்கள்.

மழைநீரைப் செடிகளுக்கு பயன்படுத்துவதற்கான சில வழிகள்!!!

* மாசடைந்திருக்கும் நகரத்தில் இருந்தால், முதல் மழையில் செடிகள் நனையாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அந்த மாதிரியான இடத்தில் பொழியும் மழையானது காற்றில் உள்ள அனைத்து மாசுக்களையும் வெளியேற்றும். இதனால் அந்த மழையானது செடிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே இதில் கவனமாக இருக்க வேண்டும்.

* தொட்டியில் செடிகளை வளர்த்தால், மழை லேசாக பொழியும் போது, அவற்றை மழைப் பொழியும் இடங்களில் வைத்தால், செடிகளின் இலைகளில் படிந்திருக்கும் அழுக்குகளை நீக்கி, செடியை பளிச்சென்று புத்துணர்ச்சியுடன் வெளிப்படுத்தும்.

* ஒருவேளை மழையானது ஜோராக பொழிந்தால், அப்போது அதனை வெளியே வைக்க வேண்டாம். இல்லையெனில் மழையின் வேகமானது, செடிக்கு அழிவை ஏற்படுத்தும். மேலும் காற்று அதிகம் இருக்கும் போதும், செடிகளை பத்திரமாக வீட்டின் உள்ளே வைக்க வேண்டும்.

* வேண்டுமெனில் வேகமாக மழைப் பொழியும் போது, அந்த நீரை சேகரித்து வைத்து, செடிகளுக்கு ஊற்றலாம். அதிலும் ஒரு வாளியை மழைப்பொழியும் இடத்தில் வைத்து சேகரிக்கலாம். இவ்வாறு சேகரிக்கும் நீரை செடிகளுக்கு ஊற்றினால், செடிகள் நன்கு வலுவோடும், ஆரோக்கியமாகவும் வளரும். ஏனெனில் மழைநீர் என்பது மிகவும் தூய்மையான நீர் மற்றும் எங்கும் கிடைக்காதது.


Thanks

Friday, 17 May 2013

தோட்டம் அமைப்பதற்கான சில டிப்ஸ் - Tips for gardening in small spaces


சிறிய இடத்தில் தோட்டம் அமைப்பதற்கான சில டிப்ஸ்


வீட்டிற்கு அழகு சேர்க்கும் ஒரு அங்கமாக விளங்குவது தான் தோட்டம். பெரிய வீட்டில் பார்த்தால் தோட்டத்திற்கென்று ஒரு பெரிய இடம் ஒதுக்கி, அதை பராமரிக்க தனியாக வேலையாட்களும் இருப்பர். அப்படியானால் சின்னதாக வீடு வைத்திருப்பவர்களுக்கு தோட்டம் என்பது வெறும் கனவு தானா? என்று நினைக்கலாம். அது தான் இல்லை. தோட்டம் என்றால் பெரிய இடத்தில் தான் போட முடியும் என்றில்லை. கிடைத்த சின்ன இடத்தில் கூட தோட்டத்தை உருவாக்கலாம்.

சிறிய இடத்தில் அமைத்த சின்ன தோட்டம் கூட பார்க்க மிகவும் அழகாக இருக்கும். ஒவ்வொருவரும் அவர்களின் இட வசதிக்கேற்ப தங்களின் தோட்டத்தை அமைத்துக் கொள்கின்றனர். அது ஜன்னலருகே இருக்கும் இடமாகட்டும் அல்லது வீட்டின் உள்ள முற்றமாகட்டும்.

பெரிய இடத்தில் தோட்டம் அமைப்பது என்பது ஒரு வகையில் ஒரு புதிர் தான். நடக்கும் தவறு எதனால் ஏற்படுகிறது என்ற குழப்பம் நிலவும். ஆனால் சிறிய இடத்தில் போடும் தோட்டத்தில் எந்த வகையான தவறும் நடக்க வாய்ப்பில்லை. தவறாக நட்ட செடி கூட, சிறு தோட்டத்தில் பார்க்க அழகாகத் தான் தெரியும்.

tips gardening small spaces

அதற்கு முதலில் யோசிக்க வேண்டியது கிடைத்த சிறு இடத்தை எப்படி பயன்படுத்துவது என்பதைப் பற்றித் தான். மிகவும் சின்ன இடம் என்பதால் ஒரு மேஜையும், கொஞ்சம் நாற்காலிகளும் போடுமளவுக்குத் தான் இடம் இருக்கும். அப்படி தேவையில்லாமல் இருக்கும் சிறு இடங்களை, வீட்டினுள் இருந்து பார்க்கும் போது ஒரு ஓவியத்தைப் போல் அழகாக தெரிந்தால் எப்படி இருக்கும்?

பெரும்பாலும் சிறு தோட்டம் அமைக்கும் போது சவாலான விஷயமாக இருப்பது, தோட்ட எல்லைகளின் நெருக்கம். இது பெரும்பாலும் அசிங்கமாகவே அமையும். இந்த குறையையே நிறையாக மாற்றலாம் தெரியுமா? எப்படியெனில், இந்த எல்லைகளை சுற்றி கொடிகளை படர விடலாம். தோட்டத்தில் உள்ள செடிகளின் பெரிய இலைகளுக்கு முன் இருக்கும், இந்த கொடிகளின் சிறு இலைகள் பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சி அளிக்கும். இல்லையெனில், தோட்டத்தில் உள்ள வேலிக்கு கருப்பு நிறத்தில் வர்ணம் பூசலாம். இது கேட்பதற்கு விநோதமாக இருந்தாலும், பார்க்க கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். வேண்டுமெனில், கிரீன் வால் என்ற வேலி வகையையும் அமைக்கலாம். இது கொஞ்சம் விலை உயர்ந்ததாக இருந்தாலும் செடிகள் நன்கு வளர உதவி புரியும்.

சரி இப்போது இணைப்பைப் பற்றி யோசிக்கலாமா? உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் மஞ்சள் நிற இலைகளைக் கொண்ட மரங்களை வளர்த்துள்ளாரா? அப்படியானால் நீங்களும் மஞ்சள் நிற இலைகளை கொண்ட செடிகளை தோட்டத்தில் வளர்த்து வரலாம். அப்படிச் செய்தால், வீட்டிற்குள் இருந்து பார்க்கும் போது உங்கள் சிறிய தோட்டம் கூட பெரியதாக தெரியும்.

தோட்டம் அமைக்கும் திட்டம் எளிமையாக இருக்க வேண்டும். இந்த எளிமை குறைய குறைய, சிக்கல்கள் அதிகமாகும். அழகும் குறைந்து கொண்டே போகும். தோட்டத்துக்கு தேவையான பொருட்களையும், செடிகளையும் குறைந்த அளவிலேயே தேர்ந்தேடுக்க வேண்டும். வீட்டையும், தோட்டத்தையும் இணைக்க ஒரு பாதையை உருவாக்கி, அந்த பாதையில் வீட்டில் உள்ள தரையை போலவே மரப்பாதை, சிமெண்ட் அல்லது டைல்ஸ் போட்டு அழகை கூட்டலாம். இப்படி செய்தால் இந்த இரண்டும் பார்க்க ஒரே மாதிரி இருக்கும், மேலும் தோட்டத்து எல்லைகள் தெளிவில்லாமலும் போய்விடும்.

வேண்டுமானால் இந்த இடத்தை பெரிய பொருட்களால் நிரப்பி, மேலும் அழகைச் சேர்க்கலாம். உதாரணத்திற்கு, ஒரு பெரிய சிலையையோ அல்லது மேஜை நாற்காலிகளையோ போடலாம். இது இன்னும் மெருகேற்றும் வகையில் அமையும். இருப்பினும், செடிகளை கவனமாக தேர்ந்தேடுங்கள். ஏனெனில் இருப்பதிலேயே சின்ன மரம் தான் வெகு விரைவில் 6 மீட்டர் உயரமும், 4 மீட்டர் அகலத்திலும் வளரும். அதனால் பராமரிப்பது கடினமாகும். எனவே செடிகளை தேர்ந்தெடுக்கும் போது கவனம் தேவை.


Gardening Tips For Summer

The polluted and crowded cities has made us crave for more greenery around us to get a fresh breath of air. Luckily, many people still leave some space in front of their house for lawns or gardens. However, due to hectic work and commitments many plants in the garden are left unattended leading to the death of plants and creepers. At the same time, we lack the essential tools that are required for gardening. Instead, we randomly use any tools for gardening.

We hardly give any importance to our lawns which leaves them dull and dry. Garden gives a sense of freshness to your lives so its time that you spend few minutes everyday to renovate it. Make sure you continue decorating your garden by experimenting and planting different saplings. Also make sure you are using the required tools that are essential for making your garden look neat and presentable.

With the arrival of summer, gardening becomes extremely important as the plants in the garden tends to get dried up. Here are few gardening tips for summer that will help you to make your garden look presentable easily:

Garden Fork
If you are planning to create a garden or lawn in a small space, make sure you have a garden fork. This tools is a must for beginners. Use a good quality garden fork to make the job easier and interesting. A garden fork is an essential tool, ideal for digging heavy soil and also aerating lawns.


Watering Cans Summer has arrived and watering becomes the main task when it comes to lawns/gardens. You can save a lot of water by using containers instead of pipes. This can be very essential if you have a small garden. Use a full watering can to soak the roots of new plantings and for large potted trees and shrubs.

Fertilisers Keeping your garden lush green depends on how rich is the soil. Apply granular or liquid lawn fertiliser at least once a year. But make sure you do not overfeed because it may result in weak growth and fungal problems.

Theme Your Planting Summer has arrived and you need to think about making your garden look fresh all day. Due to time constraint you might not be able to water your plants every day, so plant those saplings which do not get dried easily and that can resist harsh sunlight. Choose large leafy plants or tropical plants which suits gravel gardens.

These are few ways that can definitely make your garden or lawn look presentable.

Tell your comments here
Thanks

Saturday, 6 April 2013

தோட்டத்தில் வளர்க்கக்கூடிய செடிகள் - common indian garden plants

தோட்டத்தில் வளர்க்கக்கூடிய பொதுவான 10 செடிகள்

தோட்டம் வைப்பது என்பது ஒரு சிறந்த பொழுதுபோக்கு. அத்தகைய பொழுதுபோக்கு நிறைய பேருக்கு உள்ளது. தற்போது தோட்டம் இல்லாத வீடுகளை காண்பதே அரிது. ஏனெனில் நிறைய பேர் தோட்டம் வைப்பதில் மிகுந்த ஆர்வம் காண்பிக்கின்றனர். அவ்வாறு ஆர்வம் இருந்தால் மட்டும் போதாது, தோட்டத்தில் எந்த மாதிரியான செடிகளை வைக்கலாம், அதனை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பன பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும். அவ்வாறு தோட்டம் வைத்தப் பின் செடிகளை சரியாக பராமரிக்காவிட்டால், பின் அது வாடி இறந்துவிடும்.

மேலும் தோட்டத்தில் எத்தனையோ வகை வகையான செடிகள் வளர்த்தாலும், இந்தியாவின் காலநிலைக்கேற்ப வளரக்கூடிய செடிகள் என்று சில உள்ளன. ஏனெனில் சில செடிகளுக்கு சரியான ஈரப்பதம் மற்றும் அளவான வெப்பநிலை மட்டும் தேவைப்படும், சில செடிகள் எந்த காலநிலையிலும் வளரக்கூடியதாக இருக்கும். அதிலும் இந்தியாவின் வெதுவெதுப்பான காலநிலைக்கு ஏற்ப நன்கு வளரும் செடிகளை பெரும்பாலான வீடுகளில் வளர்க்கின்றனர்.

அத்தகைய செடிகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து, உங்கள் வீட்டிலும் வைத்து வளர்த்து மகிழுங்கள்.


துளசி
இந்தியாவின் பெரும்பாலான தோட்டத்தில் வளர்க்கும் செடிகளில் துளசியும் ஒன்று. இதனை கடவுளாக மதித்தும் சிலர் வளர்க்கின்றனர். இத்தகைய செடிக்கு போதுமான நீர் அவசியம். மேலும் இதற்கு நேரடியான சூரியஒளியை விட, நிழலில் வெதுவெதுப்பான நிலையில் நன்கு வளரும்.



சாமந்தி
பூஜைக்கு பயன்படுத்தும் சாமந்தி செடியையும் தோட்டத்தில் வளர்ப்பார்கள். இதற்கு கருப்பு மண் மற்றும் பிரகாசமான சூரியஒளி மிகவும் அவசியம்.




மணி பிளாண்ட்
வீட்டில் எளிதில் வளர்க்கக்கூடிய செடிகளில் மணி பிளாண்ட் முக்கியமானது. அதற்கு இந்த செடியின் சிறிது தண்டுடன் கூடிய இலையை செடியிலோ அல்லது மண்ணிலோ புதைத்து வீட்டிற்குள்ளேயே வளர்க்கலாம், மேலும் இதற்கு அதிகப்படியான தண்ணீர், சூரிய வெளிச்சமில்லா இடத்திலும் வளர்க்க வேண்டும்.




செம்பருத்தி
இந்தியாவில் தோட்டத்தில் வளர்க்கும் பூச்செடிகளில் செம்பருத்தி பிரபலமானது. இதற்கும் செடியின் சிறு பகுதியை வைத்தாலே நன்கு எளிதில் வளரும். இந்த செடிக்கு நிறைய சூரியவெளிச்சமும், ஒரு நாளைக்கு இரண்டு முறை தண்ணீரும் ஊற்ற வேண்டும்.




ரோஜா செடி
இந்தியாவில் மிதமான குளிர்காலம் ஆரம்பிக்கும் போது வளரும் செடிகளில் சிறந்தது ரோஜா செடி. அதற்கு கோடைகாலம் முடியும் நேரத்தில், ரோஜா செடியின் தண்டை மண்ணில் புதைத்து, வளர்த்து வந்தால், ரோஜா செடியானது குளிர்காலத்தில் அழகாய் பூத்துக் குலுங்கும். இதுவும் இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் வளர்க்கும் செடிகளுள் ஒன்று.




மல்லிகை
மல்லிகையானது கொடியானது நன்கு கொத்தாக, பச்சை நிற இலைகளின் இடையே ஆங்காங்கு வெள்ளை நிற பூக்கள் பூத்துக் குலுங்கும். இந்த கொடியை, நேரடியான சூரிய வெளிச்சம் இல்லாத இடத்தில் வைத்து, அளவான தண்ணீரை ஊற்றி வளர்த்தால் போதும்.




வாழைமரம்
பொதுவாக வாழைமரத்தை இந்தியாவில் ஒரு குழந்தை போன்று வளர்ப்பார்கள். மேலும் இந்த வாழைமரத்தை வீட்டில் வைப்பதால் நிறைய நன்மைகள் கிடைக்கும் என்பதாலேயே பலர் இதனை வீட்டில் வளர்க்கின்றனர்.




போகெய்ன்வில்லே (Bougainvillea)
இந்தியாவின் பெரும்பாலான வீடுகளில் இந்த செடியை வீட்டின் முன் வைத்து,, வீட்டை அலங்கரிக்கும் விதமாக வளர்ப்பார்கள். இது ஒரு குறுந்தாவரம். இதற்கு அவ்வளவாக தண்ணீரானது தேவைப்படாது. இதன் பூக்களைப் பார்த்தாலே பேப்பர் போன்று தெரியும்.



சூரியகாந்தி
வருடம் முழுவதும் நன்கு வளரும் பூச்செடிகளில் சூரியகாந்தி முக்கியமானது. அதிலும் இந்த சூரியகாந்தி பூவின் நடுவே உள்ள விதைகளை தோட்டத்தில் போட்டால், அவை நன்கு செழித்து வளரும். மேலும் இதற்கு அவ்வப்போது தண்ணீர் ஊற்ற வேண்டும். அதற்காக அளவுக்கு அதிகமாக ஊற்றிவிட வேண்டாம்.




தாமரை
சில வீடுகளில் தாமரையை வளர்ப்பார்கள். இது எளிதில் வளரக்கூடியது. இது தண்ணீரில் வளரக்கூடிய ஒரு நீர்த்தாவரம்.




Top 10 Common Indian Garden Plants


Indian garden plants are rich in variety just like the diverse culture of our country. Usually, flora and fauna grow better in warm weathers than frosty climate. That is why there are many common garden plants that thrive in the hot tropical weather of India. Indian garden plants often have religious significance too. For example, the basil plant is considered holy by the Hindus. That is why it is a fairly common Indian garden plant that is seen in a majority of homes.

Most of the common garden plants grown in the Indian subcontinent are also flowering plants. Actually Indians have a huge fetish for blooming flowers and thus, you will see a fragrant garden in most of homes. Topical flowering plants are colourful and vibrant. So you will see many tropical plants with colourful blooms at any average Indian household.

Indian garden plants like warm weather and often bloom in the spring. We do not have a very cold winter in India; in fact most parts of the country have just 3 seasons namely summer, monsoons and spring. Here are some of the commonest Indian garden plants that are easy to grow under tropical conditions.

Basil or Tulsi: Basil is a one of the commonly grown garden plants in India due to its religious significance. It is usually planted as saplings and need plenty of water. It cannot stand direct sunlight but likes warm weather.

Marigold Plant: Marigold is also a flower that is used in pujas and religious ceremonies. This plant too is planted as a sapling. It needs humus-rich black soil and plenty of bright sunshine.

Money Plant: This is one of the easiest plants to grow at home. You just need a stalk of money plant and put it in water or soil. This is an indoor plant. It needs lots of moisture and almost no sunlight.

Hibiscus: Plant Hibiscus plants are very common in India and they too have religious significance in Hinduism. Saplings are widely available and the plant is easy to grow. This plant need lots of sunshine and water twice a day. You need to prune it often to keep it in a flowering condition.

Rose Plant: Rose plants are best for the light winters in India. You must plant them at the end of summer and allow them to get the benefit of the Indian monsoons. Come winter, roses will bloom and make your garden fragrant.

Night Jasmine: Jasmine can be planted as a tree or plant. Jasmine is a fussy plant. It likes indirect sunlight and moderate watering.

Plantain Plant: Plantain basically means banana plant. You would be surprised to know that banana plants can be grown in decorative ways too. They propagate through the stem and flower just once in their lifetime.

Bougainvillea: Bougainvillea is a climber plant. It grows like a bush on top of walls and gates. This flowering shrub does not need too much water or care. It grows at a breakneck speed and can soon turn wild. So you need to prune your bougainvillea very often.

Sunflower: For a country that gets sunshine throughout the year, sunflowers are the ideal garden plant. Sunflowers are grown from seeds as they sprout easily. You need to water your sunflower generously but not too much. These plants have weak stems and thus sometimes need support from stakes.

Fern: The warm weather in India supports ferns very well. We can see many kinds of ferns in India but the commonest is oriental water fern.

Lotus: The lotus is a flower that is considered a sign of purity in India. It is used in the pujas of Goddesses. Lotus is fairly easily to grow and most often grows in the wild. All you need to grow lotus is a pool of water.

Thanks




Sunday, 17 March 2013

துளசி செடியை வளர்க்க - tips care holy basil plant


துளசி செடியை செழிப்பாக வளர்க்க சில டிப்ஸ்


Tips To Care For Holy Basil Plant

இந்துக்களுக்கு துளசி செடி ஒரு புனிதமான ஒன்று. மேலும் இந்த செடியை விஷ்ணு பகவானுக்கு நிகராக மதிப்பளித்து வருகின்றனர். இத்தகைய செடியை பல இந்துக்கள் வீட்டில் வளர்த்து வருகின்றனர். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் இந்த செடி சில வீடுகளில் வாடி வெறும் குச்சி மட்டும் இருக்கும். இதற்கு சரியான பராமரிப்பானது கொடுக்கவில்லை என்று அர்த்தம். என்ன தான் செடியை கடவுளாக நினைத்து மதித்து வளர்த்தாலும், முறையான பராமரிப்பு இருந்தால் மட்டுமே நன்கு செழிப்புடன் வளரும்.

The basil plant is holy to the Hindus. This is because, Tulsi plant (basil) is the wife of Lord Vishnu. There are many other reasons why the basil plant is considered holy. So almost every Indian household has a Tulsi plant and need to know how to care for a holy basil plant. You may have noticed that it is very easy to grow basil plants. However, caring for a basil plant is very difficult.

அதிலும் துளசி செடிகளில் பல வகைகள் உள்ளன. இவை புனிதமானது மட்டுமின்றி, அதற்கேற்றாற் போல் பல நோய்களை குணமாக்கவும் வல்லது. எனவே இத்தகைய புனிதமான செடியை செழிப்பாக வளர்ப்பதற்கு, என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று பார்ப்போமா!!!

Basil usually grows in the wild too, but still it is a plant that has many specific requirements. You need to learn some specific things to care for a basil plant. Here are some tips that can help you nurture your holy basil plant properly.




tips care holy basil plant

* துளசி செடிக்கு நேரடியான சூரிய வெளிச்சம் ஆகாது. எனவே துளசிச் செடியை சூரிய வெப்பம் நேரடியாக படும் இடத்தில் வைத்து வளர்க்காமல், அளவாக வெயில் படும் இடத்தில் வைத்து வளர்க்க வேண்டும்.

* துளசி செடிக்கு அதிகப்படியான ஈரப்பசையானது மிகவும் பிடிக்கும். எனவே கோடைகாலமாக இருந்தால், ஒரு நாளைக்கு 3 முறையும், குளிர்காலமாக இருந்தால், ஒருநாளைக்கும் இரண்டு முறையும் தண்ணீர் ஊற்ற வேண்டும். ஒரு வேளை துளசிச் செடியானது சூரிய வெளிச்சம் அதிகம் உள்ள இடத்தில் வைத்தால், அதற்கு இன்னும் அதிகப்படியான நீரானது தேவைப்படும்.

* துளசி செடிக்கு, ஈரப்பசையை தக்க வைக்கும் மண் மிகவும் அவசியம். எனவே தான் துளசி செடியானது பெரும்பாலும் களிமண்ணில் வளர்கிறது. ஏனெனில் மண்ணிலேயே களிமண் தான் அதிகப்படியான ஈரப்பசையை தக்கக் வைக்கக்கூடியது.

* துளசி செடியை செழிப்புடன் வளர்ப்பதற்கு எந்த ஒரு கெமிக்கல் உரம் தேவையில்லை. ஆனால் செடியை வைப்பதற்கு முன், அதற்கு ஈரத்தை தக்கவைக்கும் ஈர வைக்கோலை வைத்து, பின் மண்ணை போட்டு, செடியை வைக்க வேண்டும். இதனால் செடியானது வறட்சியடையாமல் இருக்கும். சொல்லப்போனால், துளசி செடிக்கு, அந்த வைக்கோல் கூட தேவையில்லை. அது இல்லாமலேயே நன்றாக துளசிச் செடி வளரும்.

* துளசி செடியில் பூக்கள் வளர ஆரம்பித்துவிட்டால், துளசிச் செடியின் இலையிலிருந்து வரும் வாசனை மட்டும் போவதில்லை, அதன் வளர்ச்சியும் தான் தடைப்படும். எனவே செடியில் பூக்கள் வளரை ஆரம்பித்துவிட்டால், அந்த பூக்களை அகற்றிவிட வேண்டும். முக்கியமாக, பூக்கள் மலரும் வரை காத்திருக்காமல், அது மொட்டாக இருக்கும் போதே அகற்றிவிட வேண்டும்.

* துளசி செடிக்கு எந்த ஒரு பூச்சிக்கொல்லி மருந்தும் தேவையில்லை. ஏனெனில் அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மையானது, செடியை பூச்சிகள் தாக்காமல் தடுக்கும்.

இவையே துளசி செடியை வளர்ப்பதற்கான சில டிப்ஸ். வேறு ஏதாவது டிப்ஸ் உங்களுக்கு தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Partial Sunlight
Basil is a tropical plant but it still dislikes direct sunlight. So, do not keep your basil plant at a spot where the sun is beating down. Indirect sunlight is best for basil plants.


Watering
Basil likes lots of moisture in the soil. So you need to water it at least 3 times daily in summers and twice in winter. If the basil plant is out in the sun, then it needs more water than the indoor plants.


Soil
Basil needs soil that can retain moisture. That is why black soils with high amounts of clay matter are good for tulsi plants. The most basic thing you must know to care for basil plants is that they need to be in a moist soil that can keep them well supplied with water for many hours.


Fertilisation
There is no need for adding chemical fertilizers to basil plants. All you have do is add some mulch to the soil before planting it. Renew the mulch every year so that the soil does not get depleted. However, you need not overdo the fertilising part because the plant will continue to grow even without mulch. But the flavour of the basil leaves may reduce. If you want aromatic basil, then you need to give organic manure.


Pruning
Once the basil plant starts sprouting flowers, not only it will its leaves lose the flavour but it will also stop growing. Moreover, the plant starts putting all its resources to making the flowers bloom. So, prune away the flowers as soon as they appear.


Pesticides
It is almost unheard of for a basil plant to develop pests. As basil has anti bacterial properties, it it does not get infected with pests. In short, basil plants do not need pesticides.


These are some simple tips to take care for basil plants. If you have something more to add, do drop a comment.

Thanks