Flash News

Friends Tamil Chat

Search This Blog

Showing posts with label veg recipe. Show all posts
Showing posts with label veg recipe. Show all posts

Saturday, 1 February 2014

காலை உணவு ரெசிபி - Breakfast recipe


எலுமிச்சை அவல் ரெசிபி

எலுமிச்சை அவல் ரெசிபி
அவல் கொண்டு நிறைய ரெசிபிக்கள் செய்யலாம். அதில் ஒன்று தான் எலுமிச்சை அவல் ரெசிபி. இது மிகவும் ஈஸியான, அதே சமயம் ஆரோக்கியமான காலை உணவும் கூட. மேலும் இதனை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அதுமட்டுமல்லாமல், பேச்சுலர்கள் கூட இதனை முயற்சிக்கலாம். சரி, இப்போது அந்த எலுமிச்சை அவல் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்: 
அவல் - 3 கப் எலுமிச்சை - 2 (சாறு எடுத்துக் கொள்ளவும்) 
கடுகு - 1 டீஸ்பூன் 
பெருங்காயத் தூள் - 1 
சிட்டிகை பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது) 
வெங்காயம் - 2 (நறுக்கியது) 
உருளைக்கிழங்கு - 1 (வேக வைத்து நறுக்கியது) 
வேர்க்கடலை - 1 கப் 
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை 
கறிவேப்பிலை - சிறிது 
கொத்தமல்லி - சிறிது 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: 
முதலில் அவலை நீரில் 10 நிமிடம் அவல் மென்மையாகும் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும். பின் உருளைக்கிழங்கை போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். அடுத்து, வேர்க்கடலை சேர்த்து நன்கு கிளறி விட்டு, இறுதியில் அவலை போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு 10 நிமிடம் கிளறி இறக்கி, எலுமிச்சை சாற்றினை ஊற்றி பிரட்டி, மேலே கொத்தமல்லியை தூவினால், சுவையான எலுமிச்சை அவல் ரெசிபி ரெடி!!!


-----------

பீட்ரூட் மற்றும் தேங்காய் பொரியல்

பீட்ரூட் மற்றும் தேங்காய் பொரியல்
பீட்ரூட் சாப்பிட்டால் உடலில் உள்ள இரத்தத்தின் அளவு அதிகரிப்பதோடு, இரத்த ஓட்டமும் சீராக இருக்கும். எனவே வாரம் ஒரு முறை பீட்ரூட்டை உணவில் சேர்த்துக் கொண்டால், இரத்த சோகை ஏற்படுவதில் இருந்து தள்ளி இருக்கலாம். அதிலும் பீட்ரூட்டை நன்கு வேக வைத்து சாப்பிட்டால் தான் அதிலுள்ள சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும்.
இங்கு பீட்ரூட் மற்றும் தேங்காய் பயன்படுத்தி செய்யக்கூடிய பொரியலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்: 
பீட்ரூட் - 3 (பொடியாக நறுக்கியது) 
வெங்காயம் - 2 (நறுக்கியது) 
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் 
தேங்காய் - 1/2 மூடி (துருவியது) 
வரமிளகாய் - 2 
கடுகு - 1/2 டீஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிது 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை: முதலில் பீட்ரூட்டை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து 2 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விசில் போனதும் குக்கரை திறந்து, அதில் உள்ள நீரை வடித்து விட்டு, பீட்ரூட்டை மட்டும் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் வேக வைத்துள்ள பீட்ரூட்டை சேர்த்து 4 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும். இறுதியில் துருவிய தேங்காயை போட்டு, 3-4 நிமிடம் கிளறி இறக்கினால், சுவையான பீட்ரூட் மற்றும் தேங்காய் பொரியல் ரெடி!!!

---------------

குடைமிளகாய் சாதம்

இன்று நாம் சற்று வித்தியாசமான கலவை சாதத்தைப் பார்க்க போகிறோம். இந்த கலவை சாதம் காலை வேளையில் செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதுடன், பேச்சுலர்கள் அனைவரும் செய்வதற்கு ஏற்றவாறு இருக்கும். அதுமட்டுமல்லாமல், இதில் நறுமணமிக்க மசாலா பொருட்கள் சேர்த்திருப்பதால், இது இன்னும் சுவையுடன் இருக்கும். சரி, இப்போது அந்த குடைமிளகாய் சாதத்தை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

வெண்ணெய் மற்றும் குடைமிளகாய் சாதம்
தேவையான பொருட்கள்: 
சாதம் - 2 கப் 
குடைமிளகாய் - 1 (நறுக்கியது) 
பச்சை மிளகாய் பேஸ்ட் - 1 
டீஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் 
சீரகம் - 1/2 டீஸ்பூன் 
முந்திரி - 1 டேபிள் ஸ்பூன் (நெய்யில் வறுத்தது) 
மிளகு தூள் - 1/2 
டீஸ்பூன் பட்டை - 1 துண்டு 
துருவிய தேங்காய் - 1 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் 
நெய் - 1/2 டீஸ்பூன்

செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் மற்றும் வெண்ணெய் போட்டு உருகியதும், சீரகம், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் பட்டை மற்றும் பச்சை மிளகாய் பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட்டு, பின் நறுக்கி வைத்துள்ள குடைமிளகாயை போட்டு, தீயை குறைவில் வைத்து 4 நிமிடம் வதக்க வேண்டும். பின்பு அதில் உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து கிளறி, பின் சாதம் மற்றும் முந்திரியைப் போட்டு, நன்கு 2 நிமிடம் வதக்கி விட்டு, இறுதியில் தேங்காயை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான குடைமிளகாய் சாதம் ரெடி!!!

-------------------------
Thanks
For more health tips    : http://NanbanTamil.blogspot.com

Wednesday, 15 January 2014

தித்திக்கும் சர்க்கரை பொங்கல் - Recipes To Sweeten Your Sankrant / Pongal


தித்திக்கும் சர்க்கரை பொங்கல் - Recipes To Sweeten Your Sankrant / Pongal

பொங்கல் பண்டிகை என்றாலே பொங்கல் மற்றும் கரும்பு தான் ஸ்பெஷல். அதிலும் அந்த பொங்கலை புத்தம் புதிய அரிசியால், வெல்லம், நெய், பால் போன்றவற்றை வைத்து, சுவையாக அதிகாலையில் எழுந்து வைத்து, சூரியனுக்கு படைத்து வணங்குவர். பொங்கலின் ஸ்பெஷலே, பொங்கல் பொங்குவது தான். அவ்வாறு பொங்கல் பொங்கும் போது, வீட்டில் உள்ள அனைவரும் "பொங்கலோ பொங்கல்" என்று சொல்லி மகிழ்வர். உண்மையிலேயே, பொங்கல் பண்டிகையானது அனைவரது மனதிலும் பெரிய குதூகலத்தை ஏற்படுத்தும். மேலும் பொங்கலோடு தேங்காய் துருவலை சேர்த்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.

பொங்கலின் மற்றொரு சிறப்பான கரும்பிற்காகவே பொங்கல் பண்டிகைக்கு காத்துக் கொண்டிருப்பார்கள். ஏனெனில் இந்த பண்டிகையின் போது கரும்பு மிகவும் விலை குறைவில் கிடைக்கும். அத்தகைய சிறப்புடன் இருக்கும் பொங்கல் பண்டிகையின் போது வைக்கப்படும் சர்க்கரைப் பொங்கலை சிலருக்கு சரியான சுவையில் வைக்கத் தெரியாது. அத்தகையவர்களுக்கு அந்த சர்க்கரைப் பொங்கல் எப்படி செய்வதென்று கீழே செய்முறையைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, சர்க்கரைப் பொங்கலை வைத்து, பொங்கல் பண்டிகையை சந்தோஷத்துடன் கொண்டாடி மகிழுங்கள்.

தித்திக்கும்... சர்க்கரை பொங்கல்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1/2 கிலோ
பாசிப்பருப்பு - 50 கிராம் (ஊற வைத்து கழுவியது)
பால் - 3/4 லிட்டர்
முந்திரி - 10
உலர் திராட்சை - 10
வெல்லம் - 600 கிராம் (பொடி செய்து கொள்ளவும்)
நெய் - 150 கிராம்
பச்சை கற்பூரம் - 1 சிறிய கட்டி (பொடி செய்து கொள்ளவும்)
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்


செய்முறை:
முதலில் அரிசியை நீரில் ஊற வைத்து, பின் கழுவிய நீரை தனியாக ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு மண் பானை அல்லது பொங்கல் வைப்பதற்கான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பால் மற்றும் அரிசி கழுவிய நீரை பாத்திரம் முழுவதும் நிரப்ப வேண்டும். பாலானது நன்கு கொதித்து, பொங்கி வரும் போது, அதிலிருந்து சிறிது நீரை எடுத்து விட்டு, பிறகு அரிசி மற்றும் பாசிப்பருப்பை போட்டு, நன்கு கிளற வேண்டும். அதே சமயம் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி, முந்திரி மற்றும் உலர் திராட்சையை போட்டு, வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அரிசியானது வெந்ததும், அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி, உலர் திராட்சை மற்றும் சற்று தாராளமாக நெய் ஊற்றி பிரட்டி, பின் பொடி செய்து வைத்துள்ள வெல்லத்தை போட்டு, நன்கு கிளற வேண்டும். வெல்லம் கரைந்ததும், அதில் ஏலக்காய் பொடி மற்றும் பச்சை கற்பூரத்தை போட்டு ஒரு முறை கிளறி இறக்கி விட வேண்டும். இப்போது சுவையான சர்க்கரைப் பொங்கல் ரெடி!!!

குறிப்பு : பொங்கலை மண்பானையில் செய்தால், அதன் சுவைக்கு அளவே இருக்காது. எனவே முடிந்தவரை மண்பானையில் செய்யவும்.
-----------
Ingredients :
Raw rice - 1 / 2 kg
Pacipparuppu - 50 grams ( washed with water )
Milk - 3 / 4 liters
Cashew - 10
Dry grapes - 10
Sugar - 600 grams ( powder please )
Ghee - 150 g
Menthol - 1 small tumor ( Make powdered )
Cardamom powder - 1 / 2 teaspoon


Method :
The rice is first soaked in water , then washing with water alone should be poured into a pan . Pongal pot or bowl to hold the soil and then put in the oven , and washing with water, milk and rice to fill the role . Towards the well- boiled furiously when it comes , it takes a bit of water , then put the rice and pacipparuppai , to dig a well . While another put the skillet in the oven , pour the ghee , cashews and dry , put a grape , roasted separately to keep.

Steamed rice , which is holding the roasted cashews , dry grapes and a generous pouring ghee and Freddie , then the powdered sugar , put on hold , to dig a well . Sugar is dissolved , stirring once put camphor and cardamom powder and green to drop . Delicious sugar Pongal Ready Now !

Note : If the mad stone Pongal , the taste will not be effective . So as to the mad stone .

-----------
Recipes To Sweeten Your Sankranti / Pongal

As the winter is receding, we have the auspicious festival of Makar Sankranti. This festival is celebrated across the country but it is named differently everywhere. For example, down South Tamilians call it Pongal which is their largest harvest festival. And all of know that no Indian festival is complete without food, especially the Indian desserts. Most of the recipes for Sankranti are sweet dishes. The main Pongal recipe of Sakkarai Pongal is also a sweet dish made with rice, jaggery and dal. The Sankranti recipes that hail from Eastern India, mainly the states of Odisha, Bengal and Assam are also very popular. These Sankranti recipes can be grouped together as pithe recipes.

Apart from the main sweet pongal, there are other recipes from Southern India that are prepared specially for this festival. If we take a pan India view, then kheer recipes are very popular for Sankranti. So we present a whole list of Sankranti recipes that have been picked from all parts of India.


Sweet Pongal
The sweet Pongal is made with rice, dal and flavoured with cardamom, nutmeg and cashew nuts. It is the main dish prepared for the Tamil festival of Pongal.


Patishapta
In patishapta we make a coconut filling inside the rice flour roll. The coconut filling can be made with jaggery, sugar or kheer. Patishapta is one of the Bengali sweets that can also be called coconut rolls.


Phirni
Phirni is a rice pudding and common sweet dish during the festivals. Although Phirni is more popular as a Ramzan recipe, it is also made during Makar Sankranti in Rajasthan.


Sabudana Kheer
For those who are fasting, Sabudana kheer is the best Sankranti recipe. You are allowed to eat sabudana even when you are fasting and it is a healthier replacement for rice in the kheer.


Tamarind Gojju
Gojju is a famous south Indian side dish and we usually have this with rice & khara pongal. Tamarind Gojju is made of tangy tamarind juice and can be preserved in an air tight container for atleast two days.


Bhapa Pitha
Bhapa pitha is a special sweet dish that is prepared usually on the occasion of Makar Sankranti. This unique pitha is not fried like most other varieties but steamed in a typical Bengali style.


Kesar Pista Kheer
Kesar pista kheer is mainly popular for its lovely aroma and flavouring. It is one of those recipes that are popular in all the Indian states.


Till Pitha
This is a special kind of pitha that is made with sesame seeds. The flavour of this dish is crisp and it is popular beyond the boundaries of Bengal.

Thanks, Wish you all a happy pongal
Share your comments : http://FriendsTamil.cbox.ws
For more health tips    : http://NanbanTamil.blogspot.com


Friday, 10 January 2014

வாழைப்பழ தோசை - Banana Dosa Recipe

வாழைப்பழ தோசை - Banana Dosa Recipe

சில குழந்தைகள் தோசை சாப்பிட அடம் பிடிப்பார்கள். அப்படி அடம் பிடிக்கும் குழந்தைகளை தோசை சாப்பிட வைக்க வேண்டுமானால், வாழைப்பழ தோசை செய்து கொடுங்கள். இந்த தோசை சுவையாக இருப்பதோடு, செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும். மேலும் இந்த தோசையை பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸில் கூட கொடுத்து அனுப்பலாம்.

அந்த அளவில் இந்த தோசை நீண்ட நேரம் சாப்பிடுவதற்கு ஏற்றவாறு இருக்கும். சரி, இப்போது அந்த வாழைப்பழ தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

வாழைப்பழ தோசை ரெசிபி
தேவையான பொருட்கள்: 
வாழைப்பழம் - 3 
அரிசி மாவு - 1 கப் 
மைதா - 2 டேபிள் ஸ்பூன் 
ஏலக்காய் பொடி - 1 
சிட்டிகை சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன் 
உலர் திராட்சை - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) 
முந்திரி - 3 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) 
தண்ணீர் - 1/2 கப் 
நெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் வாழைப்பழத்தை நன்கு கையால் மசித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பௌலில் அரிசி மாவு, மைதா, சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், ஒரு கரண்டி கலந்து வைத்துள்ள மாவை தோசை போன்று ஊற்றி, சிறிது நேரம் கழித்து மசித்து வைத்துள்ள வாழைப்பழத்தை சிறிது நடுவே வைத்து, நெய் ஊற்றி தீயை குறைவில் வைத்து, தோசை வெந்ததும் எடுக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் தோசைகளாக சுட்டு எடுக்க வேண்டும்.


-----------

Banana Dosa Recipe For Kids

Kids are the main ones who give a lot of trouble when it comes to food. They are generally the picky eaters in the family and have a lot of demands on their mummies, especially when it comes to breakfast. If you are one of those worried mommies, look no further.

NanbanTamil shares with you one of the most delicious breakfast recipes for kids that will leave your child wanting for more. This yummy banana dosa recipe is easy for you to prepare in less than 30 minutes. Moreover, this is one breakfast recipe that will not only be loved by your kids but by everyone in the family.

வாழைப்பழ தோசை ரெசிபி
Serves: 3 
Preparation Time: 10 minutes 
Cooking Time: 15 minutes 

Ingredients:
Bananas - 3 
Rice flour - 1 cup 
Maida - 2 tbsp 
Cardamom powder - 1 pinch 
Sugar - 1 tbsp 
Raisins - 2 tblsp (chopped) 
Cashews - 3 tblsp (chopped) 
Water - 1/ 2 cup 
Ghee

Procedure 
1. To prepare this breakfast recipe, first you need to mash the ripe bananas with the help of a masher or with your hands. 
2. In a bowl, add in the rice flour, the maida, sugar and cardamom powder. Now mix the ingredients well together using a flat spoon. 
3. Mix the ingredients together with a little water until it turns into a thick batter. Use a mixer to make the batter. Is this necessary or an option? 
4. Now add to the batter the chopped raisins and cashews. 
5. When the batter is ready, switch the flame on and place a tava on top of the flame. Let the tava get hot and pour a spoonful of batter and spread it gently in a circular motion. 
6. When the dosa is ready place the mashed bananas in the middle of the dosa and cook it on a low flame. Fry till the dosa turns into a golden colour. 
7. After the banana dosa is ready, add a dollop of ghee to the dosa.

Your yummy sweet banana dosa is now ready to eat. Hope your little ones enjoy this special treat you have prepared for them.

Thanks
Share your comments : http://FriendsTamil.cbox.ws
For more health tips    : http://NanbanTamil.blogspot.com

Saturday, 16 March 2013

ருசியான கட்லெட் - sabudana cutlet


ருசியான... ஜவ்வரிசி கட்லெட்


பெரும்பாலும் கட்லெட்டானது காலை உணவாகவோ அல்லது மாலை உணவாகவோ சாப்பிடக் கூடியது. அதிலும் கட்லெட்டில் பல வகைகள் உள்ளன. ஆனால் அவற்றில் ஒரு வகையான ஜவ்வரிசி கட்லெட்டை எப்படி செய்வதென்று தெரியுமா? இந்த கட்லெட் செய்வது மிகவும் ஈஸியானது. அதிலும் இந்த கட்லெட்டிற்கு முக்கியமான பொருள் ஜவ்வரிசி, உருளைக்கிழங்கு தான்.

ஆகவே ஜவ்வரிசி கட்லெட் செய்யத் தெரியவில்லை என்று நினைப்பவர்களுக்கு ஒரு எளிமையான முறையில், படிப்படியாக எப்படி செய்வதென்று தெளிவாக கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, வீட்டில் விடுமுறை நாட்களில் செய்து சாப்பிடலாம். சரி, ஜவ்வரிசி கட்லெட்டை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!




படி: 1 இரவில் படுக்கும் போதே 250 கிராம் ஜவ்வரிசியை 3/4 கப் வெதுவெதுப்பான தண்ணீரில் ஊற வைத்து, காலையில் அதனை கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.



படி: 2
3-4 உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு 2-3 விசில் விட்டு வேக வைத்து, தோலுரித்து குளிர வைக்க வேண்டும்.




படி: 3
உருளைக்கிழங்கு குளிர்ந்ததும், அதனை மசித்தோ அவ்வது துருவியோ வைத்துக் கொள்ள வேண்டும்.





படி: 4
மசித்த உருளைக்கிழங்கை ஊற வைத்த ஜவ்வரிசியுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.




படி: 5
கொத்தமல்லியின் இலைகளை பொடியாக நறுக்கி தனியாக வைத்து கொள்ள வேண்டும்.




படி: 6
சுவைக்கேற்ப பச்சை மிளகாயை சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் இதில் 2 பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.




படி: 7
பொடியாக நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லியை, ஜவ்வரிசி மற்றும் உருளைக்கிழங்கு கலவையுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.




படி: 8
பின்னர் அந்த கலவையில் உப்பு, கரம் மசாலா தூள், மிளகு தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.




படி: 9
அடுத்து கலந்து வைத்துள்ள கலவையில், ஒரு எலுமிச்சை அளவை எடுத்து, சற்று தட்டையாக தட்டி, ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.





படி: 10
பின்பு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், தட்டி வைத்துள்ளவற்றை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.





படி: 11
இதோ சுவையான ஜவ்வரிசி கட்லெட் ரெடி!!! இதனை தக்காளி சாஸ் அல்லது புதினா சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.




Thanks