Flash News

Friends Tamil Chat

Search This Blog

Showing posts with label பெண்கள். Show all posts
Showing posts with label பெண்கள். Show all posts

Monday, 4 May 2015

பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் - 5 Foods every woman must eat

பெண்கள் தங்கள் உணவில் ஒருசில உணவுப் பொருட்களை தவறாமல் சேர்த்து வர வேண்டும். மேலும் ஆண்களை விட பெண்களுக்கு நிறைய ஊட்டச்சத்துக்கள் வேண்டும். எனவே பெண்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட வேண்டும்.

குறிப்பாக கீரைகள், தானியங்கள், நட்ஸ் போன்ற உணவுப் பொருட்களை கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவைகளில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவை வளமாக நிறைந்துள்ளது.

இங்கு ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.


பச்சை இலைக் காய்கறிகள் 
பச்சை இலைக் காய்கறிகளான பசலைக் கீரை, அஸ்பாரகஸ், வெந்தயக் கீரை, ப்ராக்கோலி போன்ற உணவுப் பொருட்களில் நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் கே, போலிக் ஆசிட் போன்றவை வளமாக நிறைந்துள்ளது. மேலும் கால்சியம், மக்னீசியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்றவையும் அதிகம் உள்ளது. எனவே அன்றாட உணவில் பச்சை இலைக் காய்கறிகளை தவறாமல் பெண்கள் சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

தானியங்கள் 
தானியங்களில் நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றம் வைட்டமின்கள் அமிகம் உள்ளது. மேலும் நிபுணர்களும் கோதுமை பிரட், கோதுமை பாஸ்தா மற்றும் கைக்குத்தல் அரிசி போன்றவற்றை பெண்கள் சாப்பிடுவது நல்லது என்று கூறுகிறார்கள். அதுமட்டுமின்றி, இவற்றில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருப்பதோடு, உடல் எடை அதிகரிக்காமலும் தடுக்கும் என்றும் சொல்கிறார்கள்.

நட்ஸ் 
பெண்கள் நட்ஸை ஸ்நாக்ஸாக சாப்பிடுவது நல்லது. ஏனெனில நட்ஸில் புரோட்டீ,ன மக்னீசியம், வைட்டமின் பி மற்றும் ஈ போன்றவை அதிகம் உள்ளது. மேலும் நட்ஸ் இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கும். அதற்காக இதனை அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம். தினமும் 10-15 பாதாம், முந்திரி போன்றவற்றை சாப்பிடுவது நலம்.

தயிர் 
தயிரில் வைட்டமின்கள், புரோட்டீன் மற்றும் கால்சியம் போன்றவை வளமாக நிறைந்துள்ளது. மேலும் தயிரில் ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் உள்ளன. எனவே தினமும் தயிரை உணவில் பெண்கள் சேர்ப்பது, எலும்புகளை வலுவாக்கி, கால்சியம் குறைபாட்டை தடுக்கும்.


பெர்ரிப் பழங்கள் 
கோடையில் பெர்ரிப் பழங்களில் ஒன்றான ஸ்ட்ராபெர்ரித அதிகம் கிடைக்கும். பெர்ரி பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருக்கும். எனவே பெர்ரிப் பழங்களை பெண்கள் சாப்பிடுவது உடலுக்கு புத்துணர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் வழங்கும்.


5 Foods every woman must eat

We bring to you five nutritional eats that every woman should include in her diet. Happy eating!

Leafy vegetables
It is not possible to meet your nutritional needs without having leafy vegetables in your diet. Spinach, legumes, asparagus, lettuce, fenugreek leaves, broccoli are available in abundance and are huge sources of fibre, Vitamin C and K, folic acid. It is also a vision protector and provides four essential minerals, i.e. calcium, magnesium, iron and potassium. Try to have it daily in your diet and darker the better.

Whole grains
Whole grains have up to 96 per cent more fibre and essential nutrients and vitamins than refined grains. Advises diet expert Honey Shah, "I advise my clients to have whole wheat bread, whole wheat pasta, and brown rice as they are high in essential nutrients and do not contribute to weight gain. You can start your day with whole wheat cereal or a whole wheat bread toast."

Nuts
Make nuts an essential ingredient in your diet. Sprinkle it on salads or breakfast cereals or stir them into yoghurt because they are an excellent source of protein, magnesium and B & E vitamins. They are useful in fighting heart disease and cancer. Nuts are high in fat calories, but their fat is the heart-healthy kind. You can also eat them as an evening snack. But make sure you don't overdo them. About a quarter cup or about 15-20 almonds, cashews, walnuts are good enough a week.

Yoghurt
Low fat or plain yoghurt is a great source of vitamins, protein and calcium. It also has healthy bacteria which can fight diseases. "Three to four cups a week is good enough for your diet. But make sure you don't add sugar to it. Instead choose plain yoghurt and add fruits or berries to it," suggests dietician Pinky.

Berries
Ever wondered why most of the diet fibre products have berries in them? Reason being berries are high in fill-you-up fibre and also helps curb weight. Berries have more protective plant antioxidants than almost any other food. These antioxidants not only lower your disease risks, but also help prevent memory loss. You can have a bowl full of them thrice a week. It could be fresh or frozen, benefits stay! 

For More Articles Pls Visit @ http://NanbanTamil.blogspot.com

Thanks

Sunday, 22 February 2015

டெல்லி பஸ்களில் பெண்கள் பாதுகாப்பு

டெல்லி பஸ்களில் பெண்கள் பாதுகாப்புக்கு அரசு புதிய வியூகம்

கோப்புப் படம்.

டெல்லி பெண்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளவும், வல்லுறவுகளில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் 'கூட்டு அதிரடிப் படை' என்ற புதிய வியூகத்தை வகுத்திருக்கிறது அம்மாநில அரசு.
இது குறித்து டெல்லி அதிகாரி ஒருவர் கூறும்போது, "டெல்லியில் பெண் பயணிகளுக்கு உள்ள ஆபத்தை அரசு புரிந்துகொண்டுள்ளது. குறிப்பாக மாநகராட்சி பேருந்தில் இரவு நேர பயணங்கள் மிகவும் ஆபத்தானதாக உள்ளது. இதற்கு வழி ஏற்படுத்த தன்னார்வலர்களிடமிருந்து யோசனைகள் கேட்கப்பட்டு ஆராயப்பட்டு வருகின்றன. அதில் 'கூட்டு அதிரடிப் படை' என்ற திட்டம் இந்த பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்தலாம் என்று யூகிக்கப்படுகிறது.
முதல்வர் கேஜ்ரிவால் இந்தத் திட்டத்துக்காக பணியாற்றக் கூடிய பாதுகாவலர்களை நியமிக்க மனிதவள ஆற்றல் நிபுணர்களின் உதவியைக் கோரியுள்ளார். அவர்கள் அளிக்கும் நபர்களைக் கொண்டு பயணங்களின் போது பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முன்மொழிவை சிவில் பாதுகாப்புத் துறை அரசிடம் விரைவில் வழங்க உள்ளது.
டெல்லி ஊர்காவல்படை தற்போது வருவாய்த் துறைக்கு கீழ் இயங்குவதால், அரசு இந்த திட்டக் குறிப்பை அந்த துறைக்கு அனுப்பியுள்ளது. ஊர்காவல் படையின் வசம் சுமார் 17,000 தன்னார்வலர்கள் உள்ளனர். இவர்கள் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு சுய பாதுகாப்புப் பயிற்சி அளித்து வருகின்றனர். சாலை பாதுகாப்பு போன்ற விழிப்புணர்வுக்கு பயன்படுத்தப்படுகின்றனர்.
இதைத் தவிர ஷீலா தீட்சித் தலைமையிலான அரசு ஊர்காவல்படையை வருவாய்த் துறையின் கீழ் கொண்டு வந்து உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும் என்று முதல்வர் கேஜ்ரிவாலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே ஆம் ஆத்மி கட்சியின் முதல் வாக்குறுதியாக மக்களிடம் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பெண்கள், கூட்டு அதிரடிப் படை, டெல்லி, Delhi, women safety

Tuesday, 7 May 2013

இந்தியாவில் தனியாக பயணிக்கும் பெண்களுக்காக - tips for women travelers in india

இந்தியாவில் தனியாக பயணிக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்

இந்தியாவில் தனியாக பயணம் மேற்கொள்ளும் பெண்கள் பலவித பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. கொலைகள், கற்பழிப்புகள் மற்றும் ஜாடை மாடையாக கேலி செய்வது போன்ற தொந்தரவுகள், ரயில்கள் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்யும் போது, குறிப்பாக தனியாக பயணிக்கும் போது, சர்வ சாதாரணமாக நிகழ்கின்றன. இது போன்ற சூழல்களில், பெண்கள் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதில் அதிக கவனத்தோடும் விழிப்புணர்வோடும் பயணிப்பது மிக முக்கியம்.

இந்தியாவில் தனியாக பெண்கள் பயணம் செய்வது என்பது பிரம்மப் பிரயத்தனமான செயலாகவே உள்ளது. பெண்களை விழுங்குவது போன்று பார்ப்பதில், அலாதி அல்ப சுகம் காணும் ஆண்களின் அலைபாயும் கண்களிலிருந்து பெண்கள் தப்பவே முடியாது. பெண்கள், இன்னும் சமூக கட்டுப்பாடுகள் மற்றும் பழமைவாதம் நிலவும் ஒரு நாட்டில் தான் வாழ்கிறோம் என்பதை மறக்கக் கூடாது. இது போன்ற ஒரு சமூகக் கட்டமைப்பில், பெண்கள் தாங்கள் எவ்வாறு வெளியிடங்களில் நடந்து கொள்ள வேண்டும் என்பதை தெளிவாகக் கற்றுக் கொள்ள வேண்டும்.

மேலும் கலாச்சாரப் பெருமைக்கு இழுக்கு உண்டாக்காமல் இருக்கவும், தனியாக பயணிக்கும் போது எப்படி இருக்க வேண்டும் என்றும் சில முக்கியமான டிப்ஸ்களை கொடுத்துள்ளோம். அதைப் படித்து பார்த்து, அதற்கேற்றாற் போல் நடந்து கொள்ளுங்கள்.


உடைகளில் கவனமாய் இருக்கவும்
என்ன மாதிரி உடைகளை அணிகிறோமோ, அதைப் பொறுத்து தான் கவன ஈர்ப்பின் தன்மை உள்ளது. அதிலும் உடலை இறுக்கிப் பிடிக்கும் உடைகள் மற்றும் குட்டைப் பாவாடைகள் போன்ற உடைகள் அணிவதைத் தவிர்ப்பதன் மூலம், பெண்கள் தங்கள் மேல் விழும் அந்நியர்களின் தேவையில்லாத பார்வைகளைத் தவிர்க்கலாம். எப்போதும் சுடிதார் அணிந்து, அதற்கு மேல் துப்பட்டா அல்லது ஷால் அணிவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். வேண்டுமெனில் ஜீன்ஸ் மற்றும் குர்தா கூட அணியலாம், ஆனால் எப்போதும் ஷால் ஒன்றை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.




அந்நியர்களுடனான உரையாடல்களைத் தவிர்க்கவும்
அரட்டை அடிப்பதில் ஆர்வம் உள்ளவராய் இருக்கலாம். அதில் ஒன்றும் தவறில்லை. ஆனால், தனியாகச் செல்லும் போது, அவ்வாறான அரட்டைகளை தவிர்ப்பது நல்லது. முடிந்த வரையில், யாரோடும் தேவையில்லாத உரையாடல்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். மேலும் பயணிப்போர் யாரேனும், உரையாடல்களில் கலந்து கொள்ளும்படி நச்சரித்தால், குறைந்த அளவில் உரையாடல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக தனிப்பட்ட தகவல்கள் எதையும் பகிர்ந்து கொள்ள கூடாது.




உடைமைகளின் மேல் ஒரு கண் வைக்கவும்
உடைமைகள் அருகிலேயே இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அவை மீது வைத்திருக்கும் கண் பார்வையிலிருந்து அகல கூடாது. ஏனெனில் இது இந்தியா! "வணக்கம்" என்று சொல்லி முடிக்கும் முன், பொருள்கள் மாயமாய் மறைந்திருக்கும். ஆகவே எந்நேரமும் விழிப்புணர்வோடு கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.





ணப்பையின் மேல் கவனம் கொள்ளவும்
பணம் வைத்திருக்கும் கைப்பையை மிக அருகிலேயே அல்லது கைகளிலேயே வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், கொண்டு செல்லும் பணத்தை ஒரே இடத்தில் வைக்காமல், அவற்றை பிரித்து, பின் பாக்கெட் அல்லது பையின் பக்கவாட்டுப் பகுதிகள் போன்ற, வெவ்வேறு இடங்களில் போட்டு வைக்க வேண்டும். ஏதேனும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வின் போது, அச்சூழலில் இருந்து வெளியே வருவதற்கு, இந்தப் பணம் மிகவும் உதவியாக இருக்கும்.




தைரியமாக இருக்கவும்
முதன்முறையாக தனியாக பயணிப்பவராய் இருப்பின், தைரியமாக நடந்து கொள்ள வேண்டும். அதுவும் முதன்முறையாக தனியாக பயணிக்கிறீர்கள் என்பது வெளியே தெரியும் படி எந்த தருணத்திலும் நடந்து கொள்ளக் கூடாது. என்ன செய்கிறோம், எங்கே செல்கிறோம் என்பதில் தெளிவாக இருப்பதாகவே எப்போதும் காட்டிக் கொள்ள வேண்டும். தலை நிமிர்ந்து நடந்து, திடமான குரலில் பேச வேண்டும்.



எதையும் கடன் வாங்க கூடாது
அந்நியர்களிடம் இருந்து எந்த விதமான பொருளையும் ஏற்றுக் கொள்ளக்கூடாது. யாரேனும் பிஸ்கட் அல்லது பழங்கள் கொடுத்தால், அதை பணிவாக மறுத்து விட்டு, இருக்கைக்குத் திரும்ப வேண்டும்.




தனிமையைத் தவிர்க்கவும்
இரயில்/பேருந்தின் ஓரத்தில், ஒரு ஆணின் பக்கத்தில் தனியாக இருப்பதாக உணரும் பட்சத்தில், பெண்கள் அதிகம் உள்ள பகுதிக்கு உடனே செல்ல வேண்டும். அருகில் அமர்ந்திருக்கும் நபரினால் தர்மசங்கடமாக உணர்ந்தால், இருக்கையை மாற்றித் தரக் கோரலாம் அல்லது சக பயணிகளிடம் பேசி, அவர்களை உங்கள் இருக்கையில் அமர்த்தி, அவர்களின் இருக்கையில் நீங்கள் சென்று அமரலாம்.



அதிக பாரமின்றி பயணிக்கவும்
ஏகப்பட்ட லக்கேஜ்களைத் தூக்கிச் செல்ல வேண்டாம். அவ்வளவையும் ஒருவரே கையாள வேண்டிய நிலைக்கு ஆளாக நேரிடும். அதனால், எப்போதும் எடை குறைவாக, ஒரு தோள் பையோ அல்லது ஒரு ட்ராலி பையோ மட்டும் கொண்டு செல்வது நல்லது. அதே போல், நிறைய நகையோ அல்லது பணமோ கொண்டு செல்வதும் நல்லதல்ல.



Tips for women travellers in India


Women in India undergo a lot of trouble when they travel alone. Murders, rapes and general eve teasing of women happen on trains and buses especially while travelling alone. In such situations, women need to take extra care and be a little aware of things around them.

"Akeli ladki khuli hui tijori ki tharah hoti hain..."Sounds familiar? Geet of Jab We Met probably found a cute depressed man on a train and managed to survive the adventurous journey unscathed. Unless, you have the cute man do not follow that! Every country and culture has its own views of what is appropriate behaviour for women, and the reaction to violations of those standards can range from quiet disapproval to criminal charges and punishment. Travelling in India can be a herculean task. You cannot escape the wandering eyes of some men who get some kind of a sadistic kick out of ogling at women. We live in a country where social conservatism is still very much prevalent. And because of this social conservatism, it is important that women educate themselves of how to handle themselves in public.

Here are a few tips on how not to be a cultural faux pas!
Watch what you wear 
Much of the attention that you draw is a result of what you are wearing. Try to avoid wearing tight clothes and short skirts as this will attract a lot of unwanted attention from others. Stick to wearing a salwar with a dupatta/shawl. You can wear jeans and kurta too but carry a shawl with you always.
Do not indulge in conversation with strangers 
You love to socialize. Yes, we understand that. But don't do it when you are travelling alone. Keep to yourself and try not to make a conversation with others. If someone does manage to pester you and get into a conversation, keep it minimal and do not let out any personal information.
Keep an eye on your belongings 
Be close to your belongings. Don't let your luggage out of sight. Always have an eye on them. This is India! Things disappear before you manage a "Namaste". You need to be vigilant at all times.
Love your wallet 
Keep your wallet close to you at all times. Also, place money in different parts like your back pocket or the sides of your bag. In case of an unfortunate incident, you will have some money to get out of the situation.
Be confident 
If you are a first time traveller, be confident. Do not give away that you are travelling for the first time. Act like you know what you are doing and where you are going at all times. Keep your head high and voice firm.
Do not borrow anything from anyone 
Do not accept anything that is given by a stranger. If the person offers you biscuits or fruits, politely decline and retreat to your seat. If you have watched the railway ads that constantly run at the stations, you will know what I mean.
Do not be alone 
When you feel you are in one corner of the train/bus with a man, go to an area where there are women around. If you are uncomfortable with the person sitting next to you, request for a seat change or negotiate with other passengers.
Travel light 
Do not carry lots of luggage. You will need to handle these things alone. So make sure you travel light, probably with a backpack and one trolley bag. Do not carry a lot of jewellery and cash.
- Thanks

Wednesday, 20 March 2013

வேலைக்கு செல்லும் பெண்கள் - Investments for working women

வேலைக்கு செல்லும் பெண்களுக்கான முதலீடுகள்.. இதோ சூப்பர் டிப்ஸ்!


பெங்களூர்: பொதுவாக நமது நாட்டை பொறுத்தவரை அக்காலத்தில் ஆண்கள் வேலை பார்த்து பெண்களுக்கு தேவையானவற்றை வாங்கித் தந்து பணத்தை சேமித்து வைப்பர். பெண்களும் ஆண்களையே நம்பி இருந்தனர். ஆனால் தற்போது பெண்கள் ஆண்களுக்கு நிகராக நன்கு படித்து நல்ல வேலைக்கு செல்கின்றனர்

Few Investment Mantras Working Women
எனினும் பல வீடுகளில் பெண்கள் சம்பாதித்து பணத்தை தங்கள் கணவன்மார்களிடமே தந்துவிடுகின்றனர். தனக்காக எதையுமே சேமிக்காமல் வாழ்கின்றனர். இதனால் பின்னாளில், ஏதாவது பிரச்சனை என்று வரும் போது சம்பாதித்த பணம் கூட கையில் இல்லாமல் அவதியுறுகிறார்கள். ஆகவே வேலைக்கு செல்லும் பெண்கள் சம்பாதிக்கும் தொகையில் கொஞ்சமாவது எதிலாவது முதலீடு செய்தால் பிற்காலத்தில் உபயோகப்படுத்த வசதியாக இருக்கும். இதற்கான சில எளிய முதலீட்டு வழிகளை இங்கு பார்ப்போம்.
1. சம்பாதிக்கும் பணத்தில் சிறிதளவை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யலாம். தங்க நகையாகவோ அல்லது தங்க காசாகவோ வாங்கலாம். இப்பொழுதெல்லாம் இ-கோல்ட் முறையில் தங்கத்தில் முதலீடு செய்யலாம். இது தங்கம் வாங்குவதற்கு இணையான நன்மையை தரும். இதனால் லாக்கரில் தங்கத்தை வைத்து பயப்படத் தேவையில்லை.
2. காப்பீடு திட்டங்களை நாடலாம். உடல்நல காப்பீடு திட்டங்களில் முதலீடு செய்யலாம். ஏதாவது நோயால் அவதியுறும் போது இவ்வகை திட்டங்கள் மிகுந்த பயனளிக்கும். கூடுதலாக ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் பணத்தை போட்டால், பணத்தை திரும்பப் பெரும் திட்டத்தின் (money-back policy) மூலம் நிறைய பயனை அடையலாம். உதாரணமாக மேக்ஸ் நியூயார்க் லைஃப் திட்டத்தின் கீழ் 6 வருடங்களில் முதலீடானது இரட்டிப்பாக்கப்படும்.
3. பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம். பங்கு பற்றிய விஷங்களை நன்கு அறிந்திருந்தால் பங்கு சந்தையில் முதலீடு செய்வதன் மூலம் உங்கள் செல்வத்தை அதிகரிக்க செய்ய முடியும். மேலும் நிறைய லாபம் சம்பாதிக்கலாம். எனினும் இதைப்பற்றி நன்கு தெரிந்தவர்களின் துணையுடன் இவ்வியாபாரத்தில் இறங்குவது நன்மை தரும். இல்லையென்றால் ஏதாவது சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள்.
4. நிரந்தர வைப்புத்தொகை (fixed deposits) தொடங்கலாம். இப்பொழுதெல்லாம் பல வங்கிகளில் வைப்புத் தொகையை குறிப்பிட்ட காலம் முடிந்தபின் திரும்பப்பெறும் போது 6 முதல் 8.5 சதவிகிதம் வரை வட்டி தருகிறார்கள். இதில் அதிக பணத்தை முதலீடு செய்யக் கூடாது. இரண்டிலிருந்து மூவாயிரம் ரூபாய் வரை முதலீடு செய்தாலே போதும். வருமான வரி தள்ளுபடி பெறலாம்.
5. பி.பி.எஃப் கணக்கில் பணத்தை போடலாம். வருடத்திற்கு எட்டு சதவிகித வட்டி கிடைக்கிறது. இது ஒரு பாதுகாப்பான முதலீடாகும். இதிலும் வருமான வரி விலக்கு உண்டு.
6. பரஸ்பர நிதியில் முதலீடு செய்யலாம். இதன் மூலம் சிறந்த பயனை பெறலாம். ஆனால் நிபுணர்களின் அறிவுரைப்படி நடக்க வேண்டும்.
7. ஒரு வீட்டை வாங்கலாம். இதனால் வாடகையை மிச்சப்படுத்தலாம். மேலும் ஒரு அசையா சொத்தை தக்க வைத்துக் கொள்ளும் சிறந்த நிலையைப் பெறலாம். இப்பொழுதெல்லாம் நிலத்தில் பணத்தை முதலீடு செய்தால், மிகக்குறுகிய காலத்தில் முதலீடு செய்த பணமானது இரட்டிப்பாகி விடுகிறது.
8. முதலீடு செய்வது பற்றி ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்வது நல்லது. இதற்காக தனிப்பட்ட முறையில் நன்கு விசாரித்து எதில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என்பதில் கவனமாக இருக்கவும்.
9. வேலைக்கு செல்லும் பெண்களாயின் கூட்டு முயற்சியின் மூலமும் பணத்தை சேமிக்கலாம். சிலர் கணவரின் துணையுடன் பல்வேறு துறைகளில் பணத்தை முதலீடு செய்து பெருத்த லாபத்தை ஈட்டுகிறார்கள். சில பெண்கள் சிறிய குழந்தைகள் காப்பகத்தை தொடங்கி நல்ல லாபத்தை ஈட்டுகிறார்கள்.
10. அஞ்சலகத்தில் உள்ள பல முதலீடு திட்டங்களில் முதலீடு செய்யலாம். உதாரணத்திற்கு மொத்தமாக சேமித்த தொகையில் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த, மாதா மாதம் அதற்கு வட்டி கிடைப்பது மட்டுமல்லாமல், குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு உங்கள் பணமும் திரும்பக் கிடைக்கும்.
11. பொதுவாக பெண்களுக்கு அரசானது பல்வேறு வரிச் சலுகைகளை வழங்கியுள்ளது. உதாரணத்திற்கு மாதம் சம்பாதிக்கும் தொகையில் ஆண்டுக்கு இரண்டரை லட்சம் வரை வரி செலுத்த வேண்டியதில்லை. மேலும் காப்பீட்டு திட்டங்கள் போன்றவற்றில் பணத்தை முதலீடு செய்யும் போதும் திட்டங்களில் போடப்படும் பணத்திற்கும் வரிச் சலுகைகள் தரப்படுகின்றன. இவற்றை எல்லாம் தெரிந்து கொண்டு பெண்கள் சரியான விதத்தில் முதலீடு செய்ய பிற்காலத்தில் பெருத்த லாபத்தை அடையலாம்.


Few investment mantras for working women
Indian women today are busy. They manage their career as well as raise their family or even may run a business. But they often forget to plan their investment and thus depend on their spouse or father to decide it for them.

Few investment mantras for working women
Wake up and start planning your investment, financial goals and diversify your portfolio. If required, seek financial advice. Women should start realising, thinking and understanding the importance of money and its investment aspect to avoid critical situations and be prepared to face it.
Here are different investment avenues to look at:
Gold Gold is favourite of every woman and believe in investing in jewellery is good investment option. Gold which has not lost its sheen since many years is a better investment option if one is considering investing in gold ETF, gold funds or gold coins.

Insurance Well, we should not forget "health is wealth". Increasing inflation, costs of hospitalization will be a drain on your resources. So, it is better to insure yourself.

Investing in stocks It will better option if you have some prior knowledge of it. If not, you can consult an investment advisor. This kind of investment is vital to diversify your portfolio and hendge against inflation. However, many women prefer safety than higher returns.

Bank FDs Favorite of most women, keeping the safety tag in mind, is bank FDs. If you opt for 5-year tax saving FD, you can also claim tax deduction under section 80C of the IT Act.

PPF The amount invested in Public Provident Fund will help one take care of expenses in retirement years. This product is safe investment option for risk adverse investors and returns are tax free.

Mutual Fund SIP: Which is very similar to recurring deposits. If you want superior returns than bank FDs and at the same time if you lack knowledge of equity markets, you can look at some equity schemes floated by mutual funds. The returns from these schemes are risky though.

However, before making any investment one needs to understand the basic concept of investing and risks linked to it. So to start with one has to know their long term, short trem goals and financial commitments before investing.

If you have any more ideas discuss in Friends Chat

Thanks




.