Flash News

Friends Tamil Chat

Search This Blog

Showing posts with label heart disease. Show all posts
Showing posts with label heart disease. Show all posts

Sunday, 28 July 2013

இதய நோய்க்கு வழிவகுக்கும் சிறுசிறு தவறுகள் - Little mistakes lead to big heart disease

இதய நோய்க்கு வழிவகுக்கும் சிறுசிறு தவறுகள் - Little mistakes lead to big heart disease


இளமையில் எந்த சிரமத்தையும் தராமல் ஒத்துழைக்கின்ற உடல், நாளடைவில் வயதாக ஆக பல்வேறு பிரச்சனைகளை கொண்டு வந்துவிடுகிறது. அவற்றில் அதி முக்கியமானது இதயம் தொடர்பான பிரச்சனைகள். உணவுப்பழக்கம், தூக்க முறை, பணிகள், மனதிற்கு அழுத்தம் தரக்கூடிய நடவடிக்கைகள், ஓய்வு போன்ற பலதரப்பட்ட காரணங்களால், இரத்த ஓட்டம், இதயத்தின் பணிகள் போன்றவை பாதிக்கப்படும். ஆகவே சில விஷயங்களைக் கவனத்தில் கொண்டாலே, இதயத்திற்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும்.
Iḷamaiyil enta ciramattaiyum tarāmal ottuḻaikkiṉṟa uṭal, nāḷaṭaivil vayatāka āka palvēṟu piraccaṉaikaḷai koṇṭu vantuviṭukiṟatu. Avaṟṟil ati mukkiyamāṉatu itayam toṭarpāṉa piraccaṉaikaḷ. Uṇavuppaḻakkam, tūkka muṟai, paṇikaḷ, maṉatiṟku aḻuttam tarakkūṭiya naṭavaṭikkaikaḷ, ōyvu pōṉṟa palatarappaṭṭa kāraṇaṅkaḷāl, iratta ōṭṭam, itayattiṉ paṇikaḷ pōṉṟavai pātikkappaṭum. Ākavē cila viṣayaṅkaḷaik kavaṉattil koṇṭālē, itayattiṟku evvitap pātippum ēṟpaṭāmal irukkum.

குறிப்பாக நம்மை அறியாமல், நமது கவனக்குறைவாலும், அறியாமையினாலும் செய்யும் சிறு சிறு தவறுகள் நாளடைவில், இதயத்திற்கு ஊறு விளைவிக்கும் அளவுக்கு மிகப்பெரும் சவாலாக உருவெடுக்கக்கூடும்.
Kuṟippāka nam'mai aṟiyāmal, namatu kavaṉakkuṟaivālum, aṟiyāmaiyiṉālum ceyyum ciṟu ciṟu tavaṟukaḷ nāḷaṭaivil, itayattiṟku ūṟu viḷaivikkum aḷavukku mikapperum cavālāka uruveṭukkakkūṭum.

எனவே அத்தகைய தவறுகளை அறிந்துகொண்டால், அவற்றைத் தவிர்க்கவும் சரிசெய்து கொள்ளவும் பெரும் உதவியாக இருக்கும் அல்லவா? அதற்கு ஏதுவாக, பொதுவாக அனைவரும் செய்கின்ற சில தவறுகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. அதைப் படித்து, அவற்றை திருத்திக் கொண்டு, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.
Eṉavē attakaiya tavaṟukaḷai aṟintukoṇṭāl, avaṟṟait tavirkkavum cariceytu koḷḷavum perum utaviyāka irukkum allavā? Ataṟku ētuvāka, potuvāka aṉaivarum ceykiṉṟa cila tavaṟukaḷiṉ paṭṭiyal kīḻē tarappaṭṭuḷḷatu. Ataip paṭittu, avaṟṟai tiruttik koṇṭu, itayattai ārōkkiyamāka vaittuk koḷḷuṅkaḷ.

பரிசோதனைகளை மேற்கொள்ளாதிருத்தல் 
இதய நோய் உள்ள பெரும்பாலானோருக்கு அதற்கான அறிகுறிகளே தெரிவதில்லை. எனவே 20 வயது கடந்துவிட்டாலே, இரத்தத்திலுள்ள கொலஸ்ட்ராலின் அளவை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தவறாமல் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். மேலும் இரத்த அழுத்தத்தினை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சோதித்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல் உடல் எடை குறியீட்டெண்/பி.எம்.ஐ (body mass index) போன்றவற்றை மருத்துவரிடம் செல்லும் ஒவ்வொரு முறையும் சரிபார்க்க வேண்டும். 45 வயதிலிருந்து இரத்தத்திலுள்ள குளுகோஸின் அளவை மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். இதனால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.
Paricōtaṉaikaḷai mēṟkoḷḷātiruttal Itaya nōy uḷḷa perumpālāṉōrukku ataṟkāṉa aṟikuṟikaḷē terivatillai. Eṉavē 20 vayatu kaṭantuviṭṭālē, irattattiluḷḷa kolasṭrāliṉ aḷavai aintu āṇṭukaḷukku orumuṟai tavaṟāmal paricōtittuk koḷḷa vēṇṭum. Mēlum iratta aḻuttattiṉai iraṇṭu āṇṭukaḷukku orumuṟai cōtittuk koḷḷa vēṇṭum. Atumaṭṭumallāmal uṭal eṭai kuṟiyīṭṭeṇ/pi.Em.Ai (body mass index) pōṉṟavaṟṟai maruttuvariṭam cellum ovvoru muṟaiyum caripārkka vēṇṭum. 45 Vayatiliruntu irattattiluḷḷa kuḷukōsiṉ aḷavai mūṉṟāṇṭukaḷukku orumuṟai paricōtittuk koḷḷa vēṇṭum. Itaṉāl itayattai ārōkkiyamāka vaittuk koḷḷa muṭiyum.


குடும்ப வரலாற்றினை மறந்துவிடுதல் 
இதய நோய் வரும் வாய்ப்புகளை அறிய விரும்பினால், முதலில் குடும்பத்தில் பெரியவர்கள் யாருக்காவது இதய நோய் இருந்ததா அல்லது இருக்கிறதா என்று விசாரித்து அறிந்து கொள்ள வேண்டும். ஒருவேளை இப்போது இதய நோய் இருந்தவர்கள் உயிரோடு இல்லையென்றால், அவர்கள் என்ன காரணத்தினால், எத்தனை வயதில் இறந்தார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களது மருத்துவ வரலாற்றினைத் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களது வாழ்க்கை முறையை அறிந்து கொள்ளுதலும் உதவும். குழந்தைகளுக்கும் இளமையிலேயே, இதயம் தொடர்பான நோய்கள் இருந்தாலும், இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமுண்டு.
Kuṭumpa varalāṟṟiṉai maṟantuviṭutal Itaya nōy varum vāyppukaḷai aṟiya virumpiṉāl, mutalil kuṭumpattil periyavarkaḷ yārukkāvatu itaya nōy iruntatā allatu irukkiṟatā eṉṟu vicārittu aṟintu koḷḷa vēṇṭum. Oruvēḷai ippōtu itaya nōy iruntavarkaḷ uyirōṭu illaiyeṉṟāl, avarkaḷ eṉṉa kāraṇattiṉāl, ettaṉai vayatil iṟantārkaḷ eṉṟu terintu koḷḷa vēṇṭum. Avarkaḷatu maruttuva varalāṟṟiṉait terintu koḷḷa vēṇṭum. Avarkaḷatu vāḻkkai muṟaiyai aṟintu koḷḷutalum utavum. Kuḻantaikaḷukkum iḷamaiyilēyē, itayam toṭarpāṉa nōykaḷ iruntālum, itaya nōykaḷ varuvataṟkāṉa vāyppukaḷ atikamuṇṭu.

பற்களைப் பாதுகாக்க மறந்துவிடுதல் 
பல் ஆரோக்கியமும், இதய ஆரோக்கியமும் ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளவை. பல்வேறு ஆராய்ச்சி முடிவுகளின் படி, பல் பராமரிப்பு சரியாக இல்லாதவர்களுக்கும், ஈறுகளில் வீக்கம் உள்ளவர்களுக்கும், இதய நோய் வரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று சொல்கிறது. அதிலும் பல் ஈறுகளில் நீண்ட காலமாக வீக்கம் உள்ளவர்களுக்கு, அந்த வீக்கத்திலிருந்து பாக்டீரியாக்கள் வெளியேறி இரத்தத்தில் கலந்து விடுகின்றனவாம். மேலும் பற்களையும், பல் இடுக்குகளையும் முறையாக சுத்தம் செய்து, பற்களைப் பாதுகாப்புடன் பேணிவருபவர்களுக்கு ஆரோக்கியமான பற்கள் அமைவதோடு, ஆரோக்கியமான இதயமும் அமையும். அத்தகையவர்களுக்கு இதயம் தொடர்பான நோய்கள் வரும் வாய்ப்பும் குறைவாகவே இருக்கும்.
Paṟkaḷaip pātukākka maṟantuviṭutal: Pal ārōkkiyamum, itaya ārōkkiyamum oṉṟōṭu oṉṟu toṭarpuḷḷavai. Palvēṟu ārāycci muṭivukaḷiṉ paṭi, pal parāmarippu cariyāka illātavarkaḷukkum, īṟukaḷil vīkkam uḷḷavarkaḷukkum, itaya nōy varum vāyppukaḷ atikam uḷḷatu eṉṟu colkiṟatu. Atilum pal īṟukaḷil nīṇṭa kālamāka vīkkam uḷḷavarkaḷukku, anta vīkkattiliruntu pākṭīriyākkaḷ veḷiyēṟi irattattil kalantu viṭukiṉṟaṉavām. Mēlum paṟkaḷaiyum, pal iṭukkukaḷaiyum muṟaiyāka cuttam ceytu, paṟkaḷaip pātukāppuṭaṉ pēṇivarupavarkaḷukku ārōkkiyamāṉa paṟkaḷ amaivatōṭu, ārōkkiyamāṉa itayamum amaiyum. Attakaiyavarkaḷukku itayam toṭarpāṉa nōykaḷ varum vāyppum kuṟaivākavē irukkum.


போதுமான அளவு பால் பொருட்களை உண்ணாதிருத்தல் 
சமீபத்திய ஒரு ஆராய்ச்சியில் மாதவிலக்கு முடிவுற்ற (postmenopausal women) 82,000 பெண்களது வாழ்க்கை முறையானது 8 ஆண்டுகளாக ஆராயப்பட்டது. அதில் அதிகமான அளவு பால் பொருட்களை எடுத்துக் கொண்ட பெண்கள், பால் பொருட்களைக் குறைந்த அளவு உட்கொண்ட பெண்களை விட, 50% குறைவான அளவிலேயே இரண்டாம் வகை சர்க்கரை நோய் (type 2 diabetes) தாக்கும் அபாயத்தைப் பெற்றிருந்தார்கள். உடலுக்கு கலோரிகளைக் குறைக்கும் நோக்கத்திலும், கொழுப்புகளைக் குறைக்கும் எண்ணத்திலும், பால் பொருட்களைக் குறைத்துக் கொண்டால், அது இதயத்திற்கு நல்லதல்ல.
Pōtumāṉa aḷavu pāl poruṭkaḷai uṇṇātiruttal: Camīpattiya oru ārāycciyil mātavilakku muṭivuṟṟa (postmenopausal women) 82,000 peṇkaḷatu vāḻkkai muṟaiyāṉatu 8 āṇṭukaḷāka ārāyappaṭṭatu. Atil atikamāṉa aḷavu pāl poruṭkaḷai eṭuttuk koṇṭa peṇkaḷ, pāl poruṭkaḷaik kuṟainta aḷavu uṭkoṇṭa peṇkaḷai viṭa, 50% kuṟaivāṉa aḷavilēyē iraṇṭām vakai carkkarai nōy (type 2 diabetes) tākkum apāyattaip peṟṟiruntārkaḷ. Uṭalukku kalōrikaḷaik kuṟaikkum nōkkattilum, koḻuppukaḷaik kuṟaikkum eṇṇattilum, pāl poruṭkaḷaik kuṟaittuk koṇṭāl, atu itayattiṟku nallatalla.


சூரிய ஒளியில் நில்லாதிருத்தல் 
நல்ல வெயிலில் நிற்பதை யாரும் விரும்புவதில்லை. அதை யாரும் அறிவுறுத்துவதுமில்லை. ஆனாலும் நமது உடலுக்கு சூரிய ஒளியின் உதவியோடு மட்டும் தயாரிக்கப்படும் வைட்டமின் டி அவசியமானது. போதுமான நேரம் சருமத்தில் சூரிய ஒளிப்பட்டால் மட்டுமே சருமமானது, இந்த வைட்டமின் டி சத்தைத் தயாரிக்க முடியும். அண்மையில் மேற்கொண்ட ஆராய்ச்சியின் படி, வைட்டமின் டி அளவு குறைவாகப் பெற்றிருப்பவர்களை விட, வைட்டமின் டி அதிகம் உள்ளவர்களுக்கு, இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவாக உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவர்கள் காலை 10 மணி முதல் மாலை 3 மணிக்குள், 5 முதல் 30 நிமிடங்கள் வரை சூரிய ஒளியானது உடல் மீது படும் வண்ணம் நிற்பது நல்லது என்று கூறுகிறார்கள்.
Cūriya oḷiyil nillātiruttal 
Nalla veyilil niṟpatai yārum virumpuvatillai. Atai yārum aṟivuṟuttuvatumillai. Āṉālum namatu uṭalukku cūriya oḷiyiṉ utaviyōṭu maṭṭum tayārikkappaṭum vaiṭṭamiṉ ṭi avaciyamāṉatu. Pōtumāṉa nēram carumattil cūriya oḷippaṭṭāl maṭṭumē carumamāṉatu, inta vaiṭṭamiṉ ṭi cattait tayārikka muṭiyum. Aṇmaiyil mēṟkoṇṭa ārāycciyiṉ paṭi, vaiṭṭamiṉ ṭi aḷavu kuṟaivākap peṟṟiruppavarkaḷai viṭa, vaiṭṭamiṉ ṭi atikam uḷḷavarkaḷukku, irattak kuḻāykaḷil aṭaippu ēṟpaṭum vāyppu kuṟaivāka uḷḷatāka kaṇṭupiṭikkappaṭṭuḷḷatu. Mēlum maruttuvarkaḷ kālai 10 maṇi mutal mālai 3 maṇikkuḷ, 5 mutal 30 nimiṭaṅkaḷ varai cūriya oḷiyāṉatu uṭal mītu paṭum vaṇṇam niṟpatu nallatu eṉṟu kūṟukiṟārkaḷ.


பீன்ஸைத் தவிர்த்தல் 
கருப்பு பீன்ஸ், கிட்னி பீன்ஸ் மற்றும் இதர வகை பீன்ஸ்களில் புரதச்சத்து மிகுந்துள்ளது. இவற்றில் நிறைவுற்ற கொழுப்புகள் இல்லை. மேலும் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் தன்மை கொண்ட, கரையக்கூடிய நார்ச்சத்துக்களும் நிறைந்துள்ளன. ஓட்ஸ் மற்றும் பார்லியிலும் கூட, இந்த கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஏனெனில் இவைகளில் இரத்தக்குழாய்களில் உள்ள கொலஸ்ட்ராலை நீக்கும் சக்தியானது உள்ளது.
Pīṉsait tavirttal: Karuppu pīṉs, kiṭṉi pīṉs maṟṟum itara vakai pīṉskaḷil purataccattu mikuntuḷḷatu. Ivaṟṟil niṟaivuṟṟa koḻuppukaḷ illai. Mēlum kolasṭrālaik kuṟaikkum taṉmai koṇṭa, karaiyakkūṭiya nārccattukkaḷum niṟaintuḷḷaṉa. Ōṭs maṟṟum pārliyilum kūṭa, inta karaiyakkūṭiya nārccattukkaḷ niṟaintuḷḷaṉa. Ēṉeṉil ivaikaḷil irattakkuḻāykaḷil uḷḷa kolasṭrālai nīkkum caktiyāṉatu uḷḷatu.

உற்சாக பானங்களை அருந்துதல்
ஆற்றல் தரும், கார்பன்-டை-ஆக்ஸைடு நிரப்பிய உற்சாக பானங்களில், சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளதால், இவை இரத்தத்தில் ட்ரை கிளிசரைடு அளவு உயர்வதற்கு காரணமாக உள்ளன. ட்ரை கிளிசரைடுகள் என்பவை ஒருவகை கொழுப்புகள். இவை இரத்தத்தின் பாகுத்தன்மையைக் கூட்டும் தன்மை கொண்டவை. ஏற்கனவே கொலஸ்ட்ரால் இருந்தால், அதன் காரணமாக இரத்தக்குழாய்களில் அடைப்புகள் உண்டாகும். அதோடு இந்த ட்ரை கிளிசரைடுகளால் இரத்தத்தின் கெட்டித்தன்மை அதிகரிக்கப்பட்டு, இரத்தமானது பாய்ந்தால், இரத்த ஓட்டத்திலும், இரத்த அழுத்தத்திலும் பாதிப்பு ஏற்படும். எனவே தாகம் ஏற்பட்டால், இது போன்ற உற்சாக பானங்களைத் தவிர்த்துவிட்டு, தண்ணீர், எலுமிச்சை ஜூஸ், சாத்துக்குடி ஜூஸ் அல்லது வேறு பழச்சாறுகளை அருந்துவது நல்லது. மேலும் கரும்புச்சாறு கூட தாகத்தைத் தவிர்ப்பதோடு, ஆற்றல் தரத்தக்கதாகும்.
Uṟcāka pāṉaṅkaḷai aruntutal: Āṟṟal tarum, kārpaṉ-ṭai-āksaiṭu nirappiya uṟcāka pāṉaṅkaḷil, carkkarai cērkkappaṭṭuḷḷatāl, ivai irattattil ṭrai kiḷicaraiṭu aḷavu uyarvataṟku kāraṇamāka uḷḷaṉa. Ṭrai kiḷicaraiṭukaḷ eṉpavai oruvakai koḻuppukaḷ. Ivai irattattiṉ pākuttaṉmaiyaik kūṭṭum taṉmai koṇṭavai. Ēṟkaṉavē kolasṭrāl iruntāl, ataṉ kāraṇamāka irattakkuḻāykaḷil aṭaippukaḷ uṇṭākum. Atōṭu inta ṭrai kiḷicaraiṭukaḷāl irattattiṉ keṭṭittaṉmai atikarikkappaṭṭu, irattamāṉatu pāyntāl, iratta ōṭṭattilum, iratta aḻuttattilum pātippu ēṟpaṭum. Eṉavē tākam ēṟpaṭṭāl, itu pōṉṟa uṟcāka pāṉaṅkaḷait tavirttuviṭṭu, taṇṇīr, elumiccai jūs, cāttukkuṭi jūs allatu vēṟu paḻaccāṟukaḷai aruntuvatu nallatu. Mēlum karumpuccāṟu kūṭa tākattait tavirppatōṭu, āṟṟal tarattakkatākum.

சீரற்ற தூக்க முறை 
இரவு வெகுநேரம் கழித்துத் தூங்குகிறீர்களா? காலையில் வெகு சீக்கிரமாக எழுந்திருக்கிறீர்களா? இரவு முழுவதும் தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருக்கிறீர்களா? போதுமான தூக்கம் இல்லை என்று உணர்கிறீர்களா? ஆமெனில் இதயத்திற்கு ஊறு விளைவித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள். இரவில் பெறும் நல்ல ஓய்வினால், இரத்த அழுத்தம் குறைந்து சீரற்ற இதயத் துடிப்பினையும் குறைக்கிறது. இரவில் நன்றாகத் தூங்கி ஓய்வெடுப்பவர்களுக்கு, இதய பாதிப்புகளும் மாரடைப்பும் வரும் வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. ஆகவே நாள்தோறும் இரவில் ஆறு முதல் எட்டு மணிநேரம் வரை ஆழ்ந்து தூங்குவதில்லை என்றால் மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதனால் தூக்கமின்மைக்கு மருத்துவ ரீதியான அல்லது உடல் ரீதியான காரணங்கள் இருக்கின்றனவா என்று தெரிந்து கொள்ள முடியும்.
Cīraṟṟa tūkka muṟai: Iravu vekunēram kaḻittut tūṅkukiṟīrkaḷā? Kālaiyil veku cīkkiramāka eḻuntirukkiṟīrkaḷā? Iravu muḻuvatum tūkkam varāmal paṭukkaiyil puraṇṭu koṇṭirukkiṟīrkaḷā? Pōtumāṉa tūkkam illai eṉṟu uṇarkiṟīrkaḷā? Āmeṉil itayattiṟku ūṟu viḷaivittuk koṇṭirukkiṟīrkaḷ eṉṟu poruḷ. Iravil peṟum nalla ōyviṉāl, iratta aḻuttam kuṟaintu cīraṟṟa itayat tuṭippiṉaiyum kuṟaikkiṟatu. Iravil naṉṟākat tūṅki ōyveṭuppavarkaḷukku, itaya pātippukaḷum māraṭaippum varum vāyppukaḷ kuṟaivākavē uḷḷaṉa. Ākavē nāḷtōṟum iravil āṟu mutal eṭṭu maṇinēram varai āḻntu tūṅkuvatillai eṉṟāl maruttuvarai cantittu paricōtaṉai ceytu koḷḷa vēṇṭum. Itaṉāl tūkkamiṉmaikku maruttuva rītiyāṉa allatu uṭal rītiyāṉa kāraṇaṅkaḷ irukkiṉṟaṉavā eṉṟu terintu koḷḷa muṭiyum.

வண்ணமயமான உணவுகளைத் தவிர்த்தல் 
பழங்களிலும் காய்கறிகளிலும், நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளைத் தவிர பொட்டாசியம் சத்தும் நிறைந்துள்ளது. இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கான முயற்சிகளில் சோடியத்தைக் குறைப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியமானது பொட்டாசியத்தைக் கூட்டுவது. எனவே அதிக அளவு காய்கறிகளையும், பழங்களையும் எடுத்துக் கொள்ளும் போது, உடலில் பொட்டாசியத்தின் அளவும் கூடுகிறது. பொட்டாசியமானது சோடியத்தின் விளைவுகளைக் குறைத்து, உயர் ரத்த அழுத்தத்தினையும் குறைக்கிறது. சிட்ரஸ் பழங்கள், வாழைப்பழங்கள், உருளைக்கிழங்கு, தக்காளி, பீன்ஸ் ஆகியவற்றில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. எனவே வெறும் சாதத்தினை மட்டும் உண்பதுடன், வண்ணமயமான காய்கறிகளையும் ,பழங்களையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, ஆப்பிள், பேரிக்காய், வெள்ளரி, காலிஃப்ளவர் போன்ற காய்கறிகளையும், பழங்களையும் உணவில் அதிகமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு, மற்றவர்களைக் காட்டிலும், மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு 52% குறைவு என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Vaṇṇamayamāṉa uṇavukaḷait tavirttal: Paḻaṅkaḷilum kāykaṟikaḷilum, nārccattu, vaiṭṭamiṉkaḷ, tātukkaḷ maṟṟum āṉṭi-āksiṭaṉṭṭukaḷait tavira poṭṭāciyam cattum niṟaintuḷḷatu. Iratta aḻuttattaik kuṟaippataṟkāṉa muyaṟcikaḷil cōṭiyattaik kuṟaippatu evvaḷavu mukkiyamō, atē aḷavu mukkiyamāṉatu poṭṭāciyattaik kūṭṭuvatu. Eṉavē atika aḷavu kāykaṟikaḷaiyum, paḻaṅkaḷaiyum eṭuttuk koḷḷum pōtu, uṭalil poṭṭāciyattiṉ aḷavum kūṭukiṟatu. Poṭṭāciyamāṉatu cōṭiyattiṉ viḷaivukaḷaik kuṟaittu, uyar ratta aḻuttattiṉaiyum kuṟaikkiṟatu. Ciṭras paḻaṅkaḷ, vāḻaippaḻaṅkaḷ, uruḷaikkiḻaṅku, takkāḷi, pīṉs ākiyavaṟṟil poṭṭāciyam niṟaintuḷḷatu. Eṉavē veṟum cātattiṉai maṭṭum uṇpatuṭaṉ, vaṇṇamayamāṉa kāykaṟikaḷaiyum,paḻaṅkaḷaiyum uṇavil cērttuk koḷḷa vēṇṭum. Camīpattil mēṟkoḷḷappaṭṭa āyviṉ paṭi, āppiḷ, pērikkāy, veḷḷari, kāliḥpḷavar pōṉṟa kāykaṟikaḷaiyum, paḻaṅkaḷaiyum uṇavil atikamāka eṭuttuk koḷpavarkaḷukku, maṟṟavarkaḷaik kāṭṭilum, māraṭaippu ēṟpaṭum vāyppu 52% kuṟaivu eṉṟu kaṇṭupiṭikkappaṭṭuḷḷatu.


போதுமான அளவு நடக்காதிருத்தல் 
குறைந்த அளவு தூரத்தினைக் கடப்பதற்குக் கூட நடந்து செல்லாமல், காரில் சென்றீர்களானால், இதயத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் பணிகளைச் செய்கிறீர்கள் என்று பொருள். ஆகவே கடைகளுக்கோ, வங்கிகளுக்கோ அல்லது ஏதாவது சொந்த வேலைகளுக்கோ செல்லும் போது காரை நிறுத்திவிட்டு நடந்து செல்லுங்கள். அதிலும் ஒரு நாளைக்கு 10,000 அடிகள் நடந்தால், 45 நிமிடங்கள் முதல் ஒரு மணிநேரம் வரை உடற்பயிற்சி செய்ததற்கு சமானம். எனவே போதுமான அளவு நடப்பது அவசியம்.
Pōtumāṉa aḷavu naṭakkātiruttal: Kuṟainta aḷavu tūrattiṉaik kaṭappataṟkuk kūṭa naṭantu cellāmal, kāril ceṉṟīrkaḷāṉāl, itayattiṟkup pātippu ēṟpaṭuttum paṇikaḷaic ceykiṟīrkaḷ eṉṟu poruḷ. Ākavē kaṭaikaḷukkō, vaṅkikaḷukkō allatu ētāvatu conta vēlaikaḷukkō cellum pōtu kārai niṟuttiviṭṭu naṭantu celluṅkaḷ. Atilum oru nāḷaikku 10,000 aṭikaḷ naṭantāl, 45 nimiṭaṅkaḷ mutal oru maṇinēram varai uṭaṟpayiṟci ceytataṟku camāṉam. Eṉavē pōtumāṉa aḷavu naṭappatu avaciyam.


Share your comments in Friends Chat -> http://FriendsTamil.cbox.ws



Thanks

Thursday, 18 July 2013

உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள் - Temptations need to be avoided for good health


உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்
Uṭal ārōkkiyattiṟku tīṅku viḷaivikkum ceyalkaḷ
விருப்பப்படுவது மனிதனின் இயல்பு. ஒவ்வொருவரும் ஏதாவது ஒன்றின் மீது விருப்பம் கொள்வார்கள். அது மனிதர்களின் மீதாகட்டும் அல்லது ஏதாவது ஒரு பொருளின் மீதாகட்டும் அல்லது ஏதாவது ஒரு செயல் அல்லது பழக்கத்தின் மீதாகட்டும். இந்த விருப்பம் ஒரு உச்ச கட்டத்திற்கு போகும் போது ஆவலாக மாறுகிறது. ஆவல் என்பது நம் வாழ்க்கையில் பொதுவான ஒன்று தான். விருப்பம் உச்ச நிலையை அடைவதால் சில வகையான ஆவல்கள் நல்லதையே செய்தாலும், சில வகையான ஆவல்கள் முக்கியமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

Viruppappaṭuvatu maṉitaṉiṉ iyalpu. Ovvoruvarum ētāvatu oṉṟiṉ mītu viruppam koḷvārkaḷ. Atu maṉitarkaḷiṉ mītākaṭṭum allatu ētāvatu oru poruḷiṉ mītākaṭṭum allatu ētāvatu oru ceyal allatu paḻakkattiṉ mītākaṭṭum. Inta viruppam oru ucca kaṭṭattiṟku pōkum pōtu āvalāka māṟukiṟatu. Āval eṉpatu nam vāḻkkaiyil potuvāṉa oṉṟu tāṉ. Viruppam ucca nilaiyai aṭaivatāl cila vakaiyāṉa āvalkaḷ nallataiyē ceytālum, cila vakaiyāṉa āvalkaḷ mukkiyamāṉa piraccaṉaikaḷai ēṟpaṭuttum.

ஆவல் என்பது பல வகைபடும். மதுப்பழக்கம், புகைப்பிடிப்பது போன்றவைகள் தீய ஆவலுக்கான சில உதாரணகள். இப்படி தீய ஆவல்கள் உங்களை மட்டும் பாதிக்காமால், அடுத்தவர்களையும் பாதிக்கும். அதனால் தீய ஆவல்களை கட்டுப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். நம்மில் பல பேருக்கு நாம் கொண்டிருக்கும் ஆவல் தவறு என்பதே தெரியாத அளவுக்கு, அதில் மூழ்கி போயிருப்போம். ஆகவே உடல்நல ஆரோக்கியத்தை பேண வேண்டும் என்றால் கீழ்க்கூறிய பட்டியலில் இருக்கும் தீய ஆவல்களை தவிர்க்க வேண்டும்.

Āval eṉpatu pala vakaipaṭum. Matuppaḻakkam, pukaippiṭippatu pōṉṟavaikaḷ tīya āvalukkāṉa cila utāraṇakaḷ. Ippaṭi tīya āvalkaḷ uṅkaḷai maṭṭum pātikkāmāl, aṭuttavarkaḷaiyum pātikkum. Ataṉāl tīya āvalkaḷai kaṭṭuppaṭutta vēṇṭiyatu mikavum avaciyam. Nam'mil pala pērukku nām koṇṭirukkum āval tavaṟu eṉpatē teriyāta aḷavukku, atil mūḻki pōyiruppōm. Ākavē uṭalnala ārōkkiyattai pēṇa vēṇṭum eṉṟāl kīḻkkūṟiya paṭṭiyalil irukkum tīya āvalkaḷai tavirkka vēṇṭum.



புகைபிடித்தல்
பிறந்த நாளையோ அல்லது வெற்றியையோ கொண்டாட வேண்டுமானால், அப்போது சிகரெட் பிடிக்காமல் கொண்டாடுவது நல்லது. ஏனெனில் புகைப்பிடிப்பதால் அல்லது அந்த இடத்தை புகை மண்டலமாக மாற்றுவதால், உங்கள் உடல்நலமும் மற்றவர்களின் உடல்நலமும் வெகுவாக பாதிப்படையும். அதிலும் இரத்தம் உறைந்து வேகமான இரத்த ஓட்டத்திற்கு தடையாக இருக்கும். இந்த இரத்த உறைவு, தினமும் ஒரு சிகரெட் பிடிப்பதன் விளைவாக கூட ஏற்படலாம். அப்படி இரத்தத்தில் உறைவு ஏற்படும் போது, இரத்தக் குழாய்களிலும் உறைவு ஏற்பட்டு, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்.

Pukaipiṭittal
Piṟanta nāḷaiyō allatu veṟṟiyaiyō koṇṭāṭa vēṇṭumāṉāl, appōtu cikareṭ piṭikkāmal koṇṭāṭuvatu nallatu. Ēṉeṉil pukaippiṭippatāl allatu anta iṭattai pukai maṇṭalamāka māṟṟuvatāl, uṅkaḷ uṭalnalamum maṟṟavarkaḷiṉ uṭalnalamum vekuvāka pātippaṭaiyum. Atilum irattam uṟaintu vēkamāṉa iratta ōṭṭattiṟku taṭaiyāka irukkum. Inta iratta uṟaivu, tiṉamum oru cikareṭ piṭippataṉ viḷaivāka kūṭa ēṟpaṭalām. Appaṭi irattattil uṟaivu ēṟpaṭum pōtu, irattak kuḻāykaḷilum uṟaivu ēṟpaṭṭu, uyirukkē āpattai ēṟpaṭuttum.



பெண் பித்து பிடித்தவராக இருப்பது
உடலுறவு கொள்வது ஆனந்தத்தை கொடுத்து, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதுவே பல பெண்களுடன் உறவு வைத்துக் கொள்வது ஒருவித போதையை தருவதோடு, நாளடைவில் மருத்துவமனையில் சேர்க்கும் நிலைக்கு கொண்டு செல்லும். ஆகவே உடலுறவு வைத்துக் கொள்ளலாம். ஆனால் அதை நம்பும் ஒருவரிடம் மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் எதுவும் பாலுணர்வு நோய் அண்டாமல் இருப்பதற்கு, போதிய பாதுகாப்பை பயன்படுத்தி மேற்கொள்ள வேண்டும்.

Peṇ pittu piṭittavarāka iruppatu
Uṭaluṟavu koḷvatu āṉantattai koṭuttu, uṭalai ārōkkiyamāka vaittirukkum. Ituvē pala peṇkaḷuṭaṉ uṟavu vaittuk koḷvatu oruvita pōtaiyai taruvatōṭu, nāḷaṭaivil maruttuvamaṉaiyil cērkkum nilaikku koṇṭu cellum. Ākavē uṭaluṟavu vaittuk koḷḷalām. Āṉāl atai nampum oruvariṭam maṭṭum vaittuk koḷḷa vēṇṭum. Mēlum etuvum pāluṇarvu nōy aṇṭāmal iruppataṟku, pōtiya pātukāppai payaṉpaṭutti mēṟkoḷḷa vēṇṭum.




பற்களை சுத்தப்படுத்தாமல் தூங்கச் செல்வது
கடினமான நாளின் முடிவில் அனைவரும் செய்யும் பொதுவான ஒன்று தான் இது. இரவு உணவை முடித்தவுடன், நம்மில் பலர் உடனே தூங்கச் செல்வோம். ஆனால் இந்த பழக்கத்தை தவிர்க்க வேண்டும். ஏனெனில் தூங்கச் செல்லும் முன் பற்களை துலக்காமல் இருந்தால், பற்களில் பாக்டீரியா வளர்ச்சியடையும். இதனால் ஈறுகளில் தொற்று ஏற்பட்டு, பற்கள் சொத்தையாகிவிடும்.

Paṟkaḷai cuttappaṭuttāmal tūṅkac celvatu
Kaṭiṉamāṉa nāḷiṉ muṭivil aṉaivarum ceyyum potuvāṉa oṉṟu tāṉ itu. Iravu uṇavai muṭittavuṭaṉ, nam'mil palar uṭaṉē tūṅkac celvōm. Āṉāl inta paḻakkattai tavirkka vēṇṭum. Ēṉeṉil tūṅkac cellum muṉ paṟkaḷai tulakkāmal iruntāl, paṟkaḷil pākṭīriyā vaḷarcciyaṭaiyum. Itaṉāl īṟukaḷil toṟṟu ēṟpaṭṭu, paṟkaḷ cottaiyākiviṭum.



சருமத்தை அடிக்கடி தொட்டுப் பார்ப்பது
தோற்றம் அனைவரையும் கவர வேண்டும் என்று பலரும் நினைப்பதுண்டு. அதன் விளைவாக சிறு இடைவேளையில் அடிக்கடி முகத்தை தடவி பார்த்துக் கொள்ளும் வழக்கம் ஏற்படுவதுண்டு. ஆனால் முகத்தில் முகப்பரு இருந்தால், அதனை திரும்பத் திரும்ப கிள்ள வேண்டாம். ஏனெனில் திரும்பத் திரும்ப இப்படி முகத்தை தொடுவதால், சருமமானது பாதிப்புக்குள்ளாகும்.

Carumattai aṭikkaṭi toṭṭup pārppatu
Tōṟṟam aṉaivaraiyum kavara vēṇṭum eṉṟu palarum niṉaippatuṇṭu. Ataṉ viḷaivāka ciṟu iṭaivēḷaiyil aṭikkaṭi mukattai taṭavi pārttuk koḷḷum vaḻakkam ēṟpaṭuvatuṇṭu. Āṉāl mukattil mukapparu iruntāl, ataṉai tirumpat tirumpa kiḷḷa vēṇṭām. Ēṉeṉil tirumpat tirumpa ippaṭi mukattai toṭuvatāl, carumamāṉatu pātippukkuḷḷākum.



அளவுக்கு மீறி குடிப்பழக்கத்திற்கு உள்ளாவது
அளவுக்கு அதிகமாக மதுவை குடிப்பதால், உலகம் முழுவதும் பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும், இறந்தும் போகின்றனர் என்று டாக்டர் விஹாங் கூறியுள்ளார். மேலும் அளவுக்கு அதிகமாக குடிப்பதால், ஈரலில் தொந்தரவு, உடல் எடை அதிகரித்தல், மயக்கம் மற்றும் சோர்வு போன்ற நீண்ட கால உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். ஆகவே இந்த பிரச்சனைகளில் இருந்து காத்துக் கொள்ள வேண்டுமானால், எதையும் அளவோடு வைத்துக் கொள்ள வேண்டும்.

Aḷavukku mīṟi kuṭippaḻakkattiṟku uḷḷāvatu
Aḷavukku atikamāka matuvai kuṭippatāl, ulakam muḻuvatum palar maruttuvamaṉaiyil cērkkappaṭṭum, iṟantum pōkiṉṟaṉar eṉṟu ṭākṭar vihāṅ kūṟiyuḷḷār. Mēlum aḷavukku atikamāka kuṭippatāl, īralil tontaravu, uṭal eṭai atikarittal, mayakkam maṟṟum cōrvu pōṉṟa nīṇṭa kāla uṭalnala piraccaṉaikaḷ ēṟpaṭum. Ākavē inta piraccaṉaikaḷil iruntu kāttuk koḷḷa vēṇṭumāṉāl, etaiyum aḷavōṭu vaittuk koḷḷa vēṇṭum.




ஆரோக்கியமில்லாத ஜங்க் உணவை உட்கொள்வது
வாரத்திற்கு ஒரு முறை ஜங்க் உணவை சாப்பிடுவதால், இடுப்பளவு அதிகரிக்கப் போவதில்லை. ஆனால் இதையே தினமும் சாப்பிடுவதை பழக்கமாக வைத்திருந்தால், அது உடல்நலத்தை கண்டிப்பாக பாதிக்கும். இவ்வகை உணவுகளில் அளவுக்கு அதிகமாக கொழுப்பு, சர்க்கரை, காரம் மற்றும் செயற்கைப் பொருட்கள் உள்ளதால், அது உடலுக்கு கேடு விளைவிக்கும். மேலும் பாஸ்ட் ஃபுட்டில் அதிகமான அளவில் கெட்டக் கொழுப்புக்கள் நிறைந்துள்ளதால், இதை சாப்பிட உடலில் கெட்ட கொழுப்பானது அதிகரித்து, இரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி இரத்த ஓட்டத்தை பாதிக்கும்.

Ārōkkiyamillāta jaṅk uṇavai uṭkoḷvatu
Vārattiṟku oru muṟai jaṅk uṇavai cāppiṭuvatāl, iṭuppaḷavu atikarikkap pōvatillai. Āṉāl itaiyē tiṉamum cāppiṭuvatai paḻakkamāka vaittiruntāl, atu uṭalnalattai kaṇṭippāka pātikkum. Ivvakai uṇavukaḷil aḷavukku atikamāka koḻuppu, carkkarai, kāram maṟṟum ceyaṟkaip poruṭkaḷ uḷḷatāl, atu uṭalukku kēṭu viḷaivikkum. Mēlum pāsṭ ḥpuṭṭil atikamāṉa aḷavil keṭṭak koḻuppukkaḷ niṟaintuḷḷatāl, itai cāppiṭa uṭalil keṭṭa koḻuppāṉatu atikarittu, irattak kuḻāykaḷil aṭaippai ēṟpaṭutti iratta ōṭṭattai pātikkum.




தொலைக்காட்சியை நண்பனாக்கி கொள்வது
மணிக்கணக்கில் வீட்டு சோபாவில் அமர்ந்து தொலைகாட்சியில் மூழ்கி போவதால், இதயமும் கண்களும் ஆபத்துக்குள்ளாகிறது. குறிப்பாக தொலைக்காட்சியை இடைவிடாமல் பார்ப்பதால், நெஞ்சு வலி, வாதம் மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அதுமட்டுமின்றி, ஒரே இடத்தில் அமர்ந்து மணிக்கணக்கில் தொலைக்காட்சியை பார்ப்பதால், உடலில் உள்ள கொழுப்பு மற்றும் சர்க்கரையின் அளவும் அதிகரித்துவிடும்.
Tolaikkāṭciyai naṇpaṉākki koḷvatu
Maṇikkaṇakkil vīṭṭu cōpāvil amarntu tolaikāṭciyil mūḻki pōvatāl, itayamum kaṇkaḷum āpattukkuḷḷākiṟatu. Kuṟippāka tolaikkāṭciyai iṭaiviṭāmal pārppatāl, neñcu vali, vātam maṟṟum uṭal parumaṉ pōṉṟa piraccaṉaikaḷ ēṟpaṭa vāyppukaḷ uḷḷatu. Atumaṭṭumiṉṟi, orē iṭattil amarntu maṇikkaṇakkil tolaikkāṭciyai pārppatāl, uṭalil uḷḷa koḻuppu maṟṟum carkkaraiyiṉ aḷavum atikarittuviṭum.



இரவில் தாமதமாக தூங்கச் செல்வது
நம்மில் பல பேர் பரீட்சை அல்லது அலுவலக வேலை என்று ஏதாவது ஒரு காரணத்திற்காக, இரவில் நீண்ட நேரம் கண் விழித்து கொண்டிருப்போம். ஆனால் இதுவே தினசரி பழக்கமானால், காலப்போக்கில் உடலானது பாதிக்கப்படும். அதிலும் தினசரி 6-8 மணிநேரம் தூங்கவில்லை என்றால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, உடலின் மற்ற செயல்முறையும் பாதிக்கப்பட்டுவிடும். உடலில் நோய் எதிர்ப்பு திறன் குறைவதால், கிருமிகளை எதிர்க்கும் சக்தியும் குறைந்து, அடிக்கடி நோய்வாய்ப்பட வேண்டியிருக்கும்.

Iravil tāmatamāka tūṅkac celvatu
Nam'mil pala pēr parīṭcai allatu aluvalaka vēlai eṉṟu ētāvatu oru kāraṇattiṟkāka, iravil nīṇṭa nēram kaṇ viḻittu koṇṭiruppōm. Āṉāl ituvē tiṉacari paḻakkamāṉāl, kālappōkkil uṭalāṉatu pātikkappaṭum. Atilum tiṉacari 6-8 maṇinēram tūṅkavillai eṉṟāl, uṭaliṉ nōy etirppu cakti kuṟaintu, uṭaliṉ maṟṟa ceyalmuṟaiyum pātikkappaṭṭuviṭum. Uṭalil nōy etirppu tiṟaṉ kuṟaivatāl, kirumikaḷai etirkkum caktiyum kuṟaintu, aṭikkaṭi nōyvāyppaṭa vēṇṭiyirukkum.



எப்போதும் இசை
இசை என்பது பல பேருக்கு நாள் முழுவதும் கூடவே வரும் தோழனாவான். பயணம் செய்யும் போதோ அல்லது வேலை செய்யும் போதோ, நேரத்தை போக்குவதற்கு, இசையை கேட்பதுண்டு. ஆனால் மணிக்கணக்கில் இடைவேளையே இல்லாமல், இசையை ஒலிக்கச் செய்திருந்தால், இதனை கண்டிப்பாக கட்டுப்படுத்த வேண்டும்.
Eppōtum icai
Icai eṉpatu pala pērukku nāḷ muḻuvatum kūṭavē varum tōḻaṉāvāṉ. Payaṇam ceyyum pōtō allatu vēlai ceyyum pōtō, nērattai pōkkuvataṟku, icaiyai kēṭpatuṇṭu. Āṉāl maṇikkaṇakkil iṭaivēḷaiyē illāmal, icaiyai olikkac ceytiruntāl, itaṉai kaṇṭippāka kaṭṭuppaṭutta vēṇṭum.



உயரமான ஹீல்ஸ்
செருப்பை விரும்பும் பெண்கள் தினமும் உயர்ந்த ஹீல்ஸ் உள்ள செருப்பை அணியும் பெண்களுக்கு உடலில் பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. இது அவர்களின் தோரணையை பாதித்து, மூட்டுகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும். அதனால் கீல்வாதம், முதுகு வலி, தசைகளில் காயங்கள் மற்றும் விபத்துகளையும் கூட ஏற்படுத்தும்.
Uyaramāṉa hīls
Ceruppai virumpum peṇkaḷ tiṉamum uyarnta hīls uḷḷa ceruppai aṇiyum peṇkaḷukku uṭalil piraccaṉaikaḷ ēṟpaṭuvatuṇṭu. Itu avarkaḷiṉ tōraṇaiyai pātittu, mūṭṭukaḷil aḻuttattai ēṟpaṭuttum. Ataṉāl kīlvātam, mutuku vali, tacaikaḷil kāyaṅkaḷ maṟṟum vipattukaḷaiyum kūṭa ēṟpaṭuttum.



உணவை நண்பனாக்கி கொள்வது
நிறைய பேர் சாப்பாட்டின் மேல், அளவுக் கடந்த ஈடுபாட்டுடன் இருப்பார்கள். இப்படி ஈர்க்கப்பட்டு, இஷ்டத்திற்கு சாப்பிட்டால், சீராக சாப்பிடும் முறையில் பிரச்சனைகள் ஏற்படும். அதனால் பசி எடுப்பதை உணர முடியாமல் போகும். இதனால் வயிறு நிறைந்த போதும் அதிகமாக சாப்பிடக்கூடும். இப்படி அதிகமாக உண்ணும் உணவு, உடலில் கெட்டக் கொழுப்பாக தேங்கிவிடும். மேலும் இது உடலில் உள்ள கலோரிகளை அதிகரித்து சர்க்கரை நோய், இதய பிரச்சனைகள் மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சனைகளையும் உண்டாக்கும்.

Uṇavai naṇpaṉākki koḷvatu
Niṟaiya pēr cāppāṭṭiṉ mēl, aḷavuk kaṭanta īṭupāṭṭuṭaṉ iruppārkaḷ. Ippaṭi īrkkappaṭṭu, iṣṭattiṟku cāppiṭṭāl, cīrāka cāppiṭum muṟaiyil piraccaṉaikaḷ ēṟpaṭum. Ataṉāl paci eṭuppatai uṇara muṭiyāmal pōkum. Itaṉāl vayiṟu niṟainta pōtum atikamāka cāppiṭakkūṭum. Ippaṭi atikamāka uṇṇum uṇavu, uṭalil keṭṭak koḻuppāka tēṅkiviṭum. Mēlum itu uṭalil uḷḷa kalōrikaḷai atikarittu carkkarai nōy, itaya piraccaṉaikaḷ maṟṟum aciṭiṭṭi pōṉṟa piraccaṉaikaḷaiyum uṇṭākkum.



மாத்திரை உண்ணும் பழக்கம்
எப்போதும் வரும் தலை வலி, மாதவிடாய் அல்லது வயிற்று பிரச்சனைகளுக்கு மாத்திரைகளை சாப்பிடுகிறீர்களா? முதலில் அதை நிறுத்த வேண்டும். எதற்கெடுத்தாலும் மாத்திரை சாப்பிடுவது என்பது மிகவும் ஆபத்தான பழக்கமாகும். அது உடல்நலத்தை வெகுவாக பாதிக்கும். எனவே எந்த மாத்திரை சாப்பிடுவதாக இருந்தாலும், மருத்துவரின் ஆலோசனையை கண்டிப்பாக பெற்று, பின்னரே அவைகளை சாப்பிட வேண்டும்.

Māttirai uṇṇum paḻakkam
Eppōtum varum talai vali, mātaviṭāy allatu vayiṟṟu piraccaṉaikaḷukku māttiraikaḷai cāppiṭukiṟīrkaḷā? Mutalil atai niṟutta vēṇṭum. Etaṟkeṭuttālum māttirai cāppiṭuvatu eṉpatu mikavum āpattāṉa paḻakkamākum. Atu uṭalnalattai vekuvāka pātikkum. Eṉavē enta māttirai cāppiṭuvatāka iruntālum, maruttuvariṉ ālōcaṉaiyai kaṇṭippāka peṟṟu, piṉṉarē avaikaḷai cāppiṭa vēṇṭum.



காலை உணவை தவிர்ப்பது
காலை உணவு என்பது அந்த நாளில் நாம் உண்ணும் முக்கியமான உணவாகும். ஒரு கப் காபி மற்றும் சிறு ரொட்டி துண்டுடன் காலை உணவு முடிந்துவிட்டதா? அப்படியானால் ஆரோக்கியமில்லாத எதிர்காலத்திற்கு விதை போடுகிறீர்கள் என்று அர்த்தம். அதுவும் காலை உணவை சரியான அளவில் உண்ணவில்லை என்றால், செரிமான அமைப்பு பாதிக்கப்பட்டுவிடும். இது உடலின் ஆற்றல் மற்றும் மெட்டபாலிசத்தையும் பாதிக்கும்.

Kālai uṇavai tavirppatu
Kālai uṇavu eṉpatu anta nāḷil nām uṇṇum mukkiyamāṉa uṇavākum. Oru kap kāpi maṟṟum ciṟu roṭṭi tuṇṭuṭaṉ kālai uṇavu muṭintuviṭṭatā? Appaṭiyāṉāl ārōkkiyamillāta etirkālattiṟku vitai pōṭukiṟīrkaḷ eṉṟu arttam. Atuvum kālai uṇavai cariyāṉa aḷavil uṇṇavillai eṉṟāl, cerimāṉa amaippu pātikkappaṭṭuviṭum. Itu uṭaliṉ āṟṟal maṟṟum meṭṭapālicattaiyum pātikkum.



உடற்பயிற்சியை தவிர்ப்பது
தினமும் செய்யக்கூடிய உடற்பயிற்சி அட்டவணையில் இருந்து சிறிது ஓய்வு எடுப்பது தவறில்லை. ஆனால் தொடர்ச்சியாக அதற்கு ஓய்வு கொடுப்பது தான் தவறு. அதுவும் உண்மையிலேயே முக்கிய காரணங்கள் இருந்தால் மட்டுமே தவிர, மற்ற எந்த காரணங்களுக்காகவும் உடற்பயிற்சியில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டாம்.

Uṭaṟpayiṟciyai tavirppatu
Tiṉamum ceyyakkūṭiya uṭaṟpayiṟci aṭṭavaṇaiyil iruntu ciṟitu ōyvu eṭuppatu tavaṟillai. Āṉāl toṭarcciyāka ataṟku ōyvu koṭuppatu tāṉ tavaṟu. Atuvum uṇmaiyilēyē mukkiya kāraṇaṅkaḷ iruntāl maṭṭumē tavira, maṟṟa enta kāraṇaṅkaḷukkākavum uṭaṟpayiṟciyil īṭupaṭuvatai tavirkka vēṇṭām.



இனிப்புகளுக்கு அடிமையாவது
இனிப்புகளுக்காக ஏங்குபவர்கள், தினமும் அதிக அளவில் இனிப்புகளை சாப்பிடுவார்கள். இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவானது அதிக அளவில் உயரும். இதனால் உடலில் இன்சுலினை அதிகமாக சுரக்கச் செய்து, பசியை அதிகரிக்கும். அதனால் எப்போதாவது மட்டும் இனிப்பு உண்ணும் பழக்கத்தை கொண்டு வர வேண்டும்.

Iṉippukaḷukku aṭimaiyāvatu
Iṉippukaḷukkāka ēṅkupavarkaḷ, tiṉamum atika aḷavil iṉippukaḷai cāppiṭuvārkaḷ. Itaṉāl irattattil uḷḷa carkkaraiyiṉ aḷavāṉatu atika aḷavil uyarum. Itaṉāl uṭalil iṉculiṉai atikamāka curakkac ceytu, paciyai atikarikkum. Ataṉāl eppōtāvatu maṭṭum iṉippu uṇṇum paḻakkattai koṇṭu vara vēṇṭum.



தனிமையில் இருப்பது
இந்த உலகத்தை விட்டு விலகி தனிமையில் இருக்க சிலர் விரும்புவார்கள். அதனால் எந்த ஒரு பிணைப்புமின்றி, தனிமையிலேயே இருப்பார்கள். தனிமை என்பது நம் மனதிற்கு நல்லதல்ல. அது உடலின் நோய் எதிர்ப்பு திறனை குறைத்து, உடல் நலத்தை பாதிக்கும்.

Taṉimaiyil iruppatu
Inta ulakattai viṭṭu vilaki taṉimaiyil irukka cilar virumpuvārkaḷ. Ataṉāl enta oru piṇaippumiṉṟi, taṉimaiyilēyē iruppārkaḷ. Taṉimai eṉpatu nam maṉatiṟku nallatalla. Atu uṭaliṉ nōy etirppu tiṟaṉai kuṟaittu, uṭal nalattai pātikkum.



அதிகமாக காபி அருந்துவது
கூடுதலாக குடிக்கும் ஒவ்வொரு கப் காபியும், உடலுக்கு பல வகையான உடல்நல கோளாறுகளை ஏற்படுத்தும். மேலும் காபியில் இருக்கும் நுரை போன்றவைகள் உடலின் கலோரிகளை அதிகரிக்கும்.

Atikamāka kāpi aruntuvatu
Kūṭutalāka kuṭikkum ovvoru kap kāpiyum, uṭalukku pala vakaiyāṉa uṭalnala kōḷāṟukaḷai ēṟpaṭuttum. Mēlum kāpiyil irukkum nurai pōṉṟavaikaḷ uṭaliṉ kalōrikaḷai atikarikkum.



வேகமாக உண்ணுதல்
வீட்டு டைனிங் டேபிளில் பல உணவு வகைகளை காணும் போது, அவை அனைத்தையும் சுவைத்துப் பார்க்க வேக வேகமாக சாப்பிடுவோம். இப்படி சாப்பிடுவதால் செரிமான அமைப்பு பாதிப்படையும். ஆகவே உப்புசம் மற்றும் அசிடிட்டி போன்றவற்றை தவிர்க்க, சீரான முறையில் எவ்வளவு முடியுமோ அதனை மட்டும் சாப்பிடுவது நல்லது.

Vēkamāka uṇṇutal
Vīṭṭu ṭaiṉiṅ ṭēpiḷil pala uṇavu vakaikaḷai kāṇum pōtu, avai aṉaittaiyum cuvaittup pārkka vēka vēkamāka cāppiṭuvōm. Ippaṭi cāppiṭuvatāl cerimāṉa amaippu pātippaṭaiyum. Ākavē uppucam maṟṟum aciṭiṭṭi pōṉṟavaṟṟai tavirkka, cīrāṉa muṟaiyil evvaḷavu muṭiyumō ataṉai maṭṭum cāppiṭuvatu nallatu.



இறைச்சி
இறைச்சி என்பது சுவைமிக்க உணவாகும். அதனை வைத்து நூற்றுக்கும் மேற்பட்ட உணவு வகைகளை தயாரிக்கலாம். ஆனால் பன்றிக்கறி போன்ற சிவப்பு இறைச்சிகளை அடிக்கடி சாப்பிட வேண்டாம். ஏனெனில் பன்றி இறைச்சியில் கொழுப்பு அதிகமாக இருப்பதால், அது இதயகுழலிய நோய் மற்றும் பெருங்குடல், மலக்குடலுக்குரிய புற்றுநோயை உண்டாக்கும்
Iṟaicci
Iṟaicci eṉpatu cuvaimikka uṇavākum. Ataṉai vaittu nūṟṟukkum mēṟpaṭṭa uṇavu vakaikaḷai tayārikkalām. Āṉāl paṉṟikkaṟi pōṉṟa civappu iṟaiccikaḷai aṭikkaṭi cāppiṭa vēṇṭām. Ēṉeṉil paṉṟi iṟaicciyil koḻuppu atikamāka iruppatāl, atu itayakuḻaliya nōy maṟṟum peruṅkuṭal, malakkuṭalukkuriya puṟṟunōyai uṇṭākkum.



தினசரி எடையை சரிபார்ப்பது
எடையை குறைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் தினமும் எடையை சரிபார்க்க முற்படுவீர்கள். தினமும் எடையை பார்ப்பதால், மனரீதியாக அதிகமாக சாப்பிட தோன்றாது. அதனால் தேவையான உணவை உண்டு, சிறிது இடைவேளையில் எடையை சரிபாருங்கள்.
Tiṉacari eṭaiyai caripārppatu
Eṭaiyai kuṟaikka muyaṟci ceytu koṇṭirukkiṟīrkaḷā? Appaṭiyāṉāl tiṉamum eṭaiyai caripārkka muṟpaṭuvīrkaḷ. Tiṉamum eṭaiyai pārppatāl, maṉarītiyāka atikamāka cāppiṭa tōṉṟātu. Ataṉāl tēvaiyāṉa uṇavai uṇṭu, ciṟitu iṭaivēḷaiyil eṭaiyai caripāruṅkaḷ.



English summary
20 temptations to avoid for good health Temptations are of different kind. Alcohol, Smoking are some examples for bad temptations. Here is the list of some temptaions which should be avoided for a healthy life because they are creating serious problems for your health.


English Source: http://articles.timesofindia.indiatimes.com/2013-07-08/health/40232234_1_good-health-temptation-binge


Share your comments here -> http://Friendstamil.cbox.ws

Thanks




Wednesday, 17 July 2013

ரொம்ப நேரம் தூங்குறவங்களா நீங்க? - Side effects of oversleeping


ரொம்ப நேரம் தூங்குறவங்களா நீங்க? - Side effects of oversleeping
Rompa nēram tūṅkuṟavaṅkaḷā nīṅka?

அனைவருக்கும் தூங்குவதென்றால் ரொம்ப பிடிக்கும். அதிலும் நாள் முழுவதும் உடம்பு நோக வேலை பார்த்த பின், மெத்தைக்குள் நுழைந்து இழுத்து போர்த்தி தூங்குவதற்கு யாருக்குத் தான் பிடிக்காது? நாம் அனைவரும் அன்றாடம் தவறாமல் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான பழக்கங்களுள் ஒன்று தான் தூக்கம். அத்தகைய தூக்கத்தை மேற்கொண்டால், அது உடல்நல ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
Aṉaivarukkum tūṅkuvateṉṟāl rompa piṭikkum. Atilum nāḷ muḻuvatum uṭampu nōka vēlai pārtta piṉ, mettaikkuḷ nuḻaintu iḻuttu pōrtti tūṅkuvataṟku yārukkut tāṉ piṭikkātu? Nām aṉaivarum aṉṟāṭam tavaṟāmal mēṟkoḷḷa vēṇṭiya mukkiyamāṉa paḻakkaṅkaḷuḷ oṉṟu tāṉ tūkkam. Attakaiya tūkkattai mēṟkoṇṭāl, atu uṭalnala ārōkkiyattiṟku mikavum nallatu.

அதுவும் போதிய நேரம் தூங்குவதற்கு தான் நம்மை பலரும் அறிவுறுத்துகின்றனர். போதிய தூக்கம் இல்லையென்றால் ஒருவருக்கு பல வகையில் உடல்நல கோளாறுகள் ஏற்படும். இதை பலரும் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். அதனால் தான் இன்சோம்னியா எனப்படும் தூக்கமின்மையை குணப்படுத்த பல வகையான சிகிச்சைகள், மருந்துகள் மற்றும் பாட்டி வைத்தியங்களை கையாளுகின்றனர்.
Atuvum pōtiya nēram tūṅkuvataṟku tāṉ nam'mai palarum aṟivuṟuttukiṉṟaṉar. Pōtiya tūkkam illaiyeṉṟāl oruvarukku pala vakaiyil uṭalnala kōḷāṟukaḷ ēṟpaṭum. Itai palarum colli kēḷvippaṭṭiruppōm. Ataṉāl tāṉ iṉcōmṉiyā eṉappaṭum tūkkamiṉmaiyai kuṇappaṭutta pala vakaiyāṉa cikiccaikaḷ, maruntukaḷ maṟṟum pāṭṭi vaittiyaṅkaḷai kaiyāḷukiṉṟaṉar.

ஆனால் இதற்கு எதிர்மறையாக நடந்தால் என்ன செய்வது? என்ன புரியவில்லையா? அதிக நேரம் தூங்குவதால் என்ன ஆகும் என்று உங்களுக்கு தெரியுமா? கேட்டால், சொகுசாக, சந்தோஷமாக இருக்கும் என்று பலர் சொல்வார்கள். ஏன் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படுமா என்றும் கேட்கலாம்? கண்டிப்பாக கேட்க வேண்டும். ஏனெனில், நீண்ட நேரம் தூங்குவதால் கண்டிப்பாக பிரச்சனைகள் ஏற்படும். அப்படி ஏற்படும் சில பிரச்சனைகளை கீழே பார்க்கலாம். அதுமட்டுமின்றி, அத்தகைய பழக்கத்தை தவிர்ப்பதற்கான சில வழிகளையும் பார்ப்போம்.
Āṉāl itaṟku etirmaṟaiyāka naṭantāl eṉṉa ceyvatu? Eṉṉa puriyavillaiyā? Atika nēram tūṅkuvatāl eṉṉa ākum eṉṟu uṅkaḷukku teriyumā? Kēṭṭāl, cokucāka, cantōṣamāka irukkum eṉṟu palar colvārkaḷ. Ēṉ ētēṉum piraccaṉaikaḷ ēṟpaṭumā eṉṟum kēṭkalām? Kaṇṭippāka kēṭka vēṇṭum. Ēṉeṉil, nīṇṭa nēram tūṅkuvatāl kaṇṭippāka piraccaṉaikaḷ ēṟpaṭum. Appaṭi ēṟpaṭum cila piraccaṉaikaḷai kīḻē pārkkalām. Atumaṭṭumiṉṟi, attakaiya paḻakkattai tavirppataṟkāṉa cila vaḻikaḷaiyum pārppōm.


சர்க்கரை நோய்
தினமும் இரவு அதிக நேரம் தூங்குவதால் அல்லது போதிய தூக்கம் கிடைக்காவிட்டால், சர்க்கரை நோயின் அளவு அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
Carkkarai nōy 
Tiṉamum iravu atika nēram tūṅkuvatāl allatu pōtiya tūkkam kiṭaikkāviṭṭāl, carkkarai nōyiṉ aḷavu atikarikka vāyppukaḷ atikam eṉṟu āyvukaḷ kūṟukiṉṟaṉa.


உடல் பருமன்
அதிக நேரம் தூங்குவதால் உடல் எடையானது அதிகரிக்க பல வாய்ப்புகள் உள்ளது. தினமும் 7-8 மணி நேரம் தூங்குபவர்களை விட, 9-10 மணி நேரம் தூங்குபவர்களில், ஆறு வருட காலத்தில் 21% மக்களின் எடை அதிகரிக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று கூறியுள்ளது.
Uṭal parumaṉ 
Atika nēram tūṅkuvatāl uṭal eṭaiyāṉatu atikarikka pala vāyppukaḷ uḷḷatu. Tiṉamum 7-8 maṇi nēram tūṅkupavarkaḷai viṭa, 9-10 maṇi nēram tūṅkupavarkaḷil, āṟu varuṭa kālattil 21% makkaḷiṉ eṭai atikarikkum eṉṟu camīpattiya āyvu oṉṟu kūṟiyuḷḷatu.



தலைவலி
அடிக்கடி தலைவலி வரும் நபர்கள், வார இறுதி அல்லது விடுமுறைகளில் அதிக நேரம் தூங்க முற்பட்டால், அதனால் தலை வலி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதிகமாக தூங்குவதால் ஏற்படும் பக்கவிளைவு மூளைகளில் உள்ள நரம்புக்கடத்தியை பாதிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இதில் செரோடோனினும் அடங்கும்.
Talaivali 
Aṭikkaṭi talaivali varum naparkaḷ, vāra iṟuti allatu viṭumuṟaikaḷil atika nēram tūṅka muṟpaṭṭāl, ataṉāl talai vali ēṟpaṭum vāyppu uḷḷatu. Atikamāka tūṅkuvatāl ēṟpaṭum pakkaviḷaivu mūḷaikaḷil uḷḷa narampukkaṭattiyai pātikkum eṉṟu ārāycciyāḷarkaḷ kūṟukiṟārkaḷ. Itil cerōṭōṉiṉum aṭaṅkum.



முதுகு வலி
முன்பெல்லாம் முதுகு வலி என்று மருத்துவர்களிடம் சென்றால், படுக்கையில் நேராக படுக்க அறிவுறுத்துவார்கள். ஆனால் அதையும் தாண்டி அதிகமாக தூங்குவதாலும் முதுகு வலி ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். அதனால் முதுகு வலி உள்ளவர்களை அதிக நேரம் தூங்க வேண்டாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
Mutuku vali 
Muṉpellām mutuku vali eṉṟu maruttuvarkaḷiṭam ceṉṟāl, paṭukkaiyil nērāka paṭukka aṟivuṟuttuvārkaḷ. Āṉāl ataiyum tāṇṭi atikamāka tūṅkuvatālum mutuku vali ēṟpaṭukiṟatu eṉṟu maruttuvarkaḷ purintu koṇṭuḷḷārkaḷ. Ataṉāl mutuku vali uḷḷavarkaḷai atika nēram tūṅka vēṇṭām eṉṟu maruttuvarkaḷ parinturaikkiṟārkaḷ.


மன அழுத்தம்
அதிகமாக தூங்குவதை விட, தூக்கமின்மை தான் மன அழுத்தத்துடன் அதிக தொடர்பில் இருந்தாலும், மன அழுத்தம் உள்ளவர்களில் தோராயமாக 15% நபர்கள் அதிகமாக தூங்குகிறார்கள். இதனால் மன அழுத்தம் இன்னும் அதிகரிக்கவே செய்யும். ஆகவே எந்த ஒரு நோய்க்கும் போதிய தூக்கம் தான் நிவாரணியாக விளங்கும்.
Maṉa aḻuttam 
Atikamāka tūṅkuvatai viṭa, tūkkamiṉmai tāṉ maṉa aḻuttattuṭaṉ atika toṭarpil iruntālum, maṉa aḻuttam uḷḷavarkaḷil tōrāyamāka 15% naparkaḷ atikamāka tūṅkukiṟārkaḷ. Itaṉāl maṉa aḻuttam iṉṉum atikarikkavē ceyyum. Ākavē enta oru nōykkum pōtiya tūkkam tāṉ nivāraṇiyāka viḷaṅkum.


இதய நோய்
செவிலியர் ஆரோக்கிய ஆய்வு, கிட்டத்தட்ட 72,000 பெண்களை ஆய்வில் பயன்படுத்தியது. அந்த ஆய்வின் படி 38% பெண்கள் தினமும் 11 மணி நேரம் தூங்குகிறார்கள் என்றும், தினமும் 8 மணி நேரம் தூங்கும் பெண்களை வி,ட இவர்களுக்கு தான் இதய நோய்கள் தாக்குவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்றும் கூறுகிறது.

Itaya nōy 
Ceviliyar ārōkkiya āyvu, kiṭṭattaṭṭa 72,000 peṇkaḷai āyvil payaṉpaṭuttiyatu. Anta āyviṉ paṭi 38% peṇkaḷ tiṉamum 11 maṇi nēram tūṅkukiṟārkaḷ eṉṟum, tiṉamum 8 maṇi nēram tūṅkum peṇkaḷai vi,ṭa ivarkaḷukku tāṉ itaya nōykaḷ tākkuvataṟkāṉa vāyppu atikam uḷḷatu eṉṟum kūṟukiṟatu.


மரணம்
தினமும் இரவு ஒன்பது அல்லது அதற்கு மேலாக தூங்குபவர்கள், 7-8 மணி நேரம் தூங்குபவர்களை விட, விரைவிலேயே இறக்கிறார்கள் என்று பல ஆய்வுகள் கூறுகிறது.
Maraṇam 
Tiṉamum iravu oṉpatu allatu ataṟku mēlāka tūṅkupavarkaḷ, 7-8 maṇi nēram tūṅkupavarkaḷai viṭa, viraivilēyē iṟakkiṟārkaḷ eṉṟu pala āyvukaḷ kūṟukiṟatu.



வேகமாக விழித்திட முடிவு செய்யவும்
அதிக நேரம் தூங்க விரும்பினால், அதிக நேரம் படுக்கையில் இருக்க விரும்புகிறோம் என்று அர்த்தம். இதை விட சுலபமாக இதை சொல்ல முடியாது. பல நேரங்களில் அதிக நேரம் தூங்குவது என்பது தப்பிக்கும் வழிமுறையாகும். ஒரு வகையில் நிஜத்தை சந்திக்க தைரியம் இல்லாதவர்கள் கையாளும் வழி தான் இது. ஆகவே அதிக நேரம் தூங்க வேண்டும் என்று ஆசைபட்டால், எமனை சந்திக்க வேண்டியிருக்கும் என்று நினைத்தால், நீண்ட நேர தூக்கத்தில் இருந்து விடுபடலாம்.
Vēkamāka viḻittiṭa muṭivu ceyyavum 
Atika nēram tūṅka virumpiṉāl, atika nēram paṭukkaiyil irukka virumpukiṟōm eṉṟu arttam. Itai viṭa culapamāka itai colla muṭiyātu. Pala nēraṅkaḷil atika nēram tūṅkuvatu eṉpatu tappikkum vaḻimuṟaiyākum. Oru vakaiyil nijattai cantikka tairiyam illātavarkaḷ kaiyāḷum vaḻi tāṉ itu. Ākavē atika nēram tūṅka vēṇṭum eṉṟu ācaipaṭṭāl, emaṉai cantikka vēṇṭiyirukkum eṉṟu niṉaittāl, nīṇṭa nēra tūkkattil iruntu viṭupaṭalām.



அதிக நேரம் தூங்குவதை தடுப்பதில் ஆர்வமூட்டவும்
இந்த ஆர்வத்தை வரவழைக்க பல வழிகள் இருந்தாலும், சுலபமான ஒரு வழியை பார்க்கலாமா... 1. ஏன் அதிக நேரம் தூங்க கூடாது என்பதற்கு ஆணித்தனமான ஒரு காரணத்தை முடிவு செய்யுங்கள். அதில் தெளிவாக இருங்கள். 2. அதனை உறுதியான மற்றும் நேர்மறையான கூற்றாக எழுத வேண்டும். அப்படி எழுதும் போது நிகழ்கால நடையில் எழுத வேண்டும். உதாரணத்திற்கு, "நான் தினமும் உற்சாகத்துடன் காலையில் 7 மணிக்கு எழுந்திருப்பதால், என்னை நினைத்து மிகவும் சந்தோஷமும் பெருமையும் அடைகிறேன்." 3. அதனை எழுதி, அடிக்கடி வாசித்தும் திரும்ப திரும்ப எழுதவும் செய்ய வேண்டும். குறைந்தது படுக்கும் முன் அதனை ஒரு முறை படிப்பது நல்லது.
Atika nēram tūṅkuvatai taṭuppatil ārvamūṭṭavum 
Inta ārvattai varavaḻaikka pala vaḻikaḷ iruntālum, culapamāṉa oru vaḻiyai pārkkalāmā... 1. Ēṉ atika nēram tūṅka kūṭātu eṉpataṟku āṇittaṉamāṉa oru kāraṇattai muṭivu ceyyuṅkaḷ. Atil teḷivāka iruṅkaḷ. 2. Ataṉai uṟutiyāṉa maṟṟum nērmaṟaiyāṉa kūṟṟāka eḻuta vēṇṭum. Appaṭi eḻutum pōtu nikaḻkāla naṭaiyil eḻuta vēṇṭum. Utāraṇattiṟku, "nāṉ tiṉamum uṟcākattuṭaṉ kālaiyil 7 maṇikku eḻuntiruppatāl, eṉṉai niṉaittu mikavum cantōṣamum perumaiyum aṭaikiṟēṉ." 3. Ataṉai eḻuti, aṭikkaṭi vācittum tirumpa tirumpa eḻutavum ceyya vēṇṭum. Kuṟaintatu paṭukkum muṉ ataṉai oru muṟai paṭippatu nallatu.





தூக்கத்தை பற்றிய அபிப்பிராயத்தை மாற்றவும்
தூக்கம் என்பது வாழ்வதற்காக மட்டும் தான் என்ற எண்ணம் எப்போதும் மனதில் ஓட வேண்டும். முக்கியமாக சுகத்திற்காக தான் தூக்கம் என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும்.
Tūkkattai paṟṟiya apippirāyattai māṟṟavum 
Tūkkam eṉpatu vāḻvataṟkāka maṭṭum tāṉ eṉṟa eṇṇam eppōtum maṉatil ōṭa vēṇṭum. Mukkiyamāka cukattiṟkāka tāṉ tūkkam eṉṟa eṇṇattai māṟṟa vēṇṭum.



ஒரே நேரத்தை எப்போதும் கடைபிடிக்கவும்
தினமும் ஒரே நேரத்தில் தூங்கவும், விழிக்கவும் தயார் படுத்திக் கொள்ள வேண்டும். எவ்வளவு நேரம் தூங்கினாலும், குறைந்தது ஒரே நேரத்தில் எழுந்திருக்கவாவது முயற்சி செய்ய வேண்டும்.
Orē nērattai eppōtum kaṭaipiṭikkavum 
Tiṉamum orē nērattil tūṅkavum, viḻikkavum tayār paṭuttik koḷḷa vēṇṭum. Evvaḷavu nēram tūṅkiṉālum, kuṟaintatu orē nērattil eḻuntirukkavāvatu muyaṟci ceyya vēṇṭum.



நன்றாக தூங்கவும்
நல்ல தரமுள்ள ஆழ்ந்த தூக்கத்தை பெறுவதற்கு பல எளிய முறைகள் உள்ளன. அப்படி தூங்குவதால், உடலுக்கு தேவையான ஆற்றலானது கிடைத்து விடும். அதற்கு குறைந்தது நாம் செய்ய வேண்டியவை: - ஒரே மாதிரியான தூக்க ஒழுங்கு முறையை பின்பற்ற வேண்டும். - மதிய நேரத்தில் காஃப்பைன் உள்ள உணவை தவிர்க்கவும். - இரவு நேரத்தில் புகையிலை மற்றும் மதுபானங்களை தவிர்க்கவும். - கண்களை சூரிய ஒளியில் குறைந்தது 2 மணி நேரமாவது வெளிக்காட்ட வேண்டும்.
Naṉṟāka tūṅkavum 
Nalla taramuḷḷa āḻnta tūkkattai peṟuvataṟku pala eḷiya muṟaikaḷ uḷḷaṉa. Appaṭi tūṅkuvatāl, uṭalukku tēvaiyāṉa āṟṟalāṉatu kiṭaittu viṭum. Ataṟku kuṟaintatu nām ceyya vēṇṭiyavai: - Orē mātiriyāṉa tūkka oḻuṅku muṟaiyai piṉpaṟṟa vēṇṭum. - Matiya nērattil kāḥppaiṉ uḷḷa uṇavai tavirkkavum. - Iravu nērattil pukaiyilai maṟṟum matupāṉaṅkaḷai tavirkkavum. - Kaṇkaḷai cūriya oḷiyil kuṟaintatu 2 maṇi nēramāvatu veḷikkāṭṭa vēṇṭum.




படிப்படியாக அதிக தூக்கத்தை குறைக்கவும்
ஒரு வாரத்தில் 30-60 நிமிட தூக்கத்தை குறைக்க வேண்டும். முதலில் அது கஷ்டமாக தான் இருக்கும். மேலும் இந்த புதிய தூக்க ஒழுங்கு முறையுடன் ஒத்துப்போவதற்கு 7-10 நாட்கள் ஆகும். முக்கியமாக இதில் குறிப்பிட்ட அளவையே கடைபிடிக்க வேண்டும். அதிகமாக தூக்கத்தை தொலைக்க வேண்டாம். தினமும் இரவு 6-8 மணி நேரங்கள் தூங்க வேண்டும். இதுப்போக தினமும் 20-40 நிமிடங்கள் வரை குட்டி தூக்கமும் போடலாம்.
Paṭippaṭiyāka atika tūkkattai kuṟaikkavum 
Oru vārattil 30-60 nimiṭa tūkkattai kuṟaikka vēṇṭum. Mutalil atu kaṣṭamāka tāṉ irukkum. Mēlum inta putiya tūkka oḻuṅku muṟaiyuṭaṉ ottuppōvataṟku 7-10 nāṭkaḷ ākum. Mukkiyamāka itil kuṟippiṭṭa aḷavaiyē kaṭaipiṭikka vēṇṭum. Atikamāka tūkkattai tolaikka vēṇṭām. Tiṉamum iravu 6-8 maṇi nēraṅkaḷ tūṅka vēṇṭum. Ituppōka tiṉamum 20-40 nimiṭaṅkaḷ varai kuṭṭi tūkkamum pōṭalām.

English Source:

http://www.healthguidance.org/entry/15581/1/Oversleeping-Side-Effects.html
Share your comments here -> http://Friendstamil.cbox.ws

Thanks