Flash News

Friends Tamil Chat

Search This Blog

Wednesday, 17 June 2015

காய்கறி, பழங்களில் பூச்சிக்கொல்லி அடிப்பதனால் ஏற்படும் அபாயங்கள்

முன்பெல்லாம் இயற்கையான முறையில் பயிரிட்டு விவசாயம் செய்து நல்ல ஆரோக்கியமான உணவுப் பொருள்கள் தயாரிக்கப்பட்டது. ஆனால், இன்றைய அறிவியல் உலகம், வர்த்தக லாபத்திற்காக உணவுப் பொருளின் நிறம், அளவு போன்றவற்றை மேம்படுத்த, பளபளப்பாகவும், கெட்டுப்போகமலும் இருப்பதற்காக நிறைய இரசாயனங்களும், பூச்சிக்கொல்லிகளும் பயன்படுத்துகின்றனர்.

இதன் காரணத்தினால், நமக்கே தெரியாது நமது உடலில் நாள்பட, நாள்பட நிறைய எதிர்மறை மாற்றங்களும், உடல்நலக் குறைவும், நோய் பாதிப்புகளும் ஏற்படுகின்றன. இது, அவரவர் வயதிற்கு ஏற்ப உடல்நலத்தில் தாக்கங்கள் ஏற்படுத்துகிறது. குழந்தைகள் தான் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர் என்பது தான் வேதனையை ஏற்படுத்தும் செய்தி.

இனி, காய்கறி, பழங்களில் பூச்சிக்கொல்லி அடிப்பதனால் ஏற்படும் அபாய விளைவுகள் குறித்துப் பார்க்கலாம்...


1. குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் 
பல ஆய்வுகளின் முடிவுகளில், பூச்சிக்கொல்லி பயன்படுத்தித் தயாரிக்கும் காய்கறிகளை உண்ணும் குழந்தைகளுக்கு, அவர்களது உடலின் உள் பாகங்களின் வளர்ச்சியில் குறைபாடு ஏற்படுகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.



2. ஊட்டச்சத்து குறைபாடு 
முக்கியமாக, பூச்சிக்கொல்லி அடிக்கப்படும் உணவுப் பொருள்களில் ஊட்டச்சத்துகள் மிகவும் குறைந்து இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கு சிறு சிறு குறைபாடுகள் நிறைய ஏற்படுகிறது.


3. முக்கியமாக பார்வை 
முன்பெல்லாம், அறுவது, எழுவது வயதை தாண்டினால் தான் கண் பார்வை குறைபாடு ஏற்படும். ஆனால், இன்றோ ஐந்து வயது, பத்து வயது குழந்தைகளே போதிய ஊட்டச்சத்து இன்றி பார்வைக் குறைபாடினால் பாதிக்கப்படுகின்றனர்.


4. கர்ப்பிணி பெண்கள் 
பூச்சிக்கொல்லி அடிக்கப்பட்டு தயாரிக்கப்படும், பாதுகாக்கப்படும் உணவுகளை கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டு வந்தால், அது கருவை பாதிக்கும் என்றும். இதனால், கருவில் வளரும் குழந்தைக்கு குறைபாடுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.


5. நினைவாற்றலை பாதிக்கும் 
தொடர்ந்து நெடுங்காலமாக பூச்சிக்கொல்லி அடிக்கப்பட்ட உணவுப் பொருள்களை உட்கொண்டு வந்தால், நினைவாற்றல் குறைபாடு, மூளையின் செயல்திறன் குறைபாடு, மூளையில் சேதம் ஏற்படுதல் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.



6. அதிகமாக பூச்சிக்கொல்லி அடிக்கபப்டும் உணவுப் பொருள்கள் 
கீரை வகைகள், உருளைக்கிழங்கு, கேரட், வெள்ளரிகள், பச்சை பீன்ஸ், காலிபிளவர், தக்காளி, சர்க்கரைவள்ளி, கத்திரிக்காய், ப்ராக்கோலி, காளான் மற்றும் குளிர்காலத்தில் ஸ்குவாஷ் போன்ற அன்றாடம் பயன்படுத்தும் உணவுகளில் தான் அதிகம் பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்படுகிறது.


7. ஆர்கானிக் காய்கறிகள் 
பூச்சிக்கொல்லிகள் அடிக்கப்படாத ஆர்கானிக் காய்கறிகள் தான் உங்கள் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. முக்கியமாக குழந்தைகளுக்கு. எனவே, முடிந்த வரை காய்கறிகள் வாங்கும் போது, உழவர் சந்தை போன்ற இடங்களில் சென்று வாங்குங்கள். கண்ணாடி சுவர்களுக்குள் விற்கப்படும் பெரும்பாலான காய்கறிகள் பல நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க, கூடுதலாக பதப்படுத்தி வைக்க இரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது.


8. வீட்டு தோட்டம் 
இதில் இருந்து தப்பிக்க, ஒரே வழி வீட்டு தோட்டம் தான். எனவே, உங்கள் ஊரில் இருக்கும் விவசாய நலன் அலுவலகம் / வேளாண் அலுவலகம் சென்று வீட்டின் வெளியில் அல்லது மொட்டை மாடியில் எளிதாக வீட்டுத் தோட்டம் அமைப்பது என கேட்டு அறிந்துக் கொள்ளுங்கள்.

For More Articles Visit >> http://FriendsTamil.cbox.ws





உடல் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வளிக்கும் உப்பு


அளவுக்கு அதிகமாக உப்பு சேர்க்கப்படும் போது, இரத்தக் கொதிப்பு ஏற்படலாம். ஆனால் உங்கள் பற்களை வெண்மையாக்கவும் செரிமானத்திற்கு கைகொடுக்கவும் உப்பு உதவுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? அடுத்த தடவை ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால், உடனே மருந்தை நாடி செல்லாதீர்கள்.

மாறாக சமையலறை சென்று உப்பை எடுங்கள். சிறந்த ஆரோக்கியம், சருமம் மற்றும் கூந்தலுக்கு உப்பை பயன்படுத்துங்கள். சரி, இப்போது எதற்கெல்லாம் உப்பு பயன்படுகிறது என்பதை பார்க்கலாமா?


1. வாய் அல்சர்கள் 
அரை டீஸ்பூன் உப்பை எடுத்து அல்சர் ஏற்பட்டுள்ள பகுதியில் தடவவும். எச்சரிக்கையாக இருங்கள்! அது கடுமையாக கடுக்கலாம். சில நிமிடம் அழுத்தி பிடித்துக் கொள்ளுங்கள். பின் சாதாரண நீரில் வாயை கொப்பளித்துக் கொள்ளுங்கள். இதனை தினமும் காலையில் பல் துலக்குவதற்கு முன் செய்திடவும்


2. தொண்டை புண் 
கரகரப்பான தொண்டையை ஆற்ற வேண்டுமானால் உப்பு தண்ணீரில் (1 டீஸ்பூன் உப்பு சேர்க்கப்பட்ட 1 கிளாஸ் தண்ணீரில்) வாயை கொப்பளிக்கவும். பல் வலி, மூக்கடிச் சதை வளர்ச்சி மற்றும் அடிநாக்குச் சதை வளர்ச்சியினால் ஏற்படும் வலிகளுக்கும் கூட இது நிவாரணம் அளிக்கும்.



3. செரிமானம் 
செரிமாமின்மை பிரச்சனையால் அவதிப்பட்டு வரும் போது, சிறிதளவு கல் உப்பு மற்றும் புதினா இலை சேர்க்கப்பட்ட லஸ்ஸியை குடியுங்கள்.


4. உடல் ஸ்க்ரப் 
1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயில் 5 டீஸ்பூன் உப்புத் தூளை கலந்து கொள்ளவும். அதனுடன் அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து, அந்த கலவையை உடல் முழுவதும் தேய்த்துக் கொள்ளுங்கள். சில நிமிடங்கள் மென்மையாக தேய்க்கவும். 10 நிமிடங்களுக்கு பிறகு குளித்திடவும்.


5. பொடுகு 
1-2 டீஸ்பூன் உப்பை எடுத்து உங்கள் தலைச்சருமத்தில் போடவும். ஈரமான விரல் நுனிகளை கொண்டு மென்மையாக மசாஜ் செய்யுங்கள். இப்போது உங்கள் முடியை மென்மையான ஷாம்பூவை கொண்டு அலசுங்கள். இதனை மாதம் ஒரு முறை பின்பற்றினால், பொடுகு நீங்கி, முடி பொழிவடையும்.


6. தீக்காயங்கள் 
தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உப்பை போட்டு, 5 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடுங்கள். பின் நீரில் அதனை கழுவிடுங்கள்.


7. தசைப்பிடிப்பு 
1 லிட்டர் தண்ணீரில் 2-3 டீஸ்பூன் சர்க்கரை, 1/2 டீஸ்பூன் உப்பு மற்றும் எலுமிச்சை ஜூஸை கலந்து கொள்ளுங்கள். இதனை தினமும் ஒரு வேலை குடித்து வந்தால் தசைப் பிடிப்புகள் நீங்கும்.



8. வீக்கமடைந்த பாதங்கள் 
ஒரு கை உப்பை சட்டியில் போட்டு சுட வைக்கவும். அதனை ஒரு துணியில் போட்டு கட்டவும். இந்த உப்பு மூட்டையை பாதங்களின் மீது 20 நிமிடங்களுக்கு தடவவும். (இந்த மூட்டையை மீண்டும் சுட வைத்து பயன்படுத்தலாம்).


9. கீல்வாத வலி 
வெதுவெதுப்பான உப்புத் தண்ணீரில் (கைநிறைய உப்பு சேர்க்கப்பட்ட ஒரு லிட்டர் தண்ணீரில்) சிறிது நேரம் உங்கள் பாதங்களை ஊற வைத்தால் கீல்வாத வலி சற்று குறையும். வெதுவெதுப்பான உப்புத் தண்ணீரில் (கைநிறைய உப்பு சேர்க்கப்பட்ட ஒரு லிட்டர் தண்ணீரில்) சிறிது நேரம் உங்கள் பாதங்களை ஊற வைத்தால் கீல்வாத வலி சற்று குறையும்.


10. உள்ளுக்குள் வளரும் நகங்கள் 
ஒரு வாளி வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் உப்படி சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் பாதங்களை அதில் 15 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும். பின் காய விடுங்கள். இப்போது நக வெட்டியை கொண்டு அந்த நகங்களை வெட்டி எறியுங்கள்.


11. கண்கட்டி 
2 டீஸ்பூன் உப்பை ஒரு சட்டியில் போட்டு சுட வைக்கவும். அதனை ஒரு மென்மையான துணியில் போட்டு மூட்டு கட்டவும். இதனை கண்கட்டியின் மீது தடவவும். இதே போல் உப்பு தண்ணீரை கண்களின் மீது தெளித்தாலும் நல்ல பலனை தரும்.


12. காய்ச்சல் 
உப்பு கலந்துள்ள குளிர்ந்த நீரில் மென்மையான துணி ஒன்றை முக்கிடவும். இந்த துணியை உங்கள் நெற்றில் விரித்து வைத்தால், காய்ச்சலை எதிர்த்து அது போராடும். உடனடி நிவாரணத்திற்கு இதனை தொடர்ந்து செய்யுங்கள்.


13. நகத்தை பளிச்சிட வைக்க 
உப்பு, பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை ஜூஸை கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை கொண்டு உங்கள் நகங்களின் மீது மென்மையாக மசாஜ் செய்யுங்கள். மென்மையான மற்றும் வெண்மையான நகங்களை பெற இதனை வாரம் ஒரு முறை செய்திடவும்.


For More Articles Visit >> http://NanbanTamil.blogspot.com