Flash News

Friends Tamil Chat

Search This Blog

Showing posts with label இதய நோய். Show all posts
Showing posts with label இதய நோய். Show all posts

Sunday, 28 July 2013

இதய நோய்க்கு வழிவகுக்கும் சிறுசிறு தவறுகள் - Little mistakes lead to big heart disease

இதய நோய்க்கு வழிவகுக்கும் சிறுசிறு தவறுகள் - Little mistakes lead to big heart disease


இளமையில் எந்த சிரமத்தையும் தராமல் ஒத்துழைக்கின்ற உடல், நாளடைவில் வயதாக ஆக பல்வேறு பிரச்சனைகளை கொண்டு வந்துவிடுகிறது. அவற்றில் அதி முக்கியமானது இதயம் தொடர்பான பிரச்சனைகள். உணவுப்பழக்கம், தூக்க முறை, பணிகள், மனதிற்கு அழுத்தம் தரக்கூடிய நடவடிக்கைகள், ஓய்வு போன்ற பலதரப்பட்ட காரணங்களால், இரத்த ஓட்டம், இதயத்தின் பணிகள் போன்றவை பாதிக்கப்படும். ஆகவே சில விஷயங்களைக் கவனத்தில் கொண்டாலே, இதயத்திற்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும்.
Iḷamaiyil enta ciramattaiyum tarāmal ottuḻaikkiṉṟa uṭal, nāḷaṭaivil vayatāka āka palvēṟu piraccaṉaikaḷai koṇṭu vantuviṭukiṟatu. Avaṟṟil ati mukkiyamāṉatu itayam toṭarpāṉa piraccaṉaikaḷ. Uṇavuppaḻakkam, tūkka muṟai, paṇikaḷ, maṉatiṟku aḻuttam tarakkūṭiya naṭavaṭikkaikaḷ, ōyvu pōṉṟa palatarappaṭṭa kāraṇaṅkaḷāl, iratta ōṭṭam, itayattiṉ paṇikaḷ pōṉṟavai pātikkappaṭum. Ākavē cila viṣayaṅkaḷaik kavaṉattil koṇṭālē, itayattiṟku evvitap pātippum ēṟpaṭāmal irukkum.

குறிப்பாக நம்மை அறியாமல், நமது கவனக்குறைவாலும், அறியாமையினாலும் செய்யும் சிறு சிறு தவறுகள் நாளடைவில், இதயத்திற்கு ஊறு விளைவிக்கும் அளவுக்கு மிகப்பெரும் சவாலாக உருவெடுக்கக்கூடும்.
Kuṟippāka nam'mai aṟiyāmal, namatu kavaṉakkuṟaivālum, aṟiyāmaiyiṉālum ceyyum ciṟu ciṟu tavaṟukaḷ nāḷaṭaivil, itayattiṟku ūṟu viḷaivikkum aḷavukku mikapperum cavālāka uruveṭukkakkūṭum.

எனவே அத்தகைய தவறுகளை அறிந்துகொண்டால், அவற்றைத் தவிர்க்கவும் சரிசெய்து கொள்ளவும் பெரும் உதவியாக இருக்கும் அல்லவா? அதற்கு ஏதுவாக, பொதுவாக அனைவரும் செய்கின்ற சில தவறுகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. அதைப் படித்து, அவற்றை திருத்திக் கொண்டு, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.
Eṉavē attakaiya tavaṟukaḷai aṟintukoṇṭāl, avaṟṟait tavirkkavum cariceytu koḷḷavum perum utaviyāka irukkum allavā? Ataṟku ētuvāka, potuvāka aṉaivarum ceykiṉṟa cila tavaṟukaḷiṉ paṭṭiyal kīḻē tarappaṭṭuḷḷatu. Ataip paṭittu, avaṟṟai tiruttik koṇṭu, itayattai ārōkkiyamāka vaittuk koḷḷuṅkaḷ.

பரிசோதனைகளை மேற்கொள்ளாதிருத்தல் 
இதய நோய் உள்ள பெரும்பாலானோருக்கு அதற்கான அறிகுறிகளே தெரிவதில்லை. எனவே 20 வயது கடந்துவிட்டாலே, இரத்தத்திலுள்ள கொலஸ்ட்ராலின் அளவை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தவறாமல் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். மேலும் இரத்த அழுத்தத்தினை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சோதித்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல் உடல் எடை குறியீட்டெண்/பி.எம்.ஐ (body mass index) போன்றவற்றை மருத்துவரிடம் செல்லும் ஒவ்வொரு முறையும் சரிபார்க்க வேண்டும். 45 வயதிலிருந்து இரத்தத்திலுள்ள குளுகோஸின் அளவை மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். இதனால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.
Paricōtaṉaikaḷai mēṟkoḷḷātiruttal Itaya nōy uḷḷa perumpālāṉōrukku ataṟkāṉa aṟikuṟikaḷē terivatillai. Eṉavē 20 vayatu kaṭantuviṭṭālē, irattattiluḷḷa kolasṭrāliṉ aḷavai aintu āṇṭukaḷukku orumuṟai tavaṟāmal paricōtittuk koḷḷa vēṇṭum. Mēlum iratta aḻuttattiṉai iraṇṭu āṇṭukaḷukku orumuṟai cōtittuk koḷḷa vēṇṭum. Atumaṭṭumallāmal uṭal eṭai kuṟiyīṭṭeṇ/pi.Em.Ai (body mass index) pōṉṟavaṟṟai maruttuvariṭam cellum ovvoru muṟaiyum caripārkka vēṇṭum. 45 Vayatiliruntu irattattiluḷḷa kuḷukōsiṉ aḷavai mūṉṟāṇṭukaḷukku orumuṟai paricōtittuk koḷḷa vēṇṭum. Itaṉāl itayattai ārōkkiyamāka vaittuk koḷḷa muṭiyum.


குடும்ப வரலாற்றினை மறந்துவிடுதல் 
இதய நோய் வரும் வாய்ப்புகளை அறிய விரும்பினால், முதலில் குடும்பத்தில் பெரியவர்கள் யாருக்காவது இதய நோய் இருந்ததா அல்லது இருக்கிறதா என்று விசாரித்து அறிந்து கொள்ள வேண்டும். ஒருவேளை இப்போது இதய நோய் இருந்தவர்கள் உயிரோடு இல்லையென்றால், அவர்கள் என்ன காரணத்தினால், எத்தனை வயதில் இறந்தார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களது மருத்துவ வரலாற்றினைத் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களது வாழ்க்கை முறையை அறிந்து கொள்ளுதலும் உதவும். குழந்தைகளுக்கும் இளமையிலேயே, இதயம் தொடர்பான நோய்கள் இருந்தாலும், இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமுண்டு.
Kuṭumpa varalāṟṟiṉai maṟantuviṭutal Itaya nōy varum vāyppukaḷai aṟiya virumpiṉāl, mutalil kuṭumpattil periyavarkaḷ yārukkāvatu itaya nōy iruntatā allatu irukkiṟatā eṉṟu vicārittu aṟintu koḷḷa vēṇṭum. Oruvēḷai ippōtu itaya nōy iruntavarkaḷ uyirōṭu illaiyeṉṟāl, avarkaḷ eṉṉa kāraṇattiṉāl, ettaṉai vayatil iṟantārkaḷ eṉṟu terintu koḷḷa vēṇṭum. Avarkaḷatu maruttuva varalāṟṟiṉait terintu koḷḷa vēṇṭum. Avarkaḷatu vāḻkkai muṟaiyai aṟintu koḷḷutalum utavum. Kuḻantaikaḷukkum iḷamaiyilēyē, itayam toṭarpāṉa nōykaḷ iruntālum, itaya nōykaḷ varuvataṟkāṉa vāyppukaḷ atikamuṇṭu.

பற்களைப் பாதுகாக்க மறந்துவிடுதல் 
பல் ஆரோக்கியமும், இதய ஆரோக்கியமும் ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளவை. பல்வேறு ஆராய்ச்சி முடிவுகளின் படி, பல் பராமரிப்பு சரியாக இல்லாதவர்களுக்கும், ஈறுகளில் வீக்கம் உள்ளவர்களுக்கும், இதய நோய் வரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று சொல்கிறது. அதிலும் பல் ஈறுகளில் நீண்ட காலமாக வீக்கம் உள்ளவர்களுக்கு, அந்த வீக்கத்திலிருந்து பாக்டீரியாக்கள் வெளியேறி இரத்தத்தில் கலந்து விடுகின்றனவாம். மேலும் பற்களையும், பல் இடுக்குகளையும் முறையாக சுத்தம் செய்து, பற்களைப் பாதுகாப்புடன் பேணிவருபவர்களுக்கு ஆரோக்கியமான பற்கள் அமைவதோடு, ஆரோக்கியமான இதயமும் அமையும். அத்தகையவர்களுக்கு இதயம் தொடர்பான நோய்கள் வரும் வாய்ப்பும் குறைவாகவே இருக்கும்.
Paṟkaḷaip pātukākka maṟantuviṭutal: Pal ārōkkiyamum, itaya ārōkkiyamum oṉṟōṭu oṉṟu toṭarpuḷḷavai. Palvēṟu ārāycci muṭivukaḷiṉ paṭi, pal parāmarippu cariyāka illātavarkaḷukkum, īṟukaḷil vīkkam uḷḷavarkaḷukkum, itaya nōy varum vāyppukaḷ atikam uḷḷatu eṉṟu colkiṟatu. Atilum pal īṟukaḷil nīṇṭa kālamāka vīkkam uḷḷavarkaḷukku, anta vīkkattiliruntu pākṭīriyākkaḷ veḷiyēṟi irattattil kalantu viṭukiṉṟaṉavām. Mēlum paṟkaḷaiyum, pal iṭukkukaḷaiyum muṟaiyāka cuttam ceytu, paṟkaḷaip pātukāppuṭaṉ pēṇivarupavarkaḷukku ārōkkiyamāṉa paṟkaḷ amaivatōṭu, ārōkkiyamāṉa itayamum amaiyum. Attakaiyavarkaḷukku itayam toṭarpāṉa nōykaḷ varum vāyppum kuṟaivākavē irukkum.


போதுமான அளவு பால் பொருட்களை உண்ணாதிருத்தல் 
சமீபத்திய ஒரு ஆராய்ச்சியில் மாதவிலக்கு முடிவுற்ற (postmenopausal women) 82,000 பெண்களது வாழ்க்கை முறையானது 8 ஆண்டுகளாக ஆராயப்பட்டது. அதில் அதிகமான அளவு பால் பொருட்களை எடுத்துக் கொண்ட பெண்கள், பால் பொருட்களைக் குறைந்த அளவு உட்கொண்ட பெண்களை விட, 50% குறைவான அளவிலேயே இரண்டாம் வகை சர்க்கரை நோய் (type 2 diabetes) தாக்கும் அபாயத்தைப் பெற்றிருந்தார்கள். உடலுக்கு கலோரிகளைக் குறைக்கும் நோக்கத்திலும், கொழுப்புகளைக் குறைக்கும் எண்ணத்திலும், பால் பொருட்களைக் குறைத்துக் கொண்டால், அது இதயத்திற்கு நல்லதல்ல.
Pōtumāṉa aḷavu pāl poruṭkaḷai uṇṇātiruttal: Camīpattiya oru ārāycciyil mātavilakku muṭivuṟṟa (postmenopausal women) 82,000 peṇkaḷatu vāḻkkai muṟaiyāṉatu 8 āṇṭukaḷāka ārāyappaṭṭatu. Atil atikamāṉa aḷavu pāl poruṭkaḷai eṭuttuk koṇṭa peṇkaḷ, pāl poruṭkaḷaik kuṟainta aḷavu uṭkoṇṭa peṇkaḷai viṭa, 50% kuṟaivāṉa aḷavilēyē iraṇṭām vakai carkkarai nōy (type 2 diabetes) tākkum apāyattaip peṟṟiruntārkaḷ. Uṭalukku kalōrikaḷaik kuṟaikkum nōkkattilum, koḻuppukaḷaik kuṟaikkum eṇṇattilum, pāl poruṭkaḷaik kuṟaittuk koṇṭāl, atu itayattiṟku nallatalla.


சூரிய ஒளியில் நில்லாதிருத்தல் 
நல்ல வெயிலில் நிற்பதை யாரும் விரும்புவதில்லை. அதை யாரும் அறிவுறுத்துவதுமில்லை. ஆனாலும் நமது உடலுக்கு சூரிய ஒளியின் உதவியோடு மட்டும் தயாரிக்கப்படும் வைட்டமின் டி அவசியமானது. போதுமான நேரம் சருமத்தில் சூரிய ஒளிப்பட்டால் மட்டுமே சருமமானது, இந்த வைட்டமின் டி சத்தைத் தயாரிக்க முடியும். அண்மையில் மேற்கொண்ட ஆராய்ச்சியின் படி, வைட்டமின் டி அளவு குறைவாகப் பெற்றிருப்பவர்களை விட, வைட்டமின் டி அதிகம் உள்ளவர்களுக்கு, இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவாக உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவர்கள் காலை 10 மணி முதல் மாலை 3 மணிக்குள், 5 முதல் 30 நிமிடங்கள் வரை சூரிய ஒளியானது உடல் மீது படும் வண்ணம் நிற்பது நல்லது என்று கூறுகிறார்கள்.
Cūriya oḷiyil nillātiruttal 
Nalla veyilil niṟpatai yārum virumpuvatillai. Atai yārum aṟivuṟuttuvatumillai. Āṉālum namatu uṭalukku cūriya oḷiyiṉ utaviyōṭu maṭṭum tayārikkappaṭum vaiṭṭamiṉ ṭi avaciyamāṉatu. Pōtumāṉa nēram carumattil cūriya oḷippaṭṭāl maṭṭumē carumamāṉatu, inta vaiṭṭamiṉ ṭi cattait tayārikka muṭiyum. Aṇmaiyil mēṟkoṇṭa ārāycciyiṉ paṭi, vaiṭṭamiṉ ṭi aḷavu kuṟaivākap peṟṟiruppavarkaḷai viṭa, vaiṭṭamiṉ ṭi atikam uḷḷavarkaḷukku, irattak kuḻāykaḷil aṭaippu ēṟpaṭum vāyppu kuṟaivāka uḷḷatāka kaṇṭupiṭikkappaṭṭuḷḷatu. Mēlum maruttuvarkaḷ kālai 10 maṇi mutal mālai 3 maṇikkuḷ, 5 mutal 30 nimiṭaṅkaḷ varai cūriya oḷiyāṉatu uṭal mītu paṭum vaṇṇam niṟpatu nallatu eṉṟu kūṟukiṟārkaḷ.


பீன்ஸைத் தவிர்த்தல் 
கருப்பு பீன்ஸ், கிட்னி பீன்ஸ் மற்றும் இதர வகை பீன்ஸ்களில் புரதச்சத்து மிகுந்துள்ளது. இவற்றில் நிறைவுற்ற கொழுப்புகள் இல்லை. மேலும் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் தன்மை கொண்ட, கரையக்கூடிய நார்ச்சத்துக்களும் நிறைந்துள்ளன. ஓட்ஸ் மற்றும் பார்லியிலும் கூட, இந்த கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஏனெனில் இவைகளில் இரத்தக்குழாய்களில் உள்ள கொலஸ்ட்ராலை நீக்கும் சக்தியானது உள்ளது.
Pīṉsait tavirttal: Karuppu pīṉs, kiṭṉi pīṉs maṟṟum itara vakai pīṉskaḷil purataccattu mikuntuḷḷatu. Ivaṟṟil niṟaivuṟṟa koḻuppukaḷ illai. Mēlum kolasṭrālaik kuṟaikkum taṉmai koṇṭa, karaiyakkūṭiya nārccattukkaḷum niṟaintuḷḷaṉa. Ōṭs maṟṟum pārliyilum kūṭa, inta karaiyakkūṭiya nārccattukkaḷ niṟaintuḷḷaṉa. Ēṉeṉil ivaikaḷil irattakkuḻāykaḷil uḷḷa kolasṭrālai nīkkum caktiyāṉatu uḷḷatu.

உற்சாக பானங்களை அருந்துதல்
ஆற்றல் தரும், கார்பன்-டை-ஆக்ஸைடு நிரப்பிய உற்சாக பானங்களில், சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளதால், இவை இரத்தத்தில் ட்ரை கிளிசரைடு அளவு உயர்வதற்கு காரணமாக உள்ளன. ட்ரை கிளிசரைடுகள் என்பவை ஒருவகை கொழுப்புகள். இவை இரத்தத்தின் பாகுத்தன்மையைக் கூட்டும் தன்மை கொண்டவை. ஏற்கனவே கொலஸ்ட்ரால் இருந்தால், அதன் காரணமாக இரத்தக்குழாய்களில் அடைப்புகள் உண்டாகும். அதோடு இந்த ட்ரை கிளிசரைடுகளால் இரத்தத்தின் கெட்டித்தன்மை அதிகரிக்கப்பட்டு, இரத்தமானது பாய்ந்தால், இரத்த ஓட்டத்திலும், இரத்த அழுத்தத்திலும் பாதிப்பு ஏற்படும். எனவே தாகம் ஏற்பட்டால், இது போன்ற உற்சாக பானங்களைத் தவிர்த்துவிட்டு, தண்ணீர், எலுமிச்சை ஜூஸ், சாத்துக்குடி ஜூஸ் அல்லது வேறு பழச்சாறுகளை அருந்துவது நல்லது. மேலும் கரும்புச்சாறு கூட தாகத்தைத் தவிர்ப்பதோடு, ஆற்றல் தரத்தக்கதாகும்.
Uṟcāka pāṉaṅkaḷai aruntutal: Āṟṟal tarum, kārpaṉ-ṭai-āksaiṭu nirappiya uṟcāka pāṉaṅkaḷil, carkkarai cērkkappaṭṭuḷḷatāl, ivai irattattil ṭrai kiḷicaraiṭu aḷavu uyarvataṟku kāraṇamāka uḷḷaṉa. Ṭrai kiḷicaraiṭukaḷ eṉpavai oruvakai koḻuppukaḷ. Ivai irattattiṉ pākuttaṉmaiyaik kūṭṭum taṉmai koṇṭavai. Ēṟkaṉavē kolasṭrāl iruntāl, ataṉ kāraṇamāka irattakkuḻāykaḷil aṭaippukaḷ uṇṭākum. Atōṭu inta ṭrai kiḷicaraiṭukaḷāl irattattiṉ keṭṭittaṉmai atikarikkappaṭṭu, irattamāṉatu pāyntāl, iratta ōṭṭattilum, iratta aḻuttattilum pātippu ēṟpaṭum. Eṉavē tākam ēṟpaṭṭāl, itu pōṉṟa uṟcāka pāṉaṅkaḷait tavirttuviṭṭu, taṇṇīr, elumiccai jūs, cāttukkuṭi jūs allatu vēṟu paḻaccāṟukaḷai aruntuvatu nallatu. Mēlum karumpuccāṟu kūṭa tākattait tavirppatōṭu, āṟṟal tarattakkatākum.

சீரற்ற தூக்க முறை 
இரவு வெகுநேரம் கழித்துத் தூங்குகிறீர்களா? காலையில் வெகு சீக்கிரமாக எழுந்திருக்கிறீர்களா? இரவு முழுவதும் தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருக்கிறீர்களா? போதுமான தூக்கம் இல்லை என்று உணர்கிறீர்களா? ஆமெனில் இதயத்திற்கு ஊறு விளைவித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள். இரவில் பெறும் நல்ல ஓய்வினால், இரத்த அழுத்தம் குறைந்து சீரற்ற இதயத் துடிப்பினையும் குறைக்கிறது. இரவில் நன்றாகத் தூங்கி ஓய்வெடுப்பவர்களுக்கு, இதய பாதிப்புகளும் மாரடைப்பும் வரும் வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. ஆகவே நாள்தோறும் இரவில் ஆறு முதல் எட்டு மணிநேரம் வரை ஆழ்ந்து தூங்குவதில்லை என்றால் மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதனால் தூக்கமின்மைக்கு மருத்துவ ரீதியான அல்லது உடல் ரீதியான காரணங்கள் இருக்கின்றனவா என்று தெரிந்து கொள்ள முடியும்.
Cīraṟṟa tūkka muṟai: Iravu vekunēram kaḻittut tūṅkukiṟīrkaḷā? Kālaiyil veku cīkkiramāka eḻuntirukkiṟīrkaḷā? Iravu muḻuvatum tūkkam varāmal paṭukkaiyil puraṇṭu koṇṭirukkiṟīrkaḷā? Pōtumāṉa tūkkam illai eṉṟu uṇarkiṟīrkaḷā? Āmeṉil itayattiṟku ūṟu viḷaivittuk koṇṭirukkiṟīrkaḷ eṉṟu poruḷ. Iravil peṟum nalla ōyviṉāl, iratta aḻuttam kuṟaintu cīraṟṟa itayat tuṭippiṉaiyum kuṟaikkiṟatu. Iravil naṉṟākat tūṅki ōyveṭuppavarkaḷukku, itaya pātippukaḷum māraṭaippum varum vāyppukaḷ kuṟaivākavē uḷḷaṉa. Ākavē nāḷtōṟum iravil āṟu mutal eṭṭu maṇinēram varai āḻntu tūṅkuvatillai eṉṟāl maruttuvarai cantittu paricōtaṉai ceytu koḷḷa vēṇṭum. Itaṉāl tūkkamiṉmaikku maruttuva rītiyāṉa allatu uṭal rītiyāṉa kāraṇaṅkaḷ irukkiṉṟaṉavā eṉṟu terintu koḷḷa muṭiyum.

வண்ணமயமான உணவுகளைத் தவிர்த்தல் 
பழங்களிலும் காய்கறிகளிலும், நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளைத் தவிர பொட்டாசியம் சத்தும் நிறைந்துள்ளது. இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கான முயற்சிகளில் சோடியத்தைக் குறைப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியமானது பொட்டாசியத்தைக் கூட்டுவது. எனவே அதிக அளவு காய்கறிகளையும், பழங்களையும் எடுத்துக் கொள்ளும் போது, உடலில் பொட்டாசியத்தின் அளவும் கூடுகிறது. பொட்டாசியமானது சோடியத்தின் விளைவுகளைக் குறைத்து, உயர் ரத்த அழுத்தத்தினையும் குறைக்கிறது. சிட்ரஸ் பழங்கள், வாழைப்பழங்கள், உருளைக்கிழங்கு, தக்காளி, பீன்ஸ் ஆகியவற்றில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. எனவே வெறும் சாதத்தினை மட்டும் உண்பதுடன், வண்ணமயமான காய்கறிகளையும் ,பழங்களையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, ஆப்பிள், பேரிக்காய், வெள்ளரி, காலிஃப்ளவர் போன்ற காய்கறிகளையும், பழங்களையும் உணவில் அதிகமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு, மற்றவர்களைக் காட்டிலும், மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு 52% குறைவு என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Vaṇṇamayamāṉa uṇavukaḷait tavirttal: Paḻaṅkaḷilum kāykaṟikaḷilum, nārccattu, vaiṭṭamiṉkaḷ, tātukkaḷ maṟṟum āṉṭi-āksiṭaṉṭṭukaḷait tavira poṭṭāciyam cattum niṟaintuḷḷatu. Iratta aḻuttattaik kuṟaippataṟkāṉa muyaṟcikaḷil cōṭiyattaik kuṟaippatu evvaḷavu mukkiyamō, atē aḷavu mukkiyamāṉatu poṭṭāciyattaik kūṭṭuvatu. Eṉavē atika aḷavu kāykaṟikaḷaiyum, paḻaṅkaḷaiyum eṭuttuk koḷḷum pōtu, uṭalil poṭṭāciyattiṉ aḷavum kūṭukiṟatu. Poṭṭāciyamāṉatu cōṭiyattiṉ viḷaivukaḷaik kuṟaittu, uyar ratta aḻuttattiṉaiyum kuṟaikkiṟatu. Ciṭras paḻaṅkaḷ, vāḻaippaḻaṅkaḷ, uruḷaikkiḻaṅku, takkāḷi, pīṉs ākiyavaṟṟil poṭṭāciyam niṟaintuḷḷatu. Eṉavē veṟum cātattiṉai maṭṭum uṇpatuṭaṉ, vaṇṇamayamāṉa kāykaṟikaḷaiyum,paḻaṅkaḷaiyum uṇavil cērttuk koḷḷa vēṇṭum. Camīpattil mēṟkoḷḷappaṭṭa āyviṉ paṭi, āppiḷ, pērikkāy, veḷḷari, kāliḥpḷavar pōṉṟa kāykaṟikaḷaiyum, paḻaṅkaḷaiyum uṇavil atikamāka eṭuttuk koḷpavarkaḷukku, maṟṟavarkaḷaik kāṭṭilum, māraṭaippu ēṟpaṭum vāyppu 52% kuṟaivu eṉṟu kaṇṭupiṭikkappaṭṭuḷḷatu.


போதுமான அளவு நடக்காதிருத்தல் 
குறைந்த அளவு தூரத்தினைக் கடப்பதற்குக் கூட நடந்து செல்லாமல், காரில் சென்றீர்களானால், இதயத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் பணிகளைச் செய்கிறீர்கள் என்று பொருள். ஆகவே கடைகளுக்கோ, வங்கிகளுக்கோ அல்லது ஏதாவது சொந்த வேலைகளுக்கோ செல்லும் போது காரை நிறுத்திவிட்டு நடந்து செல்லுங்கள். அதிலும் ஒரு நாளைக்கு 10,000 அடிகள் நடந்தால், 45 நிமிடங்கள் முதல் ஒரு மணிநேரம் வரை உடற்பயிற்சி செய்ததற்கு சமானம். எனவே போதுமான அளவு நடப்பது அவசியம்.
Pōtumāṉa aḷavu naṭakkātiruttal: Kuṟainta aḷavu tūrattiṉaik kaṭappataṟkuk kūṭa naṭantu cellāmal, kāril ceṉṟīrkaḷāṉāl, itayattiṟkup pātippu ēṟpaṭuttum paṇikaḷaic ceykiṟīrkaḷ eṉṟu poruḷ. Ākavē kaṭaikaḷukkō, vaṅkikaḷukkō allatu ētāvatu conta vēlaikaḷukkō cellum pōtu kārai niṟuttiviṭṭu naṭantu celluṅkaḷ. Atilum oru nāḷaikku 10,000 aṭikaḷ naṭantāl, 45 nimiṭaṅkaḷ mutal oru maṇinēram varai uṭaṟpayiṟci ceytataṟku camāṉam. Eṉavē pōtumāṉa aḷavu naṭappatu avaciyam.


Share your comments in Friends Chat -> http://FriendsTamil.cbox.ws



Thanks

Thursday, 4 April 2013

மாரடைப்பை தடுக்க - To prevent heart attack


மாரடைப்பை தடுக்க 30 எளிய வழிகள்


வேகமான இந்த உலகத்தில் ஜனனம் போல், மரணமும் வேகமாக பல்வேறு உருவங்களில் வந்து கொண்டிருக்கிறது. நமது மூதாதையர்கள் கடைபிடித்த உணவுப் பழக்கங்கள், வாழ்க்கை நெறிகளிலிருந்து படுவேகமாக விலகி, அதைவிட அதிக வேகத்தில் நாம் சென்று கொண்டிருக்கிறோம்! எங்கே? எவருக்கும் பதில் தெரியாத கேள்வி இது? அன்று 90 முதல் 100 வயது வரை ஆரோக்கியமாக இருந்து மறைந்தவர்கள் ஒரு புறம், இன்று 30 மற்றும் 40-களிலேயே மருத்துவ காப்பீட்டினை முழுமையாக பயன்படுத்தும் நிலவரம்!

அந்த வகையில் இன்றைய தலைமுறையை ஆட்டிப்படைக்கும் மோசமான நோயாக மாரடைப்பு இருக்கிறது. 30 வயதான ஆணும், 40 வயதான பெண்ணும் மிகச் சாதாரணமாக எதிர் கொள்ளும் நோயாக மாரடைப்பு விளங்குகிறது. இதிலிருந்து சுலபமாக தப்பிச் செல்வது எப்படி என்று பார்ப்போமா!!!


உடற்பயிற்சி
நல்ல உடற்பயிற்சியானது ஆரோக்கியத்தின் நண்பன் என்றும், தொடர்ச்சியான உடற்பயிற்சி, உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதில் முக்கிய பங்காற்றுகிறது என்பதையோ மறுக்க முடியாது. தொடர்ச்சியான உடற்பயிற்சியானது மாரடைப்பு மற்றும் பிற இதயம் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து விலகியிருக்கச் செய்கிறது என ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.



டார்க் சாக்லெட்
எரிச்சலூட்டாத தாதுக்களையுடைய கலவையான டார்க் சாக்லெட்கள், இரத்தக்குழாயின் நெகிழ்வுத் தன்மையை பராமரிப்பதிலும், இரத்தத்திலுள்ள கொழுப்பின் அளவை குறைக்கவும் செய்கின்றன. டார்க் சாக்லெட்கள் இரத்தத்திலுள்ள செரோட்டின் அளவினை அதிகரிக்கவும், உடலை சிறு சிறு அதிர்ச்சிகளிலிருந்து எளிதில் மீட்டு கொண்டு வரவும் உதவியாக இருக்கின்றன.



வைட்டமின் பி காம்ப்ளக்ஸ்
வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் இதயத்தை பலவீனப்படுத்தும் கூட்டுப் பொருட்களை அதிகரிக்கும் ஹோமோசிஸ்டைன் போன்ற பொருட்களை குறைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. மேலும் இந்த வைட்டமின் இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.



உறக்கம்
இரவில் 7 மணி நேரத்திற்கும் குறைவாக உறங்குபவர்கள் மற்றவர்களை விட ஆபத்தான கட்டத்தில் இருப்பவர்களாவர். தொந்தரவில்லாத நீண்ட நேரத் தூக்கம் இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவை முறையாக பராமரிப்பதற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.



மீன்
ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலங்களை அதிகமாக சேமித்து வைத்திருக்கும் மீன்கள் இரத்தக்குழாய் செல்களின் வளர்ச்சியிலும் மற்றும் இரத்தத்தில் முறையான கொழுப்பின் அளவை பராமரிக்கவும் உதவுகின்றன. மேலும், மீன்கள் இரத்தக்குழாய் சவ்வுகளை குறைக்கவும் உதவுகின்றன. உப்பு நீர் மீன் வகைகளான ஹாலிபுட், காட் மற்றும் சால்மன் வகை மீன்களை வாரத்திற்கு இருமுறை உணவில் சேர்த்துக் கொள்வது இதயப் பராமரிப்பிற்கு மிகவும் ஏற்ற உணவுகளாகும்.





அதிக நார்ச்சத்துள்ள காலை உணவு
உடலில் குறைந்த அளவு கிளைசீமிக் உள்ள காலை நேரங்களில், அதிக நார்ச்சத்துடைய உணவுகளான ஓட்ஸ் சேர்த்துக் கொள்வது உடல் வலிமையை அதிகரிக்கும். அறிவியல் கூற்றுகளின் படி, அதிக நார்ச்சத்துடைய பல்வகை தானிய உணவுகளை உண்பவர்கள் மற்றவர்களை விட 23% குறைந்த அளவே இதய நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள்.



ஆளி விதைகள்
இதயத்தை பத்திரமாக பார்த்துக் கொள்வதில் ஆளி விதைகள் பெரும் பங்கு வகிக்கின்றன. நல்ல அளவிலான நார்ச்சத்தையும், உடலுக்கு தேவையான கொழுப்புகளையும் சேமித்து வைத்துள்ள இந்த விதைகளை அப்படியே சாப்பிடவும் முடியும் அல்லது எண்ணையாகவும் மாற்றி உண்ண முடியும்.



பூண்டு
நல்ல காரமான வெள்ளைப் பூண்டு கொழுப்பினைக் குறைக்கும் அற்புத கருவியாகும். இது ஹார்மோன்களின் வேகத்தை அதிகரிப்பதுடன், அழுக்கான இரத்தத்தையும் சுத்தப்படுத்துகிறது. அதேபோல, தினமும் ஒன்று அல்லது இரண்டு இலவங்கங்களை சேர்த்துக் கொள்வது இதயத்தை பலப்படுத்தும் வேலையை எளிதாக்கி விடும்.



டீ
ப்ளாக் அல்லது க்ரீன் என்று எந்த நிறத்திலிருந்தாலும் இதயத்தை காப்பதில் டீ சிறந்த சேவையைச் செய்து வருகிறது. டீயிலுள்ள அதிக ஆன்டி-ஆக்ஸிடன்ட் பொருட்கள் திரவ கட்டுப்பாடுகள் மற்றும் இரத்தக்குழாயை சுத்தம் செய்வது மட்டுமல்லாமல், கொழுப்பின் அளவை குறைக்கவும் பயன்படுகின்றன. இதன் விளைவாக டீ அருந்துபவர்களை மாரடைப்பு தொடுவது 11% தவிர்க்கப்படுகிறது.



குறட்டை வேண்டாமே!
பொதுவாகவே தூக்கத்தின் போது வெளிவிடும் சத்தமான குறட்டை விடும் பழக்கம் ஆண்களுக்கு இதய நோய்களை வரவழைக்கும் மோசமான விஷயமாகும். குறட்டை என்பது உறக்கத்தின் போது, எப்பொழுதாவதோ அல்லது நெருக்கமாகவோ மூச்சுவிடுவதை தொந்தரவு செய்யும் செயல் தான். இது மூச்சு விடும் பகுதிகள் மீண்டும் இணைவதை அவ்வப்போது தொந்தரவு செய்வதால் காலப்போக்கில் இதய நோய்களுக்கான வாய்ப்புகளை மேலும் அதிகரித்து விடும்.




ஹேசில் நட்
தினமும் 425 கிராம் ஹேசில் நட் கொட்டைகளை சாப்பிட்டு வருவது, மாரடைப்பு வருவதை 16% தவிர்க்கும். இதிலுள்ள எண்ணைய் பொருட்கள், இதயம் மற்றும் இரத்தக்குழாய்களின் பணியை அமைதியுடன் செய்ய வசதியாக இருக்கிறது. ஹேசில் நட் கொட்டைகளை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ அல்லது வறுத்தோ உணவுடன் சேர்த்து சாப்பிடலாம்.



பருப்பு வகைகள்
சாப்பிடும் உணவில் பருப்பு வகைகளை சேர்த்துக் கொள்வது, இதயம் சம்பந்தமான நோய்களிலிருந்து வெகுவாக காப்பாற்றும். அதிலுள்ள அதிக நார்ச்சத்து மற்றும் பிற தாதுக்கள் இதயம் சிறப்பாக செயல்படத் தேவையான சத்துகளை உடனுக்குடன் தருகின்றன.



உடலுறவு
ஒரு நல்ல குடும்ப வாழ்க்கைக்கு இன்றியமையாத பகுதியாக உடலுறவு இருக்கும். அதே வேளையில், இதயத்தை நன்கு துடிப்புடன் செயல்பட வைக்கும் கருவியாகவும் இது உள்ளது. உடலுறவின் போது ஹார்மோன்களின் உற்பத்தி, தனிச்சமநிலை மற்றும் நாளங்களின் சக்தி ஆகியவை அதிகரிக்கப்படுகின்றன. ஆராய்ச்சி முடிவுகளின் படி, வாரத்திற்கு இரண்டு முறை உடலுறவு கொள்பவர்கள் தங்களுடைய 50-ம் வயதுகளிலும் கூட மாரடைப்புக்கான வாய்ப்புகளை மிக குறைவாக பெற்றுள்ளனர்.




ஈகோஸ்பிரின் (Ecosprin)
ஈகோஸ்பிரினில் உள்ள எரிச்சலூட்டாத சக்தியானது இரத்த அழுத்தம் மற்றும் உணர்வு ரீதியான பயங்களை போக்கும் வகையில் செயலாற்றி வருகிறது. எனினும் மருத்துவரின் ஆலோசனையின் படி, ஈகோஸ்பிரின் எடுத்துக் கொள்வது மட்டுமே நன்மை தரும்.




செர்ரி பழங்கள்
இந்த சிறிய அழகிய பழங்கள், இதயம் சம்பந்தமான நோய்களிலிருந்து வெகுவாக காப்பாற்றும் சக்தியைப் பெற்றிருக்கின்றன. ஆராய்ச்சி முடிவுகளின் படி, செர்ரி பழத்தின் நிறத்திற்கு காரணமான அந்தோசையனைன் என்னும் நிறமூட்டும் பொருள், யூரிக் அமிலத்தின் அளவை குறைப்பதற்கு மிகவும் அவசியமானதாக உள்ளது. ஏனெனில் இரத்தத்தில் அதிக அளவு யூரிக் அமிலம் இருப்பது மாரடைப்பிற்கு வழி வகுக்கும். செர்ரி பழங்களை அப்படியே பழங்களாகவோ, காய வைத்தோ அல்லது பழச்சாறாக பிழிந்தோ சாப்பிட்டு இதயத்தை பாதுகாத்திடுங்கள்.



பீன்ஸ் அதிக அளவில் ஃபோலிக் அமிலத்தைப் பெற்றுள்ள பீன்ஸ், இரத்தத்தின் திரவத் தன்மையை உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய தாவர உணவாகும். இதன் மூலம் இதய சவ்வுகளின் நலனை பாதுகாத்திட முடியும். தினமும் ஒரு கப் பீன்ஸ் சாப்பிடுவது, இதயத்தை பாதுகாப்பாக வைத்திடும்.


ஆரஞ்சு
வைட்டமின் சி அதிகளவில் கொண்டுள்ள ஆரஞ்சுப் பழங்கள் குறைவான கொழுப்பினை கொண்டிருக்கிறது மற்றும் இது இரத்தக்குழாய் அடைப்புகளை சரி செய்யும் பணியையும் செய்யும் பழமாக இருக்கிறது. ஆரஞ்சுப் பழத்தை பழமாகவும், பழச்சாறாகவும் சாப்பிடலாம். ஆகவே தினமும் ஒரு ஆரஞ்சுப் பழத்தைச் சாப்பிட்டு, இதயக் குழாய்களை புத்துணர்வுடன் வைத்துக் கொள்ளுங்கள்.



காற்றடைக்கப்பட்ட பானங்கள்
காற்றடைக்கப்பட்ட பானங்கள், உடலின் சர்க்கரை அளவை அதிகரிப்பதுடன், வெறும் கலோரிகளை மட்டுமே கொடுக்கும் தன்மையுடையவையாகும். இந்த வர்த்தக பானங்கள் உடல் பருமன் அதிகரிப்பதற்கும், இதய நோய்கள் வரவும் முக்கிய காரணமாக அமைந்துள்ளன. எனவே தண்ணீரை அதிகமாக எடுத்துக் கொள்வது அல்லது பழச்சாறுகளை எடுத்துக் கொள்வது, இதற்கு மாற்றான ஆரோக்கியமான வழிமுறைகளாகும்.



தண்ணீர்
உடலுக்கு முறையான நீர் பராமரிப்பினை செய்து வந்தால், இரத்தத்தின் நீர்மத்தன்மையும், உள்ளடைப்புகளும் அவ்வப்போது சரி செய்யப்பட்டுவிடும். எனவே நாளொன்றுக்கு குறைந்தது 2.5 லிட்டர் தண்ணீரை குடித்து வருவது இரத்தத்தின் அமிலங்களை தள்ளும் சக்தியையும் மற்றும் கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கவும் உதவி செய்யும்.




இஞ்சி
மாரடைப்பிற்கு ஒரு முக்கிய காரணமாக நெஞ்சு எரிச்சல் உள்ளது. இது போன்ற காலங்களில் எரிச்சலை குறைக்கக் கூடிய இஞ்சி போன்ற பொருட்களை சேர்த்துக் கொள்வது மாரடைப்பை தவிர்த்து விடும்




சிறுநீரை கட்டுப்படுத்துதல் (Bladder Control)
ஆய்வு முடிவுகளின் படி சிறுநீர் வெளியேறுவதை அதிகமாக கட்டுப்படுத்துபவர்கள், குறைவாக கட்டுப்படுத்துபவர்களை விட மிக அதிகமான இதய பாதிப்புக்குள்ளாகிறார்கள். சிறுநீரகப் பைகளில் தரப்படும் அதிக அழுத்தம் இதயத்துடிப்பின் வேகத்தை அதிகரித்து, அதன் மூலம் இதய இரத்தக்குழாய்களில் உராய்வு நிலையை ஏற்படுத்தி, மாரடைப்பை ஏற்படுத்துகின்றன. எனவே, அந்தந்த நேரத்திற்கு சிறுநீர் கழிப்பது இதயத்தைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், பின்னால் வரக்கூடிய பிரச்சனைகளையும் வீழ்ச்சியடையச் செய்கின்றன.




ஓய்வு
எப்பொழுதும் வேலை மட்டுமே, ஓய்விற்கு நேரமில்லை என்பது சோர்வடையச் செய்வது மட்டுமல்லாமல், மாரடைப்பையும் வரச் செய்து விடும். ஆகவே கடுமையான வேலைப் பளுவிற்கு நடுவே அவ்வப்போது ஓய்வுக்கான வெளியே சுற்றுலா செல்பவர்களுக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு மிகக் குறைவாகவே உள்ளதை ஆய்வு முடிவுகள் உறுதி செய்கின்றன.




இதயத்துடிப்பில் மாறுபாடு
இதயத்துடிப்பு, நாம் செய்யும் ஒவ்வொரு வேலையையும் பொறுத்து மாறுபட்டு அமையும். வெப்பமான சூழ்நிலை மற்றும் அதிக மாசுபட்ட சூழல் ஆகியவை இதயத் துடிப்பு மிக வேகமாக அதிகரிக்க காரணமானவையாகும். செயற்கையாக குளிரூட்டப்பட்ட இடங்களிலும், கிருமிகள் தாக்காத இடங்களிலும் வாழ்வது இதயத்தின் அதிகபட்ச வேகத்தையும், வேலையையும் குறைக்கும்.




பல்வகை வைட்டமின்
உணவுகள் வேலைப்பளு மிக்க வாழ்க்கையால் முறையான சரிவிகித உணவுகளை வசதியிருந்தும் சாப்பிட முடிவதில்லை. எனவே முறையான உணவுக் கட்டுப்பாடுகளை பராமரிப்பது, ஊட்டச்சத்து குறைபாடுகளை சரி செய்யும். மேலும் மருத்துவரிடம் தேவையான தினசரி வைட்டமின் வகைகளை கேட்டறிந்து கொள்ளவும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், இதயக் குழாய்களை வலிமைப்படுத்தி, மொத்தமாகவே உடல் நலனைக் காத்திடும்.




மன அழுத்த மேலாண்மை
இன்றைய காலகட்டத்தில் இதயத்திற்கு அபாயம் ஏற்படுத்தும் முதன்மையான செயலாக மன அழுத்தம் உள்ளது. மன அழுத்தம் ஏற்படும் வேளைகளில் ஹார்மோன்களின் வருகை அதிகரிக்கப்பட்டு, அவற்றை ஈடுகட்டும் விதமாக இதயத்தின் குழாய்கள், அவற்றின் வலிமைக்கும் மேலாக வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இதன் விளைவாக இதயம் பலவீனப்படுவது மட்டுமல்லாமல், மாரடைப்பும் வரும் அபாயம் அதிகரிக்கிறது. எனவே மன அழுத்தம் இல்லாமல், வேலைகளை செய்து வருவது இதயத்தை பாதுகாப்பதற்கான சிறந்த வழிமுறையாக கொள்ளலாம்.




புகை நமக்குப் பகை
என்னதான் விழிப்புணர்வு ஏற்பட்டிருந்தாலும் புகை பிடிக்கும் பழக்கம் நாளுக்கு நாள் கூடி வருகிறது. புகை பிடிப்பவர்கள், புகைபிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களை விட 25% அதிகமாக மாரடைப்பிற்குள்ளாகும் அபாயத்தில் இருப்பதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. எனவே, பகையான புகையை விட்டொழியுங்கள், ஆரோக்கியமான வாழ்வினை வாழத் தொடங்குங்கள்.




நீரிழிவு பரிசோதனைகள்
நீரிழிவு நோயுள்ளவர்களின் உடலில் உள்ள அதிக பட்ச இன்சுலின் எதிர்ப்பு சக்தியின் காரணமாக அவர்கள் மாரடைப்பால் அதிகமாக பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. அத்தகையவர்கள அவ்வப்போது உடலின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை பரிசோதனை செய்து உறுதிப்படுத்திக் கொள்வது, மாரடைப்பு ஏற்படுவதைத் தவிர்க்க எடுக்க வேண்டிய முக்கியமான நடவடிக்கையாகும். முறையான உணவுக் கட்டுப்பாடும், மருந்துகளும், நீரிழிவு நோயை குணப்படுத்துவதுடன், இதயம் சம்பந்தமான சிக்கல்கள் வராமலும் தடுத்து விடும்.




மனச்சோர்வு
மனச்சோர்வு என்று அழைக்கப்படும் இந்த பிரச்னை நேரடியாக மாரடைப்பிற்கு கதவை திறந்து விடும் வேளையை அமைதியாக செய்யும். மனச்சோர்வு உடையவர்களின், உடலில் ஆக்ஸிடோசின் மற்றும் செரோடோனின் ஆகியவற்றின் உற்பத்தி குறையத் தொடங்கி, காலப்போக்கில் இரத்த ஓட்டம் தடைபடக் காரணமாகிவிடும். முறையான கவுன்சிலிங் மற்றும் உளவியல் ஆலோசனைகள் மூலம் மட்டுமே இந்த மனச்சோர்வினை தடுக்க முடியும்.




கொழுப்பின் அளவை தொடர்ச்சியாக பரிசோதித்தல்
ஒவ்வொரு வருடமும் உடலிலுள்ள கொழுப்பின் அளவை தவறாமல் பரிசோதித்து அறிவது, இதயம் பலவீனமடைவதை தடுப்பதற்கான முதன்மையான வழிமுறையாகும். இவ்வாறு கொழுப்பின் அளவினை அறிவதன் மூலம் உடலுக்கு கொடுக்க வேண்டிய சரியான அளவிலான உணவு, உடற்பயிற்சி ஆகியவற்றை அறிந்து, அவற்றை முறையாக பயன்படுத்துவதன் மூலமாக ஆரோக்கியத்தைப் பெறலாம். மேற்கண்ட வழிமுறைகளை தவறாமல் பின்பற்றும் போது, பலமான இதயத்தை கொண்டவராகவும் மற்றும் இதய நோய்களிலிருந்து விடுதலை பெற்றவராகவும் இருக்க முடியும்.




Healthy Ways To Prevent Heart Disease


A healthy way of leading life is through keeping your heart clean. We are not talking about your thought process here. But, the food intake and exercises you perform to keep your heart healthy and clean are very important. It is a fact that many strive to lead a healthy lifestyle by sticking to strict diet. But, somehow we fail to suppress our instincts to binge on our favourite 'packaged foods'. These foods are not just harmful but can have severe effect on health in a long run.

Heart is one of the most prominent and sensitive part of a human body. It plays a major role in supplying fresh blood to the entire body that keeps us healthy and normal. Hence, it is very important for us to follow certain healthy routine to keep our heart hale and healthy.

Healthy Ways To Prevent Heart Disease

Here are few simple tips that will help you keep a healthy heart:

Physical health: Exercise regularly One of the most basic tip is to exercise regularly. Obese people are more prone to heart related diseases than a normal weighing person. Daily exercise cuts extra fat that is stored in the body, especially around your waist line. This helps in preventing heart related diseases.


Maintaining correct weight: Many of us try to reduce immense weight with a wrong assumption that being overweight leads to heart diseases. But the fact is that, even lean people are prone to suffer from heart related diseases. One should maintain a steady weight and avoid trying to reduce weight unnecessarily.

Avoid being active and passive smoker: Cigarette smoking is not just injurious for your lungs but also heart. Smoking everyday leads to high blood pressure and eventually increasing the risk of heart diseases. Like active smokers, passive smokers are also vulnerable to falling prey to the deadly disease.


Diet factors:


Avoid packaged food: In order to prevent heart disease, one should avoid packaged foods. Anything that comes in a package or processed should be completely avoided. These packaged food not only contains stored fat but also are high on oxidants that are harmful for the body.

Cut on sugar: This could be very difficult to accept by people with sweet tooth. Consuming high level of sugar on everyday basis not only risk the chances of getting affected by diabetics, but also heart diseases. It is better to substitute sugar with either free sugar crystals or brown sugar.

Have dairy products: Daily consumption of dairy products like yogurts and buttermilk is said to be beneficial for the overall health. But, one should make sure that these products should be skimmed and consumed in less quantity.

Mental Health: The most basic and important factor is to be fit mentally. Mental stress should be avoided completely and instead one should learn to manage stress. Mental health is considered to be the most important aspect that determines the condition of your heart. Stress is also considered to be the single most significant factor behind the cause and prevention of heart diseases.

These are some of the few simple tips to keep your heart healthy and sound.

Thanks