Flash News

Friends Tamil Chat

Search This Blog

Showing posts with label ஆரோக்கியம். Show all posts
Showing posts with label ஆரோக்கியம். Show all posts

Monday, 22 June 2015

தடை செய்யப்பட்டுள்ள இந்திய உணவுப் பொருட்கள்

வெளிநாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள இந்திய உணவுப் பொருட்கள்

மேகி தடை செய்யப்பட்டதில் இருந்து, கடந்த ஒரு மாத காலமாக உணவிப் பொருட்கள் தடை குறித்தும், உணவுப் பொருட்களின் தரம் குறித்தும் பல செய்திகள் தினமும் வெளிவந்த வண்ணமாக உள்ளன. நெஸ்ட்லேவின் பால் பவுடர் மற்றும் காம்ப்ளேனில் நெளிந்த புழு, பூச்சிகளும், இதே சமயத்தில் கோவை நகரில் எழுந்தது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதே போல, கடந்த வாரம் இந்திய உணவுப் பொருட்களில் கலக்கப்படும் இரசாயனங்கள் மனிதர்கள் சாப்பிட உகந்தது அல்ல என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக துறையான எப்.டி.ஏ ஓர் அறிக்கையை வெளியிட்டு மற்றுமொரு பரபரப்பை ஏற்படுத்தியது.

இப்போது, நாம் யாரும் அறிந்திடாத, வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட, இந்தியாவில் பிரபலமாக விளம்பரப்படுத்தி விற்கப்படும் உணவுப் பொருட்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன...

ஷியாவன்பிராஷ் (Chyawanprash) 
உடல் சத்தை அதிகரிக்க உதவும் உணவென இந்தியாவில் பிரபலமாக விற்கப்படும் பொருளான ஷியாவன்பிராஷ் (Chyawanprash) எனும் உணவை கடந்த 2005 ஆண்டு கனடா நாட்டு அரசாங்கம் தடை செய்ததாம். இந்த உணவில் அதிகமான லேட் மற்றும் எம்எஸ்.ஜி. இருந்தது தான் இதற்கான காரணம் என்றும் இதனால் உடல்நலத்திற்கு பதிப்பு ஏற்படும் என்றும் கனடா அரசு கூறியுள்ளது.



பெயரற்ற சிறுதீனி உணவுப் பொருள் 
கடந்த 2015 பிப்ரவரி மாதம், இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் இருந்து தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்து சரியான பெயரிடப்படாத சிறுதீனி உணவுப் பொருளில் நிறைய கலப்படமும், தரமற்ற உட்பொருட்களும் கொண்டு தயாரிக்கப்பட்டிருந்தது என்று காரணம் கூறி தடை செய்யப்பட்டது.

ஹல்திரம்ஸ் 
இந்தியாவின் முன்னணி சிறுதீனி மற்றும் இனிப்பு வகை உணவுத் தயாரிப்பு நிறுவனமான "ஹல்திராம்ஸ்", மனிதர்கள் உண்ண தகுந்தது அல்ல என அமெரிக்க உணவு நிர்வாகம் தடைவிதித்தது.


நெய் பொருட்கள் 
நெய் இன்றி இந்திய உணவு சாத்தியமற்றது. ஆனால், அமெரிக்காவில் இது மிகவும் பிடித்ததாக தெரியவில்லை. ஆதலால், அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம், கடந்த பிப்ரவரி மாதம் நெய் மற்றும் வெண்ணெய் எண்ணெய் பொருட்களின் ஏற்றுமதிக்கு தடைவிதித்தது. உணவுப் பொருள் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து உட்பொருளின் உள்ளடக்கமும் கவரில் அச்சடிக்கப்படவில்லை என்பதே இதற்கான காரணமாக கூறப்படுகிறது. இதே போன்று சீனாவின் Heinz' எனும் பால் பொருள் தயாரிப்பு பொருட்களையும் எப்.டி.ஏ தடை செய்தது என்பது குறிபிடத்தக்கது.


மேகி 
இந்தியாவில் மேகி தடைசெய்யப்பட சில நாட்களிலேயே, நமது அண்டை நாடுகளிலும், அமெரிக்காவிலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மேகி உணவுப் பொருள்களை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டது.



Thanks
For More Articles Visit @ http://NanbanTamil.blogspot.com


உடல் எடையை குறைக்க உதவும் சிறந்த இரவு நேர உணவுகள்

உடல் எடையை குறைக்க உதவும் சிறந்த இரவு நேர உணவுகள்


எந்த டயட் பின்பற்றியும் உடல் எடை குறையவில்லையா? அல்லது டயட்டை பின்பற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? பெரும்பாலும் இரண்டாவது கேள்வி தான் உடல் எடை குறையாமல் இருப்பதற்கான காரணங்கள். உண்மையில் காலையும், மதியமும் வஞ்சனை இன்றி உங்கள் உடல் உழைப்பிற்கு ஏற்ப சாப்பிடலாம், தவறே இல்லை.

ஏனெனில், காலை மற்றும் மதியம் சாப்பிட்ட பிறகு கண்டிப்பாக நீங்கள் வெறுமென இருக்க போவதில்லை, ஏதேனும் வேலைகள் செய்துக் கொண்டுதான் இருப்பீர்கள். ஆனால், இரவு நேரத்தில், சத்தான, கலோரிகள் குறைவான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம். முக்கியமாக எண்ணெய் உணவுகள் மற்றும் கொழுப்பு அதிகமான உணவுகளை அறவே ஒதுக்க வேண்டும்...

இனி, உடல் எடையை குறைக்க உதவும் சிறந்த இரவு நேர உணவுகளை பற்றி பார்க்கலாம்...

1. வாழைப்பழம் (Yes)
நம்மில் நிறை பேர் இரவு உணவை முடித்துவிட்டு ஓரிரு வாழைப்பழத்தை சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருப்போம். ஆனால், இரவு ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழம் மட்டும் சாப்பிட்டு வந்தால் உங்கள் உடல் எடையில் நல்ல மாற்றம் காணலாம். மற்றும் உங்கள் உடலுக்கு தேவையான கலோரிகள் மொத்தமும் அந்த ஓர் வாழைப்பழத்திலேயே இருக்கிறது என்பது நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயமாகும்.


2. ஓட்ஸ் உணவு (Yes)
ஓட்ஸ் உணவு கொழுப்புச்சத்து இல்லாத ஓர் சிறந்த உணவு. இது, உடல் எடையை குறைக்க சீரிய முறையில் உதவும். அரை கப் ஓட்ஸ் உணவு போதுமானது.


3. தானிய உணவுகள் (Yes)
தானிய உணவுகளை வேகவைத்து சிறிதளவு உப்பு மட்டும் சேர்த்து சாப்பிட்டு வந்தாலே, உங்கள் உடல் எடையில் நல்ல மாற்றத்தை காண இயலும்.

3. முட்டை (Yes)
இரவு நேரத்தில் இரண்டு அல்லது மூன்று வேக வைத்த முட்டைகள் சாப்பிடலாம். வெள்ளை கரு மட்டும். வயிறு நிறையாவிட்டாலும், உடலுக்கு தேவையான சத்துகள் மொத்தமும் இதில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


4. கொழுப்பு நீக்கப்பட்ட பால் (Yes)
இரவு ஓர் டம்ளர் கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடித்து வந்தால் ஓர் மாதத்திற்குள் உங்கள் உடல் எடையில் நல்ல மாற்றத்தை காண இயலும்.


5. நொறுக்கு தீனிகள் (No)
உடல் எடை குறைக்க நினைப்பவர்கள், அறவே மறக்க வேண்டிய உணவுகள் என்றால் அது நொறுக்கு தீனிகள் தான். இதனால் தான் பெரும்பாலானவர்களின் டயட் சீர்குலைந்து போகிறது.


6. கடின உணவுகள் (No)
இரவு நேரத்தில்... முழு சாப்பாடு, அதிகப்படியான உணவுகளை தவிர்க்க வேண்டியது அவசியம். இது உங்கள் உடல் எடையை மிக விரைவாக அதிகரிக்க செய்யும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.




7. மது (No)
இரவு நேரத்தில் மது அருந்துவது தான் உடல் எடை அதிகரிக்க முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, இரவு நேரத்தில் மது அருந்துவதை முற்றிலுமாக தவிர்த்துவிடுங்கள்.


8. காபி (No)
சிலருக்கு காபி இல்லாத இரவும், பகலும் சாத்தியமற்றது. ஆனால், உண்மையில் இரவும் சரி, அதிகாலையும் சரி காபி குடிப்பது சரியான முறையல்ல. எனவே, முக்கியமாக இரவு தூங்கும் முன்பு காபியை பருக வேண்டாம். இரவு காபிக் குடிப்பதால், உங்களால் காலையில் விரைவாக எழ முடியாது.

Thanks
For More Articles Visit @ http://NanbanTamil.blogspot.com



Wednesday, 17 June 2015

காய்கறி, பழங்களில் பூச்சிக்கொல்லி அடிப்பதனால் ஏற்படும் அபாயங்கள்

முன்பெல்லாம் இயற்கையான முறையில் பயிரிட்டு விவசாயம் செய்து நல்ல ஆரோக்கியமான உணவுப் பொருள்கள் தயாரிக்கப்பட்டது. ஆனால், இன்றைய அறிவியல் உலகம், வர்த்தக லாபத்திற்காக உணவுப் பொருளின் நிறம், அளவு போன்றவற்றை மேம்படுத்த, பளபளப்பாகவும், கெட்டுப்போகமலும் இருப்பதற்காக நிறைய இரசாயனங்களும், பூச்சிக்கொல்லிகளும் பயன்படுத்துகின்றனர்.

இதன் காரணத்தினால், நமக்கே தெரியாது நமது உடலில் நாள்பட, நாள்பட நிறைய எதிர்மறை மாற்றங்களும், உடல்நலக் குறைவும், நோய் பாதிப்புகளும் ஏற்படுகின்றன. இது, அவரவர் வயதிற்கு ஏற்ப உடல்நலத்தில் தாக்கங்கள் ஏற்படுத்துகிறது. குழந்தைகள் தான் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர் என்பது தான் வேதனையை ஏற்படுத்தும் செய்தி.

இனி, காய்கறி, பழங்களில் பூச்சிக்கொல்லி அடிப்பதனால் ஏற்படும் அபாய விளைவுகள் குறித்துப் பார்க்கலாம்...


1. குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் 
பல ஆய்வுகளின் முடிவுகளில், பூச்சிக்கொல்லி பயன்படுத்தித் தயாரிக்கும் காய்கறிகளை உண்ணும் குழந்தைகளுக்கு, அவர்களது உடலின் உள் பாகங்களின் வளர்ச்சியில் குறைபாடு ஏற்படுகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.



2. ஊட்டச்சத்து குறைபாடு 
முக்கியமாக, பூச்சிக்கொல்லி அடிக்கப்படும் உணவுப் பொருள்களில் ஊட்டச்சத்துகள் மிகவும் குறைந்து இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கு சிறு சிறு குறைபாடுகள் நிறைய ஏற்படுகிறது.


3. முக்கியமாக பார்வை 
முன்பெல்லாம், அறுவது, எழுவது வயதை தாண்டினால் தான் கண் பார்வை குறைபாடு ஏற்படும். ஆனால், இன்றோ ஐந்து வயது, பத்து வயது குழந்தைகளே போதிய ஊட்டச்சத்து இன்றி பார்வைக் குறைபாடினால் பாதிக்கப்படுகின்றனர்.


4. கர்ப்பிணி பெண்கள் 
பூச்சிக்கொல்லி அடிக்கப்பட்டு தயாரிக்கப்படும், பாதுகாக்கப்படும் உணவுகளை கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டு வந்தால், அது கருவை பாதிக்கும் என்றும். இதனால், கருவில் வளரும் குழந்தைக்கு குறைபாடுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.


5. நினைவாற்றலை பாதிக்கும் 
தொடர்ந்து நெடுங்காலமாக பூச்சிக்கொல்லி அடிக்கப்பட்ட உணவுப் பொருள்களை உட்கொண்டு வந்தால், நினைவாற்றல் குறைபாடு, மூளையின் செயல்திறன் குறைபாடு, மூளையில் சேதம் ஏற்படுதல் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.



6. அதிகமாக பூச்சிக்கொல்லி அடிக்கபப்டும் உணவுப் பொருள்கள் 
கீரை வகைகள், உருளைக்கிழங்கு, கேரட், வெள்ளரிகள், பச்சை பீன்ஸ், காலிபிளவர், தக்காளி, சர்க்கரைவள்ளி, கத்திரிக்காய், ப்ராக்கோலி, காளான் மற்றும் குளிர்காலத்தில் ஸ்குவாஷ் போன்ற அன்றாடம் பயன்படுத்தும் உணவுகளில் தான் அதிகம் பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்படுகிறது.


7. ஆர்கானிக் காய்கறிகள் 
பூச்சிக்கொல்லிகள் அடிக்கப்படாத ஆர்கானிக் காய்கறிகள் தான் உங்கள் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. முக்கியமாக குழந்தைகளுக்கு. எனவே, முடிந்த வரை காய்கறிகள் வாங்கும் போது, உழவர் சந்தை போன்ற இடங்களில் சென்று வாங்குங்கள். கண்ணாடி சுவர்களுக்குள் விற்கப்படும் பெரும்பாலான காய்கறிகள் பல நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க, கூடுதலாக பதப்படுத்தி வைக்க இரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது.


8. வீட்டு தோட்டம் 
இதில் இருந்து தப்பிக்க, ஒரே வழி வீட்டு தோட்டம் தான். எனவே, உங்கள் ஊரில் இருக்கும் விவசாய நலன் அலுவலகம் / வேளாண் அலுவலகம் சென்று வீட்டின் வெளியில் அல்லது மொட்டை மாடியில் எளிதாக வீட்டுத் தோட்டம் அமைப்பது என கேட்டு அறிந்துக் கொள்ளுங்கள்.

For More Articles Visit >> http://FriendsTamil.cbox.ws





உடல் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வளிக்கும் உப்பு


அளவுக்கு அதிகமாக உப்பு சேர்க்கப்படும் போது, இரத்தக் கொதிப்பு ஏற்படலாம். ஆனால் உங்கள் பற்களை வெண்மையாக்கவும் செரிமானத்திற்கு கைகொடுக்கவும் உப்பு உதவுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? அடுத்த தடவை ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால், உடனே மருந்தை நாடி செல்லாதீர்கள்.

மாறாக சமையலறை சென்று உப்பை எடுங்கள். சிறந்த ஆரோக்கியம், சருமம் மற்றும் கூந்தலுக்கு உப்பை பயன்படுத்துங்கள். சரி, இப்போது எதற்கெல்லாம் உப்பு பயன்படுகிறது என்பதை பார்க்கலாமா?


1. வாய் அல்சர்கள் 
அரை டீஸ்பூன் உப்பை எடுத்து அல்சர் ஏற்பட்டுள்ள பகுதியில் தடவவும். எச்சரிக்கையாக இருங்கள்! அது கடுமையாக கடுக்கலாம். சில நிமிடம் அழுத்தி பிடித்துக் கொள்ளுங்கள். பின் சாதாரண நீரில் வாயை கொப்பளித்துக் கொள்ளுங்கள். இதனை தினமும் காலையில் பல் துலக்குவதற்கு முன் செய்திடவும்


2. தொண்டை புண் 
கரகரப்பான தொண்டையை ஆற்ற வேண்டுமானால் உப்பு தண்ணீரில் (1 டீஸ்பூன் உப்பு சேர்க்கப்பட்ட 1 கிளாஸ் தண்ணீரில்) வாயை கொப்பளிக்கவும். பல் வலி, மூக்கடிச் சதை வளர்ச்சி மற்றும் அடிநாக்குச் சதை வளர்ச்சியினால் ஏற்படும் வலிகளுக்கும் கூட இது நிவாரணம் அளிக்கும்.



3. செரிமானம் 
செரிமாமின்மை பிரச்சனையால் அவதிப்பட்டு வரும் போது, சிறிதளவு கல் உப்பு மற்றும் புதினா இலை சேர்க்கப்பட்ட லஸ்ஸியை குடியுங்கள்.


4. உடல் ஸ்க்ரப் 
1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயில் 5 டீஸ்பூன் உப்புத் தூளை கலந்து கொள்ளவும். அதனுடன் அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து, அந்த கலவையை உடல் முழுவதும் தேய்த்துக் கொள்ளுங்கள். சில நிமிடங்கள் மென்மையாக தேய்க்கவும். 10 நிமிடங்களுக்கு பிறகு குளித்திடவும்.


5. பொடுகு 
1-2 டீஸ்பூன் உப்பை எடுத்து உங்கள் தலைச்சருமத்தில் போடவும். ஈரமான விரல் நுனிகளை கொண்டு மென்மையாக மசாஜ் செய்யுங்கள். இப்போது உங்கள் முடியை மென்மையான ஷாம்பூவை கொண்டு அலசுங்கள். இதனை மாதம் ஒரு முறை பின்பற்றினால், பொடுகு நீங்கி, முடி பொழிவடையும்.


6. தீக்காயங்கள் 
தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உப்பை போட்டு, 5 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடுங்கள். பின் நீரில் அதனை கழுவிடுங்கள்.


7. தசைப்பிடிப்பு 
1 லிட்டர் தண்ணீரில் 2-3 டீஸ்பூன் சர்க்கரை, 1/2 டீஸ்பூன் உப்பு மற்றும் எலுமிச்சை ஜூஸை கலந்து கொள்ளுங்கள். இதனை தினமும் ஒரு வேலை குடித்து வந்தால் தசைப் பிடிப்புகள் நீங்கும்.



8. வீக்கமடைந்த பாதங்கள் 
ஒரு கை உப்பை சட்டியில் போட்டு சுட வைக்கவும். அதனை ஒரு துணியில் போட்டு கட்டவும். இந்த உப்பு மூட்டையை பாதங்களின் மீது 20 நிமிடங்களுக்கு தடவவும். (இந்த மூட்டையை மீண்டும் சுட வைத்து பயன்படுத்தலாம்).


9. கீல்வாத வலி 
வெதுவெதுப்பான உப்புத் தண்ணீரில் (கைநிறைய உப்பு சேர்க்கப்பட்ட ஒரு லிட்டர் தண்ணீரில்) சிறிது நேரம் உங்கள் பாதங்களை ஊற வைத்தால் கீல்வாத வலி சற்று குறையும். வெதுவெதுப்பான உப்புத் தண்ணீரில் (கைநிறைய உப்பு சேர்க்கப்பட்ட ஒரு லிட்டர் தண்ணீரில்) சிறிது நேரம் உங்கள் பாதங்களை ஊற வைத்தால் கீல்வாத வலி சற்று குறையும்.


10. உள்ளுக்குள் வளரும் நகங்கள் 
ஒரு வாளி வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் உப்படி சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் பாதங்களை அதில் 15 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும். பின் காய விடுங்கள். இப்போது நக வெட்டியை கொண்டு அந்த நகங்களை வெட்டி எறியுங்கள்.


11. கண்கட்டி 
2 டீஸ்பூன் உப்பை ஒரு சட்டியில் போட்டு சுட வைக்கவும். அதனை ஒரு மென்மையான துணியில் போட்டு மூட்டு கட்டவும். இதனை கண்கட்டியின் மீது தடவவும். இதே போல் உப்பு தண்ணீரை கண்களின் மீது தெளித்தாலும் நல்ல பலனை தரும்.


12. காய்ச்சல் 
உப்பு கலந்துள்ள குளிர்ந்த நீரில் மென்மையான துணி ஒன்றை முக்கிடவும். இந்த துணியை உங்கள் நெற்றில் விரித்து வைத்தால், காய்ச்சலை எதிர்த்து அது போராடும். உடனடி நிவாரணத்திற்கு இதனை தொடர்ந்து செய்யுங்கள்.


13. நகத்தை பளிச்சிட வைக்க 
உப்பு, பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை ஜூஸை கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை கொண்டு உங்கள் நகங்களின் மீது மென்மையாக மசாஜ் செய்யுங்கள். மென்மையான மற்றும் வெண்மையான நகங்களை பெற இதனை வாரம் ஒரு முறை செய்திடவும்.


For More Articles Visit >> http://NanbanTamil.blogspot.com




Tuesday, 9 June 2015

இரவில் ஏற்படும் மூக்கடைப்பு - எளிய வைத்தியங்கள்

இரவில் ஏற்படும் மூக்கடைப்பிற்கான சில எளிய வைத்தியங்கள்

மூக்கடைப்பானது நாசிக் குழி வீக்கமடைந்து, சளி அதிகம் சேரும் போது, மூக்கில் அடைப்பு ஏற்படும். இறுதியில் சுவாசிக்க சிரமத்தை ஏற்படுத்தும். பெரும்பாலும் முகத்தில் சளி அதிகம் இருப்பவர்களுக்கு மூக்கடைப்பு இரவு நேரத்திலும், மிகவும் குளிர்ச்சியான காலநிலையின் போதும் ஏற்படும்.

இரவில் படுக்கும் போது மூக்கடைப்பு ஏற்பட்டால், அதனால் நிம்மதியான தூக்கத்தை மேற்கொள்ள முடியாது. அதுமட்டுமின்றி, கடுமையான காது வலியையும் ஏற்படுத்தும். ஆகவே மூக்கடைப்பு ஏற்படும் போது உடனே அதற்கு சிகிச்சை எடுக்க வேண்டும்.

அதிலும் நம் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே சிகிச்சை அளிக்கலாம். சரி, இப்போது மூக்கடைப்பில் இருந்து விடுபடுவதற்கான சில எளிய இயற்கை வைத்தியங்களைப் பற்றி பார்ப்போம்.

பூண்டு 
ஒரு கப் தண்ணீரில் 2-3 பூண்டு பற்களைப் போட்டு, அத்துடன் 1-1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து, சில நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், முகத்தில் தேங்கியுள்ள சளி இளகி வெளியேறி, மூக்கடைப்பில் இருந்து நிவாரணம் அளிக்கும்.


ஆப்பிள் சீடர் வினிகர் 
ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் 2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து ஒரு நாளைக்கு 2-3 முறை என சில நாட்கள் பின்பற்றி வர வேண்டும்.


யூகலிப்டஸ் ஆயில் 
கைக்குட்டையில் 2-3 துணிகள் யூகலிப்டஸ் ஆயிலை ஊற்றி, அதனை சுவாசித்துக் கொண்டிருந்தால், மூக்கடைப்பில் இருந்து நிவாரணம் கிடைக்கும். வேண்டுமெனில் இந்த ஆயிலை தலையணையில் சிறிது தெளித்துக் கொள்வதும் நல்ல நிவாரணத்தைத் தரும்.

வெதுவெதுப்பான தண்ணீர் 
வெதுவெதுப்பான நீரில் நனைத்து துணியை நன்கு பிழிந்து, முகத்தின் மேல் 10-15 நிமிடம் வைக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு பலமுறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மூலிகை டீ 
சாதாரண டீ செய்து குடிப்பதற்கு பதிலாக, தினமும் புதினா, இஞ்சி, ஏலக்காய், துளசி போன்றவற்றை சேர்த்து டீ தயாரித்து குடித்து வந்தால், மூக்கடைப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

மிளகு 
சிறிது மிளகுத் தூளை நல்லெண்ணெய் சேர்த்து கலந்து, அதனை மூக்கைச் சுற்றி தடவி, மூச்சை உள்ளிழுக்க வேண்டும். அத்தருணத்தில் தும்மல் வரக்கூடும். இருப்பினும் இந்த செயலை தொடர்ந்து செய்து வந்தால், சளி வெளியேறி, மூக்கடைப்பு ஏற்படுவது தடுக்கப்படும்.

வெந்தயம் 
1 டம்ளர் தண்ணீரில் 1-2 டீஸ்பூன் வெந்தய பொடியை சேர்த்து கலந்து, கொதிக்க வைத்து, வடிகட்டி தினமும் 2-3 முறை குடித்து வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

--
Thanks 
For More Articles visit

ஈறுகளில் இரத்தம் கசிவு - தடுக்கும் வழிகள்

ஈறுகளில் இரத்தம் கசிகிறதா? இதோ அதைத் தடுக்க சில இயற்கை வைத்தியங்கள்

"உன் சிரிப்புக்கு கோடி ரூபாயை கொட்டலாம்" என என்றாவது உங்களை யாராவது புகழ்ந்துள்ளார்களா? இல்லை உங்கள் துணியை நீங்கள் பார்த்த முதல் பார்வையிலேயே உங்கள் புன்னகையால் வசீகரித்துள்ளீர்களா? அப்படியானால் அழகான உங்கள் புன்னகையை பாதுகாத்திட உங்கள் பற்களை பாதுகாப்பாக வைத்திடுங்கள். முத்துக்கள் போன்ற உங்கள் பற்களை பாதுகாக்கும் சிப்பி தான் உங்கள் ஈறு.

எந்த வகையான தொற்றுக்களிடம் இருந்தும் உங்கள் பற்களை காப்பது அது தான். அதனால் உங்கள் ஈறுகளுக்கு எந்த விதமான பாக்டீரியா தாக்குதலும் ஏற்படாமல் பாதுகாத்திட வேண்டும். எந்த மாதிரியான ஈறு பிரச்சனைகள் ஏற்படலாம்? பல் ஈறு அழற்சி, புழைகள் போன்ற பல பிரச்சனைகள் இருக்கிறது. உங்கள் ஈறுகளை ஈறு அழற்சியில் இருந்து எப்படி பாதுகாப்பாக வைத்திருப்பது என்பதைப் பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம்.

முதலில் பல் ஈறு அழற்சி என்றால் என்னவென்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இது ஒரு மிதமான ஈறு பிரச்சனையே. ஆனால் ஆரம்ப கட்டத்திலேயே இதனை சரியாக கவனிக்க தவறி விட்டால், நாளடைவில் இது பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும். ஈறு அழற்சியால் உங்கள் ஈறு பாதிக்கப்பட்டுள்ளது என்பது எப்படி நமக்கு தெரிய வரும்? உங்களுக்கு தெரிய வர வாய்ப்பில்லை. ஆனால் சிவத்தல், எரிச்சல் அல்லது சுவாச துர்நாற்றம் இருந்தால் இந்த பிரச்சனை இருக்கக்கூடும்.

இவ்வகையான பிரச்சனை ஏன் ஏற்படுகிறது? புகைப்பிடிக்கும் பழக்கம், மது அருந்தும் பழக்கம், பற்களை ஒழுக்காக துலக்காமல் போவது போன்ற காரணங்களால் உங்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படலாம். இந்த அழற்சியை குறைக்க சந்தையில் பல பொருட்கள் கிடைக்கிறது. ஆனாலும் கூட வீட்டு சிகிச்சை தான் இதற்கு சிறந்த தீர்வாகும். இதோ உங்களுக்காக சில டிப்ஸ்:


உப்பு 
உங்களுக்கு பல் ஈறு அழற்சி இருந்தால், நீங்கள் பயன்படுத்தும் வீட்டு சிகிச்சையில் இந்த எளிய பொருளுக்கு முக்கிய இடமுண்டு. ½ டீஸ்பூன் உப்பை தண்ணீரில் கலந்து, காலையிலும் மாலையிலும் உங்கள் வாயை கழுவவும். உப்பில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பி குணங்கள், ஈறு வீக்கத்தை குறைக்கும்.


ஆயில் புல்லிங் 
ஏற்கனவே சொன்னதைப் போல், பல் ஈறு அழற்சிக்கு வீட்டு சிகிச்சைகளே சிறந்த நிவாரணத்தை அளிக்கும். ஈறு அழற்சியை குணப்படுத்தும் எந்த ஒரு டிப்ஸாக இருந்தாலும் சரி, பாரம்பரிய மிக்க இந்த ஆயுர்வேத சிகிச்சையைப் பற்றி குறிப்பிடாமல் இருக்காது. நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யை எடுத்து வாயில் போட்டு கொப்பளிக்கவும். பின் வெதுவெதுப்பான நீரில் வாயை கழுவவும். இதனை சீரான முறையில் பின்பற்றி வந்தால் தொல்லை இருக்காது.


மஞ்சள் 
ஈறு அழற்சிக்கான வீட்டு சிகிச்சைகளில் மிக பயனுள்ள டிப்ஸில் ஒன்றாக விளங்குகிறது மஞ்சள். மஞ்சளில் கர்குமின் என்ற பொருள் உள்ளது. இது ஈறு வலி, வீக்கம் மற்றும் எரிச்சலை சிறப்பான முறையில் குறைக்கும். மஞ்சளை வைட்டமின் ஈ எண்ணெயுடன் கலந்து கொள்ளுங்கள். இதனை உங்கள் ஈறுகளின் மீது தடவவும். 15 நிமிடங்கள் கழித்து வாயை வெதுவெதுப்பான நீரில் கழுவிக் கொள்ளவும்.

பேக்கிங் சோடா 
பேக்கிங் சோடாவை வெதுவெதுப்பான நீருடன் கலந்து பேஸ்ட் ஒன்றை தயார் செய்து கொள்ளுங்கள். அதனை உங்கள் ஈறுகளின் மீது தடவி, 2 நிமிடங்கள் கழித்து கழுவி விடுங்கள். இதனை வாரத்திற்கு 2-3 முறையாவது பயன்படுத்துங்கள். இதனால் பேக்கிங் சோடா வாயில் உள்ள அமிலத்தை செயலிழக்க செய்யும். மேலும் பல் பிரச்சனைகள் மற்றும் ஈறு நோய்கள் ஏற்படும் இடர்பாடுகள் குறையும்.


எலுமிச்சை ஜூஸ் 
ஈறு அழற்சிக்கான வீட்டு சிகிச்சை என்றால் அதில் கண்டிப்பாக எலுமிச்சையும் அடங்கியிருக்கும். இதில் வைட்டமின் சி இருப்பதால் தொற்றுகளில் இருந்து அது உங்களை பாதுகாக்கும். எலுமிச்சை சாற்றை தண்ணீருடன் கலந்து, பல் துலக்கிய பின், அதைக் கொண்டு வாயை கழுவுங்கள். ஈறுகளில் இரத்த கசிவு மற்றும் வலி ஆகிய பிரச்சனைகள் முன்பை காட்டிலும் குறையத் தொடங்கி விடும்.


கற்றாழை 
உங்கள் சருமத்திற்கு கற்றாழை அளிக்கும் பயன்களைப் பற்றி நீங்கள் கண்டிப்பாக அறிந்திருப்பீர்கள். இது உங்கள் ஈறுகளுக்கும் நல்லது. கற்றாழையை சாறு எடுத்து, அதனை நேரடியாக தடவுங்கள். பின் குளிர்ந்த நீரைக் கொண்டு 10 நிமிடங்கள் கழித்து கழுவி விடுங்கள்.

கிராம்பு 
கிருமி நாசினி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்களை கொண்டுள்ள கிராம்பும் கூட சிறந்த வீட்டு சிகிச்சையாக விளங்குகிறது. ஈறுகளில் வலியை உணரும் போது 2-3 கிராம்புகளை மெல்லுங்கள். வெதுவெதுப்பான நீருடன் கிராம்பு எண்ணெய்யை கலந்து மவுத் வாஷாகவும் கூட பயன்படுத்தலாம். சிறந்த பலனைப் பெற அதனை தினமும் இரண்டு முறை பயன்படுத்துங்கள்.

கொய்யா இலை 
இது உங்களுக்கு தெரியுமா? ஆச்சரியமாக உள்ளது தானே? ஆம், ரசாயனம் கலந்துள்ள பேஸ்ட்டிற்கு பதிலாக நற்பதமான கொய்யா இலைகளைக் கொண்ட பேஸ்ட்டை பயன்படுத்தினால் நொடிப்பொழுதில் ஈறு அழற்சிகள் ஓடியே போய் விடும். முயற்சி செய்து பாருங்கள்.

டீ ட்ரீ எண்ணெய் 
இதன் மற்ற பயன்பாடுகள் போக, ஈறு அழற்சியை போக்கவும் இது பெரிதளவில் உதவி செய்கிறது. டீ-ட்ரீ எண்ணெயில் உள்ள அழற்சி எதிர்ப்பி பொருட்கள் ஈறுகளில் ஏற்பட்டுள்ள தொற்று மற்றும் எரிச்சலை குறைக்கும். ஆகவே இதனை முக்கியமான பொருளாக பயன்படுத்தப்பட்டுள்ள டூத் பேஸ்ட்டை பயன்படுத்துங்கள். இல்லையென்றால் நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பேஸ்ட்டில் இதனை சில துளிகள் சேர்த்துக் கொள்ளவும்.

புதினா 
புதினா இலைகளை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து, பல் துலக்கும் முன்பு வாயை கழுவுங்கள். உணவருந்தும் இடைவேளைகளில் புதினா தேநீர் கூட பருகலாம். இது வாய்க்கு நல்ல மணத்தை அளித்து, சுவாச பிரச்சனையைத் தீர்க்கும்.


--
Thanks

For More Articles Visit