Flash News

Friends Tamil Chat

Search This Blog

Showing posts with label எப்படி. Show all posts
Showing posts with label எப்படி. Show all posts

Monday, 13 May 2013

உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்க - Improve blood circulation


உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குவதற்கான எளிய வழிகள்


உடலில் இருக்கும் இரத்தத்தின் ஓட்டமானது மிகவும் முக்கியமான ஒன்று. ஏனெனில் இரத்த ஓட்டத்தில் ஏற்படும் சீர்குலைவு பல்வேறு நோய்களுக்கு வித்திடும். இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற பல்வேறு நோய்கள் இரத்த ஓட்ட குறைபாடுகளால் ஏற்படுகின்றன.

தலைவலி, கைகள் மற்றும் கால்கள் குளிர்ந்து போவது, அடிக்கடி ஏற்படும் தசை பிடிப்புகள், கடினமான தசைகள், பலவீனமாக உணர்வது, சலசலக்கும் காதுகள், ஆறாமல் இருக்கும் காயங்கள், நினைவிழப்பு ஆகியன இரத்த ஓட்ட குறைபாடுகளுக்கு அறிகுறிகளாக கருதப்படுகின்றன. இந்த அறிகுறிகளை லேசாக உணரும் போது, நாம் சந்தேகிக்க தொடங்க வேண்டும். இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யும் போது, உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு, நீரிழிவு சிக்கல்கள், ஆண்மையின்மை, மாரடைப்பு மற்றும் இறப்பு போன்ற மிகவும் தீவிரமான மற்றும் ஆபத்தான விளைவுகள் உண்டாகலாம்.

நம் உடலில் ஒரே சீராக இரத்த ஓட்டத்தை நிலை நிறுத்துவதற்கு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை தேர்ந்தெடுக்க வேண்டும். கொழுப்பு மிகுந்த உணவை குறைத்தல், நார் பொருட்களை அதிக அளவில் உட்கொள்ளுதல், வழக்கமான உடற்பயிற்சி, மன அழுத்தத்தை குறைத்தல் மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் இயற்கையான கூடுதல் பொருட்களை எடுத்துக் கொள்வது ஆகியன மிகவும் முக்கியமானவை. இப்போது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் சில டிப்ஸ்களைப் பார்ப்போமா!!!


குளியல்
குளிர்ந்த நீர் குளியல், இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் ஒரு சிறந்த வழியாகும். பாதிக்கப்பட்ட பகுதியை வெந்நீரில் கழுவும் போதும் அல்லது ஒத்தடம் கொடுக்கும் போதும், உடலில் ரத்த ஒட்டம் அதிகரிக்கும். ஒரு உடனடி குளிர் குளியல், உள்ளுறுப்புக்களில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். குளியலின் போது, உடலில் ஏற்படும் நடுக்கம், இரத்தம் சருமம் வழியே பாய்ந்து பிராண வாயுவை விட்டுச் செல்கிறது, என்பதற்கு அறிகுறியாகும். இந்த குளிர் நீர் சிகிச்சை முறைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டால், நல்ல பலன்கள் கிடைக்கும்.




சிவப்பு மிளகாய்
சிவப்பு மிளகாய், இரத்த ஓட்டத்தை சீராக வைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. அதுமட்டுமின்றி, இது இதயத்தை பலப்படுத்துகின்றது. தமனிகளின் அடைப்பை நீக்குகின்றது. அத்துடன் எடை இழப்பிற்கும் உதவி புரிகின்றது.




மூச்சு பயிற்சி
பெரும்பாலான மக்கள், மோசமான சுவாச பழக்கங்களை கொண்டிருக்கின்றனர். நம்முடைய நுரையீரலில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இரத்த ஓட்டத்தை மேம்படுத்த, நுரையீரலின் முழு திறனையும் பயன்படுத்த வேண்டும். அதற்கு, ஆழ்ந்து சுவாசிக்க வேண்டும். இது இரத்தம் அதிக அளவு பிராணவாயுவை பெற வழி வகை செய்யும். அத்துடன், கழிவு பொருட்களை நீக்கவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவும்.




மன அழுத்தத்தை தவிர்த்தல்
மன அழுத்தம், இரத்த ஓட்டத்தில் சீர்குலைவை ஏற்படுத்தும் மிக முக்கியமான மற்றும் முன்னணி காரணங்களில் ஒன்றாகும். ஒருவர் மன அழுத்தத்திற்கு ஆட்படும் போது, முக்கிய உறுப்புகளுக்கு மட்டுமே ,ரத்த செல்லும். மற்ற உறுப்புகளுக்கு செல்லாது. இது மோசமான பின் விளைவுகளை உருவாக்கும். கைகள் மற்றும் கால்கள் இதனால் மோசமாக பாதிக்கப்படும். எனவே, இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதற்கு, மன அழுத்தத்தைத் தவிர்ப்பது மட்டுமே ஒரே சிறந்த வழியாகும். தினமும் உடற்பயிற்சி செய்வது, ஆழ்ந்து சுவாசிப்பது மற்றும் தியானம் செய்வது போன்ற எளிய நடைமுறைகள், மன அழுத்தத்தை குறைத்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.



பாதத்தை உயர்த்துதல்
குறுகிய கால அளவிற்கு பாதத்தை உயர்த்துதல், இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் பயனுள்ள வழி ஆகும். படுக்கையில் படுத்துக் கொண்டு காலடியில் ஒரு தலையணை வைப்பதன் மூலம் இதை செயல்படுத்தலாம். இது இரத்தம், தலையை நோக்கி பாய்வதற்கு வழி வகுக்கும். இந்த செயல்முறையில், தரையில் படுத்துக் கொண்டு, ஒரு நாற்காலி அல்லது சோபா மீது கால்களை மாற்றி மாற்றி வைக்க வேண்டும். அவ்வாறு செய்வது, இரத்தம் கால்களை விட்டு நீங்குவதற்கு உதவும்.




உடற்பயிற்சி
உடல் உழைப்பு மட்டுமே இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும் மிக நிச்சயமான வழியாகும். பெரும்பாலான மக்கள், இன்று எந்த ஒரு உடல் உழைப்புமின்றி உட்கார்ந்த நிலையிலேயே பணியாற்றுகின்றனர். வழக்கமான, உடற்பயிற்சி, நடைபயிற்சி, நீச்சல் மற்றும் ஓட்டப்பயிற்சி ஆகியன இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். எனினும், நடை பயிற்சியின் போது, நிலையான வேகத்தில் ஆரம்பித்து படிப்படியாக வேகத்தை அதிகரிக்க வேண்டும்.




சமச்சீர் உணவு
உட்கொள்ளும் உணவு, இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு ஆரோக்கியமான உணவு பழக்கம் என்பது கொழுப்பு மிகுந்த உணவை குறைத்துக் கொள்வது தான். இதனால் இரத்த ஓட்டம் உடலில் அதிகரிக்கும். குறைந்த கொழுப்பானது, இரத்தம், சிறிய நாளங்கள் வழியாக எளிதாக செல்ல உதவுகிறது. உணவில் நார்ச்சத்து மிகுந்த உணவை உட்கொள்வது, கொழுப்பை குறைத்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும்.





How to Increase Blood Flow

Poor circulation and blood flow often cause a tingling sensation in the hands and feet. You may also notice that your feet and hands fall asleep often. To increase blood flow to your entire body and these extremities, it is important to implement a few daily activities, which readily allow oxygen to flow throughout the body more efficiently. Follow these tips to decrease poor circulation and increase blood flow.

1. Participate in regular exercise at least 4 to 5 days a week. Get into the habit of finding activities you enjoy doing. Any type of physical activity that gets your blood pumping is ideal. If performing daily chores, such as vacuuming, mopping, dusting or scrubbing counters helps you burn calories and makes you sweat, do this activity up to 3 times a week. For the other 2 or 3 days, find other activities like walking, jogging, running or aerobics to get you moving. Walking at a mall may be convenient.

2. Walk instead of driving to stores near your home. While having a car is convenient, it can lead to limited activity. If you need to do some shopping, walk to the nearest store instead of driving. Carry the bags of groceries with you, which will help you burn more calories.

3. Resist parking the car in a parking space near the entrance of the store. Each step counts. Park the car further away from the entrance of the store and get in some serious walking.

4. Take the stairs before and after work, plus at lunch. Take an elevator part of the way, if necessary.

Heat:

5. Fill the bathtub with steaming hot water. Check the water before attempting to get in. The water should be hot, but should not be scalding hot. Hot water helps to relax tense muscles, to increase blood circulation. It also increases blood circulation and allows oxygen to flow more smoothly throughout the body.

6. Turn on the hot water in the shower. Check the temperature of the water before getting in the shower. Breathe in the steam from the shower. Problems with sinuses and chest congestion can also interfere with oxygen flow in the body. The steam helps to loosen congestion, opens nasal passages and allows you to breathe better, which helps with oxygen flow and blood circulation.

7. Massage areas of the body that are tight or tense. Inflammation from these muscles can block the pathways that oxygen uses to travel within the body. This often interferes with blood circulation and blood flow. By massaging these muscles, you will release natural occurring toxins within the body and achieve better blood circulation.

TIPS

  • Onions and garlic have been shown to not only improve blood flow, but also relax the muscles in the body.
  • Spices and herbs like cayenne pepper, ginger and garlic all help to increase blood circulation. These spices also contain tincture, which is easily absorbed into the body. Tincture helps       reduce cholesterol levels, cleanses the blood, prevents heart disease and fights against atherosclerosis.
  • Eat spicy foods, which contain capsaicin from hot peppers (for example cayenne pepper) in them. This chemical increases blood flow throughout the body. This is why many people become   flushed when they eat certain spicy foods.
  • Ask your doctor how much niacin he may recommend; it's a quite harmless B vitamin; get the version that causes flushing and requires increasing amounts as you become accustomed to it (start with 250mg tablet -- or 500mg if it is timed release) to be able to flush. There is, also, a prescription drug using niacin with a controlled heart medication which is called called Niaspan (Trademark), but it has several serious warnings.
Tell your comments here
 
Thanks

Sunday, 12 May 2013

அதிகமா வியர்க்குதா? - how to deal with excessive sweating


வியர்வையின் வேதனையிலிருந்து தப்பிக்க சில டிப்ஸ்...


பொதுவாக கோடையில் அதிக அளவில் வியர்வையானது வெளிப்படும். அதிகமாக வியர்ப்பது சங்கடம் கொடுக்க கூடியது. அதுவும், பயணத்தின் போதும், வெளியிடங்களில் தங்கும் போதும், ஒரு நாளுக்கு ஐந்து முறை உடை மாற்ற முடியாத போதும், அல்லது வியர்க்கும் பொழுது அடர்த்தியான மேலுறையை அணியும் போதும் தாங்க முடியாத வேதனை ஏற்படுகின்றது. இத்தகைய வேதனையை தவிர்ப்பதற்கு ஒருசில டிப்ஸ்களை கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, பயன்பெறுங்கள்...


how deal with excessive sweating on holiday

வியர்வையின் வேதனையிலிருந்து தப்பிக்க சில டிப்ஸ்...

* கையில்லா சட்டைகளை வாங்க வேண்டும். அதுவும் சட்டைகளின் ஓரப் பகுதிகள் அக்குளுக்கு மேலே போகாமல் கீழே இருத்தல் அவசியம். இதனால் வியர்வையின் ஈரம் துணிகளின் மேல் தங்கி நமக்கு அசெளகரியம் ஏற்படுத்தாமல் ஆவியாகி வெளியேறி விடும். இவ்வகைச் சட்டைகள் அளவில் சிரியதாய் இருப்பதால், பெட்டிகளிலும் நிறைய அடுக்கலாம். எனவே தேவையானவற்றை வாங்கி புத்துணர்வைப் பெறுங்கள். (ஆடைகளைத் தேர்வு செய்யும் போது காற்றோட்டமான பருத்தி ஆடைகள் போன்ற ஆடைகளை வாங்கவும்.)

* தோல்பட்டையை மூடிக்கொள்வதற்கென சால்வை அல்லது தளர்வான ஆடைகளை வாங்கிக் கொள்ளலாம். இவ்வித ஆடைகளை குளிர் பருவத்தில் கழுத்தை சுற்றி கட்டி கொள்ளவும் பயன்படுத்தலாம். இது போன்று செய்வதால், உடலை மிகுதியான வெப்பமோ, குளிரோ தாக்காமலும் அதிகமாக வியர்க்காமலும் காத்துக் கொள்ளலாம்.

* அதிகமாக வியர்க்கும் இடங்களுக்கு செல்லும் பொழுது மாற்றுத் துணிகளை எடுத்து செல்லவும். அவை ஒரு சட்டை, ஒரு ஜோடி அரைக்கால் சட்டை, அல்லது தளர்வான காலணிகளாகவும் இருக்கலாம். இதில் அவசரத் தேவைக்கான பொருட்கள் அடங்கிய கைப்பை (emergency kit) ஒன்றையும் சேர்த்து கொள்ளலாம். அவற்றில்,

- டியோடரண்ட் (அலுமினியம் சேர்க்காதது)
- முகம் துடைப்பதற்கு டிஸ்யூ பேப்பர்
- ஒரு ஜோடி மாற்றுச் சட்டைகள்
- வியர்வைப் பட்டைகள்
- சிறிது சமையல் சோடா

* துவைத்துப் பயன்படுத்தக் கூடிய அல்லது ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய வியர்வை அட்டைகள் ஆண்களுக்கும், பெண்களுக்கும் என தனித்தனியாக விற்கப்படுகின்றது. அதை இணையம் மூலமாக வாங்கலாம். வை விடுமுறை நாட்களுக்கு மிகவும் ஏற்ற பொருட்கள் என்பதோடு அவற்றைப் பயன்படுத்துவது மிகவும் புத்திசாலித்தனமானது. மேலும் இருக்கும் இடத்தில் நீச்சல் குளம் இருந்தால் தயங்காமல் நீந்தலாம். அது புத்துணர்ச்சியையும், குளிர்ச்சியையும் அளிக்க வல்லது.

* என்ன சாப்பிடுகிறோம்? எப்போது வெளியே செல்கிறோம்? என்பதை கவனிக்கவும். பூண்டு மற்றும் காரமான மசாலாப் பொருட்கள் நிறைந்த உணவை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். அதிகமாக வியர்க்க செய்யும் மது மற்றும் காபி போன்றவற்றை பருகுவதைத் தவிர்க்கவும். நட்பான மற்றும் மனதிற்கு அமைதி நிறைந்த சூழல்களை உருவாக்க வேண்டும். இவை மன அழுத்தம் அடைவதை தவிர்ப்பதோடு, உணர்ச்சிவசப்படாமல் இருக்கவும் உதவும்.

How to Deal with Excessive Sweating ?


Excessive sweating can be an embarrassing problem, especially when travelling or staying abroad when it is not as easy to change your shirt five times a day, or wear a thick jumper over sweat patches. Hopefully these tips may help.

1. Make sure you bring a lot of vest tops that in shape ( on the sides) do not go right up to your armpit. Make sure they are tailored lower so that even if you do sweat, the moisture should just evaporate rather than remain uncomfortably in the fabric. Vest tops are small and you can fit lots of them in a case so bring enough, you will feel more comfortable knowing you can change into something fresh. ( Make sure they are made of something breathable like cotton)

2. Invest in a shoulder wrap, a shawl, or even just use a jumper that you can tie around your shoulders if the weather is cooler. This way your body can regulate its heat without becoming overheated or too cold, which can also cause sweating. You want to try and create a comfortable temperature.

3. Always carry a spare piece of clothing, depending on whereabouts you are most affected by Hyperhydrosis, a shirt, a pair of shorts, or some loose sandals.

4. On that note you may want to make a small emergency kit that includes:

  • Deodorant (No aluminum)
  • Wet wipes
  • a couple of spare shirts
  • Sweat pads
  • a small tub of baking powder.

5. Online you can buy washable or disposable sweat pads for both men and women. They are invaluable to have on holiday or for any time, and are very discreet.

6. If you can swim at all where you are staying, do it so that you will feel more refreshed and chilled.

7. Watch what you eat when you go out, eat nothing that contains too much spice or garlic, and try to limit your caffeine and alcohol intake which can cause over sweating.

8. Try to remain in friendly and relaxed environments if you can, they will be less stressful and you are less likely to get anxious or stressed.

Thanks

Wednesday, 1 May 2013

தொடை சதையைக் குறைக்க சில பயிற்சிகள் - how to reduce heavy thighs


அதிகப்படியான தொடை சதையைக் குறைக்க சில எளிய பயிற்சிகள்


உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க ஏராளமான உடற்பயிற்சி முறைகள் உள்ளன.ஆனால் இந்த உடற்பயிற்சி முறைகள் அனைத்தும் அனைவருக்கும் உகந்ததா? என்றால் நிச்சயம் இல்லை. காரணம் ஒவ்வொரு மனித உடலும் தனித்தன்மையானவை. எனவே உடலுக்கு ஏற்ற சரியான உடற்பயிற்சியை, தகுந்த ஆலோசனையின் பேரில், சரியான முறையில் சரியான அளவில் செய்வது நல்லது.

உடலுக்கு ஒவ்வாத உடற்பயிற்சிகள் சில நேரங்களில் கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும். தொடைப்பகுதியில் சேர்ந்திருக்கும் சற்று அதிகப்படியான சதையைக் குறைப்பதற்கான சில உடற்பயிற்சி முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த பயிற்சிகள் அனைத்தும் அதிகப்படியான தொடை சதையைக் குறைப்பதற்கே, பொதுவாகவே சற்று பருமனான உடல்வாகு கொண்டவர்களுக்கு இந்த பயிற்சிகள் பயன் தராது. சரி, இப்போது பயிற்சிக்குப் போகலாம்.


how reduce heavy thighs

* பாதங்கள் இரண்டிற்கும் 30 செ.மீ இடைவெளி இருக்குமாறு கால்களை வைத்துக் கொண்டு நேராக நிமிர்ந்து நின்று கொள்ளவும்.

* கைகளை இடுப்பில் வைத்துக் கொள்ளவும். கட்டை விரல் இரண்டும் முன்னோக்கி இருக்கட்டும். அதாவது, கட்டைவிரல் முதுகைப் பார்த்தவண்ணம் இல்லாமல், வயிற்றின் மீது இருக்கட்டும்.

* இப்பொழுது இடுப்பை இடமிருந்து வலமாக சுற்றவும். சுமார் 30 வினாடிகள் இதுபோல் இடுப்பை சுற்றவும். பின்னர் அடுத்த 60 வினாடிகள் அதே போல் எதிர் திசையில், அதாவது வலமிருந்து இடமாக சுற்றவும்.

* இதுபோல் மாறி மாறி ஆறுமுறை செய்யவும். இந்தப் பயிற்சி செய்யும்போது பாதம் முழுவதும் தரையில் அழுத்தமாக ஊன்றி இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

* இப்பொழுது அதே நிலையில் நின்றவாறு, வலது பக்க இடுப்பை எவ்வளவு தூரம் முடியுமோ, அவ்வளவு தூரம் முன்னோக்கித் தள்ளவும். அதே நிலையில் இருந்தவாறு, இடுப்பை இடமிருந்து வலமாக 30 வினாடிகளும், பின்னர் வலமிருந்து இடமாக 30 வினாடிகளும் சுழற்றவும். சுற்றி முடித்தவுடன், மறுபடியும் நேராக நின்று கொள்ளவும்.

* இப்பொழுது இடது பக்க இடுப்பை அதே போல் முன்னோக்கித் தள்ள வேண்டும். பின்னர் வலமிருந்து இடமாக 30 வினாடிகளும், இடமிருந்து வலமாக 30 வினாடிகளும் மாறி மாறி சுழற்றவும். முடித்தவுடன் மறுபடியும் நேரான நிலைக்கு வந்துவிடவும்.

* கால்களை நகர்த்தாமல், இப்பொழுது இடுப்பை மட்டும் வலதுபுறமாக சுமார் 15 செ.மீ முதல் 20 செ.மீ வரை தள்ளவும். இதே நிலையில் இருந்தவாறு, உடம்பை இடமிருந்து வலமாக 30 வினாடிகள் வரை சுற்றவும். பின்னர் வலமிருந்து இடமாக 30 வினாடிகள் சுற்றவும். முடித்த பின்னர் இடுப்பை பழையபடி நேரான நிலைக்கு கொண்டு வந்துவிடவும்.

* மறுபடியும் இடுப்பை அதே போல் இடதுபுறமாக 15 செ.மீ முதல் 20 செ.மீ வரை தள்ளவும். இதே நிலையில் உடம்பை இடமிருந்து வலமாக 30 வினாடிகளும், பின்னர் வலமிருந்து இடமாக 30 வினாடிகளும் சுற்றவும். முடித்த பின்னர் இடுப்பை பழையபடி நேரான நிலைக்கு கொண்டு வந்துவிடவும்.

இந்தப் பயிற்சியை நடுவில் இடைவெளி எதுவும் இல்லாமல் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். எவ்வளவு தூரம் இடுப்பை சுற்ற முடிகிறதோ அவ்வளவு சுற்றினால் போதும். அதிக தூரம் சுற்ற முடியவில்லையே என்ற கவலை வேண்டாம். பயிற்சியைத் தொடர்ந்து செய்ய செய்ய நாளடைவில் சுற்றும் தூரம் அதிகரிக்கும்.


How to Reduce Heavy Thighs

Our body is unique to each of us and as a result; alternates in its own variety of movements; some of which create ill health and poor body structure. Each movement is unique within itself and is controlled or limited by the flexibility that exists within the individual.
The following exercise concentrates on the thighs only and is not suitable for a person who is generally overweight.

1. Stand upright with your feet 30cm apart and place your hands on both hips with your thumbs facing forward.

2. Rotate your pelvis in a clockwise rotation for thirty seconds; stop and then rotate in the opposite direction for a further thirty seconds.

3. Repeat the exercise six times. Note: Keep the soles of both feet flat on the ground throughout the entire exercise

4. With the same starting position; push your right hip forward to a point that is comfortable for you and rotate your pelvis in a clockwise rotation for thirty seconds: stop and then rotate in the opposite direction for a further thirty seconds. Note: When complete; return your body to the starting position

5. Push your left hip forward to a point that is comfortable for you and rotate your pelvis in a clockwise rotation for thirty seconds: stop and then rotate in the opposite direction for a further thirty seconds. Note: When complete; return your body to the starting position

6. Without changing the position of your feet; move your pelvis to the right; between 15 to 20cm is sufficient. Note: this is your new starting position.

7. Rotate your body in a clockwise rotation for thirty seconds: taking additional care not to loose your balance. Repeat the exercise in an anticlockwise rotation for a further thirty seconds and when complete; return your pelvis to its centre position.

8. Move your pelvis to the left and follow the steps as outlined in step 7

9. When complete; return your pelvis to its centre position. Exercise complete.

  • The exercise works best when it is completed without interruption
  • The diameter of rotation is dependent on your present physical condition and will increase with practice.

Thanks

Monday, 22 April 2013

பருக்கள் இல்லாத பொலிவான முகத்தைப் பெற - how get clean acne free face



பருக்கள் இல்லாத பொலிவான முகத்தைப் பெற சில வழிகள்


தற்போது முகப்பரு தொல்லைகளால் நிறைய பேர் அவஸ்தைப்படுகின்றனர். அதற்கு எந்த மாதிரியான முயற்சிகளை மேற்கொண்டாலும், சரியான தீர்வு கிடைப்பதில்லை. எனவே பலர் இத்தகைய பருக்களை போக்குவதற்கு கெமிக்கல் கலந்த பொருட்களை விட, இயற்கை முறைகளையே நாடுகின்றனர்.


அத்தகையவர்களுக்காக சிறப்பான தோற்றம் அளிக்கும் சருமத்தைப் பெற இந்த கட்டுரை வழிகாட்டும். ஆகவே எதிர்பார்த்து வரும் பளிங்கு போன்ற முகத்தோற்றம் பெற பின்வரும் வழிகளை கடைப்பிடித்து வாருங்கள்.

how get clean acne free face
வழிகள்:
1. சாலிசிலிக் அமிலம் அடங்கிய திரவத்தைக் கொண்டு முகத்தை கழுவ வேண்டும். இதனால் இந்த அமிலம் முகப்பருவிலிருந்து விடுதலை பெற பெரும் உதவி புரியும்.
2. ஆப்ரிகாட் பழத்தை வைத்து முகத்தை ஸ்கரப் செய்தால், அது இறந்த செல்களை நீக்கி சிறந்த முகத்தோற்றத்தை தரும்.
3. க்ரீன் டீயை வைத்து ஸ்கரப் செய்தாலும் முகம் சிவத்தலையும், தோல் உடைதலையும் தவிர்க்கலாம்.
4. வெள்ளரிக்காயை அரைத்து முகத்திற்கு மாஸ்க் போன்று உபயோகித்தால், அது முகத்தை மேம்படுத்தி முழு நிறைவாக்கும். அதிலும் அறை வெப்பநிலையில் காய விடுங்கள். காற்றாடிக்கு முன் நின்று காய வைத்தால் அது எந்தப் பயனையும் தராது. காய்ந்த பிறகு அதை உரித்து எடுத்து, தண்ணீர் கொண்டு கழுவி எடுக்க வேண்டும். முகப்பருவின் மீது பனிக்கட்டி வைத்து ஒத்தடம் கொடுத்தாலும், முகப்பருவின் அளவை அது குறைக்கும்.
5. காட்டன் சிறிது எடுத்துக் கொண்டு, பெராக்சைடில் நனைத்து முகப்பருவின் மீது தடவுங்கள். இது எரிச்சலை தரலாம், ஆனால் நல்ல மாற்றத்தை தரும். விருப்பபட்டால் ஆல்கஹாலை கூட இவ்வாறு பயன்படுத்தலாம். ஆனால் அது அதிக எரிச்சல் தரும் என்று பரவலாக கூறப்படுகிறது.
6. ஸ்ட்ரிடெக்ஸ் (Stridex) எனப்படும் துடைப்பான்களை உபயோகப்படுத்தலாம். இது சாலிசிலிக் அமிலம் மற்றும் பிற நல்ல வினைப் பொருட்களுடன் கூடிய வட்டவடிவிலான பஞ்சு. இதில் ஆல்கஹால் அற்ற வகைகளும் கிடைக்கின்றன. இது எரிச்சலை தராதது. ஒவ்வொரு நாள் இரவும் இதை முகத்தின் மீது காயும் வரை வைக்கவும். இது முகத்தை அழுத்துவது போன்ற உணர்வை ஏற்படுத்தினாலும், முகத்திற்கு சிறந்த முறையில் உதவும். ஆரம்பத்தில் இது முகத்தில் வறட்சியை ஏற்படுத்தலாம். தொடர்ந்து உபயோகிக்க சருமம் இதற்கு பழக்கப்பட்டுவிடும்.

குறிப்புகள்:
- முகத்தை தொடுவதற்கு முன் கைகளை நன்றாக கழுவுங்கள்.
- சமச்சீரான உணவு உட்கொள்வது மாசற்ற சருமத்தை பேண உதவும்.
- மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டும். அது முகப்பருவை உண்டாக்கலாம்.

எச்சரிக்கை:
* அனைத்து முறைகளையும் ஒரே நாளில் செய்யக்கூடாது. வாரம் ஒருமுறையோ அல்லது சில தினங்களுக்கு ஒருமுறையோ செய்ய வேண்டும்.
* ஒரே நாளில் முகப்பரு மறையும் என்று எதிர்பார்க்க வேண்டாம். அதற்கு சில காலம் பிடிக்கும்.
* கையைக் கழுவாமல் முகத்தை தொட வேண்டாம்.
* பருவை கிள்ளிவிடவோ, உடைக்கவோ முயல வேண்டாம். அது ஆறாத வடுவாய் அமைய நேரிடும்.



Cure Back Acne Naturally To Get Clear Skin


Pimples and acne are not just limited to face but also the body especially chest, neck, upper shoulders and back. Back acne commonly known as bacne is severe and more common among men. Like other forms of acne, bacne is also caused by hormones, which when mixes with the oil producing glands leads to clogged pores and outbreaks on the surface of the skin.

Lets check out the remedies to cure back acne naturally:

Apple cider vinegar: It is an effective remedy to cure back acne. The astringent properties of the vinegar helps treat back acne. Apply the apple cider vinegar, diluted with water to the acne effected skin at least twice a day. Increase the strength of the solution in equal amounts after a week. If you feel skin irritation or burn then stop applying immediately.

It is very important to keep the skin clean and free from sweat. Mostly acne is caused due to sweating. Wear only cotton clothes to dry up the sweat from it immediately. 

Use an anti-bacterial acne soap twice a day to wash the back and treat acne.

Exfoliate the back skin with sugar based scrub once in a week as they are mild on the thick back skin. If you face any reaction, stop exfoliating on a weekly basis.

Wear loose fitting clothes to help the skin breathe prevent building up perspiration. This is one of the remedies to cure back acne naturally.

Apply aloe vera after washing the skin to get rid of redness, scars and swellings caused due to acne.

Massage the back with lavender essential oil every alternate days to treat back acne. It is a natural antiseptic used to cleanse the tissue.

By applying tea tree oil on the affected skin area, you can cure back acne naturally. Tea tree oil keeps the skin supple and hydrated while controlling the spread of acne bacteria.

Have a healthy diet and lifestyle. Avoid eating oily and junk food to cure back acne naturally. Acne diet is highly recommended to treat acne. Use these remedies to cure back acne naturally and get clear skin.


Thanks

Sunday, 7 April 2013

மனச்சோர்வை சமாளிக்க - deal with stress



மனச்சோர்வை சமாளிக்க சில ஈஸியான வழிகள்

எப்படிப்பட்ட வலிமையான மனிதரையும், மனச்சோர்வு எளிதில் வீழ்த்திவிடும். ஆனந்தமும் வேதனையும் கலந்தது தான் வாழ்க்கை. ஆனாலும் மனச்சோர்வுடன் இருக்கும் போது நம் வாழ்க்கையில் நிகழ்ந்த சோகமான காரியங்கள் மட்டுமே நினைவுக்கு வரும். நண்பர்கள், உறவினர்கள், உடன் பணியாளர்கள், அண்டைவீட்டார், கடவுள் நம்பிக்கை இருக்கிறவர்களுக்கு கடவுள் என நம்முடைய சோகங்களையும், மகிழ்ச்சிகளையும் பகிர்ந்து கொள்ளும் பலர், நம் உலகத்தில் இருக்கிறார்கள். மனச்சோர்விலேயே உழன்று கிடப்பதால் சாதிக்கப் போவது ஒன்றும் இல்லை. அதிலிருந்து வெளியே வந்தால், நம்மை போல மனச்சோர்வில் அகப்பட்டவர்களுக்கும் உதவலாம். இதனால் நம்மை போன்ற பிற மனிதர்களுடைய வாழ்க்கையும் இனிமையாக இருக்க வகை செய்யலாம்.

இத்தகைய மனச்சோர்வில் இருந்து வெளிவருவது எப்படி என்பது குறித்த சில முக்கியமான குறிப்புகளை இங்கே கொடுத்து இருக்கிறோம். நீங்களோ அல்லது உங்களுக்கு அறிமுகமானவர்களோ மனச்சோர்வில் இருந்தால், இவற்றை படிக்குமாறு கூறி, வாழ்வை இனிமையாக்குங்கள்.



உடற்பயிற்சி செய்வது
மன அழுத்தத்தை நீக்க சிறந்த வழி உடற்பயிற்சி. இது நல்ல உடல் அமைப்பை கொடுப்பது மட்டுமின்றி, நேரிடையான சிந்தனைகளையும் அதிகரிக்கின்றது. உணர்வுகளை சீர்படுத்துகின்ற செரோடொனின் மற்றும் டெஸ்டோஸ்டெரோன் ஆகியவற்றை சுரக்க உடற்பயிற்சி உதவுகின்றது. அதோடு மனச்சோர்வு அளிக்கும் சிந்தனைகளையும் ஒதுக்கிவிடுகின்றது.

உதவி கேட்பது
வாழ்க்கையின் கடினமான சூழ்நிலைகளை கையாள உதவி கேட்பதில் எந்த அவமானமும் இல்லை. வாழ்க்கையின் சுமைகளை தனியாக சுமக்க வேண்டும் என்று யாரும் எதிர்பாப்பது இல்லை. ஆகவே தாய், தந்தை, துணைவர், உடன் பணியாளர் அல்லது நண்பர் இடம் இருந்து உதவி கேட்பது உணர்வுச் சுமையை ஓரளவு குறைக்கும்.


சமச்சீர் உணவு
பழங்கள், காய்கரிகள், மாமிசம், தானியங்கள் மற்றும் கார்போ ஹைட்ரேடுகள் ஆகிய ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுதல், சிந்தனை சிதறாமல் இருக்க உதவுகின்றன. சமச்சீர் உணவு உடல்நலனையும், மனநலனையும் சீர்படுத்துகின்றது.

சுய விழிப்புணர்வு
வாழ்க்கையின் நிகழ்வுகளை சரியாக புரிந்து கொள்ள முடியாமல், தங்களை அளவுக்கு மீறி அழுத்துவதால் மக்கள் பொதுவாக மனச்சோர்வு அடைகிறோம். எனவே சரியாக தம்மை புரிந்து கொண்டு, அதை சந்தோஷமாக விரும்பி செய்தால், மனச்சோர்வானது நீங்கும்.



எடை குறைத்தல்
மனச்சோர்வுக்கு அதிகமான எடை பிரச்சனையாக இருந்தால், எடையை குறைக்க முயல்வது ஒரு நல்ல தீர்வைத் தரும். மேலும், உடல் வலிமை ஆரோக்கியத்தையும், சுய கருத்துக்கும் நேர்மறையான சிந்தனையை கூட்டுகின்றது.


நண்பர்கள்
நல்ல நண்பர்கள் தேவையான ஆறுதலையும், வாழ்க்கையின் சோர்வூட்டும் சூழ்நிலையில் இருந்து வெளியே வருவதற்கான ஆலோசனைகளையும் வழங்குவார்கள். மேலும், தேவையுள்ள நேரத்தில், சொல்வதை காதுகொடுத்து கேட்கும் நண்பர் இருந்தால், மனதில் இருக்கும் சந்தேகங்களும், எதிர்மறையான சிந்தனைகளும் முற்றிலும் களைந்துவிடும்,.


டைரி எழுதுவது
தினசரி உணர்வுகளை எழுத்து மூலமாக பதிவு செய்வது சுய பரிசோதனை செய்வதற்கும், ஆராய்வதற்கு ஒரு சிறந்த வழி ஆகும். இவ்வாறு வாழ்க்கையை குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்பதை அனுதினமும் பதிவு செய்தால், மனச்சோர்வில் இருந்து விடுபட ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்.


எதிர்மறையான மக்களிடம் இருந்து விலகி இருப்பது
தொடர்ச்சியாக பிறரை குறைத்து பேசுகிறவர்களோடு இருக்க யாருமே விரும்ப மாட்டார்கள். அப்படிப்பட்ட மக்களிடம் இருந்து விலகி இருப்பது மன அமைதியையும், சமாதானத்தையும் கொடுக்கும்.

வேலையை விட்டு விடுதல்
பிரச்சனைகளின் வேர் வேலையில் இருந்தால், அதை விட்டுவிடுவது மன அமைதியை கொடுக்கும். தனிப்பட்ட மகிழ்ச்சியையும் திருப்தியையும் விட்டுக் கொடுக்காமல், குறிக்கோளை நிர்ணயம் செய்ய வேண்டும். அதற்கு வேலை ஒரு தடையாக இருந்தால், அதை விட்டு விடுங்கள்.

தனிமையாக இருப்பதை தவிர்ப்பது
மனச்சோர்வோடு இருக்கும் போது, தனிமையில் இருந்தால், மனம் மேலும் சோர்வுடன் தான் இருக்குமே தவிர, அமைதியடையாது. அதற்காக எப்போதுமே கூட்டமாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் அவ்வாறு நண்பர்களுடன் சேர்ந்து இருந்தால், அவை முழுமையான தீர்வை கொடுக்காவிட்டாலும், மனச்சோர்வு தரும் சிந்தனைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பும்.

சுற்றுலா செல்லுதல்
எதிர்மறையான சிந்தனைகளை அகற்றுவதற்கு, காட்சி அமைப்பை மாற்றுவது எப்போதுமே உதவியாக இருக்கும். வாழ்க்கையில் நேர்மறையான சிந்தனைகளை கொண்டு வர ஒருநாள் பிரயாணம் மேற்கொள்வதற்கு ஈடாக எதுவுமே இல்லை. எனவே மனச்சோர்வின் போது எங்கேனும் வெளியே சென்றால், எளிதில் மனச்சோர்வானது நீங்கும்.


நேர்மறையான எண்ணங்கள்
வாழ்க்கையில் நேர்மறையாக இருப்பதே மனச்சோர்வு கொடுக்கும் சிந்தனைகளை தவிர்ப்பதற்கான சிறந்த வழி. மனதிலே எதிர்மறை உணர்வுகள் இருக்கின்றன. சிந்தனைகளை நேர்மறையான திசையில் செலுத்துவதன் மூலமாக, மனச்சோர்வின் தாக்கங்களை அகற்றிவிடலாம்.


மனநல வல்லுநரிடம் பேசுவது
மனச்சோர்வில் இருந்து வெளிவருவதற்கு மிகவும் எளிதான மற்றும் ஆற்றல் வாய்ந்த வழி மனநல வல்லுநரிடம் பேசுவது தான். இதனால் மனச்சோர்வின் வேரை கண்டுபிடித்து அகற்ற முடியும்.


செல்லப்பிராணியை வளர்ப்பது
செல்லப்பிராணிகள் தங்கள் எஜமான்களிடம் அற்புதமான வழியில் தொடர்பு கொள்கின்றன. தனியாக வாழ்கிறவர்களை காட்டிலும், செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் மனச்சோர்வின் தாக்கங்களில் இருந்து பிழைத்துக் கொள்கிறார்கள் என்று பல ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன. ஆகவே செல்லப்பிராணியுடன் உணர்வுபூர்வமாக தொடர்புகொள்வது, எதிர்ம்றையான உணர்வில் இருந்து வெளிவர உதவும்.

நிகழ்காலத்தில் வாழ வேண்டும்
இறந்தகால தவறுகளிலும், எதிர்காலத்தின் நிலையின்மையிலும் உழல்வதில் அர்த்தமே இல்லை. அது உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்பதால், அச்சூழ்நிலையில் உங்கள் உணர்வுகளை செலுத்துவது பலன் அளிக்காது. 'எப்போது','எங்கே' மற்றும் 'நாளை' என்பனவற்றுக்கு பதிலாக, 'இப்போது', 'இங்கே','இன்று' என்பனவற்றில் கவனம் செலுத்துங்கள்.


நன்றாக தூங்குவது
நேர்மறையான சிந்தனைக்கு திரும்ப ஒருவருக்கு தேவைப்படுவது எல்லாம் ஒரு நல்ல உறக்கமே. இரவு தோறும் 7-8 மணிநேரம் உறங்குவது குறைவான மனச்சோர்வுக்கான அறிகுறிகளை காட்டுவதாக ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன.

இசையை கேட்பது
மனச்சோர்வில் இருக்கும் போது, உணர்வை எழுப்பும் இசையை கேட்பது சோர்வடைந்த மனதிற்கு ஊக்கம் அளிக்கும். உணர்வுகளை மாற்றவும், ஆன்மாவை உயர்த்தவும், உணர்ச்சியை அதிகரிக்கவும் உதவும் ஆற்றல் இசைக்கு இருக்கின்றது. எனினும், மிகவும் உணர்வுபூர்வமான பாடல்களை கேட்பதால், எதிர்மறையான விளைவு ஏற்படும் என்பதால், அவற்றை தடுக்க வேண்டும்.

நெருக்கமான உடலுறவை தவிர்க்க வேண்டாம்
மனச்சோர்வின் போது உடலுறவு சோர்வு அளிப்பதாக உணர்வது எளித. ஆனால் உண்மையில் உடலுறவு மனச்சோர்வில் வெளியே வருவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்பது பலருக்கும் தெரியாது. ஹார்மோன் உட்புகுதல்கள் மனச்சோர்வை சீர்படுத்தி, மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் அளிக்கின்றன.


வைட்டமின் சேர்க்கைகள்
ஊட்டச்சத்து குறைபாடுகளும் மனச்சோர்வு அளிக்கும் சிந்தனையை விளைவிக்கலாம். இதனால் வெளிப்படும் அறிகுறிகளை மருத்துவரிடம் ஆலோசித்து, சமன்பாட்டை சரிசெய்ய வைட்டமின் சேர்க்கைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

How To Deal With Stress At Workplace?

An average working person spends more time at workplace. According to responsibilities held, it can be round the clock also. As competition or challenges increase, stress levels also increase. It may not be directly from the work you do, but may be from an irritating colleague or from conflicting professional interests. Workplace stress affects your productivity and affects your physical and mental health. Level of stress may vary from person to person, but you need to know how to deal with stress at the workplace.

Know you are stressed: If you feel you are overwhelmed with work or feeling lost and disappointed at work, it can be sign of stress. Common signs of stress are depression, unnecessary anxiety, fatigue, loss of concentration, lack of interest, and health problems like headache or high blood pressure. If you know you are stressed at work, try to take things lightly and take few breaks.

Healthy mind and healthy body: Exercise regularly, have diet according to your health conditions, reduce nicotine, and get enough sleep. Having a healthy lifestyle will help you to think positively, enhances your mood and gives much drive and energy.

Say no to procrastination: Procrastination can have a great impact on your stress at the workplace. Unnecessary drain of energy can be avoided if it is done at the right time. Prioritising and organising will help you to do things in an effective way.

Proper Delegation and trust: Trust your subordinates and delegate the duties properly. It will eventually reduce the stress very considerably at workplace and you will be able to use your time for improving your performance.

Create a friendly work atmosphere: Keep good relationship with your colleagues and respect them. It can change the way you see your workplace. When you are comfortable with your colleagues you can concentrate better in your work.

Improve Communication: It is very important, to have effective communication with the higher authorities as well as the subordinates. Proper communication will help you to handle situations more efficiently and will enhance group synergy. This will definitely reduce your workplace stress.

Manage time effectively: If you manage your time properly, you can reduce stress to a great extent. Prioritising work load will ensure you a smooth working environment.

Knowing how to handle and reduce stress at your workplace is very important to establish a healthy and positive attitude.


Thanks